அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூன் 29, 2018

எல்லாம் ஒன்றல்ல.. எல்லாம் வேறு வேறுமல்ல...

'பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்'

வள்ளுவனின் வாக்காகிய இந்த வாசகம் எல்லோருக்கும் பொருந்தாது.
சாதாரண வெகுஜன மக்கள் இந்த கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.
ஆனால் அரசாங்கம் திட்டமிடுதலில் இது போன்று ஒப்புமையை காண முடியாது.  சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை துல்லியமாக கணக்கிட்டு இடம், சமூகம், பருவநிலை, நிலஅமைப்பு, கல்வியறிவு என அனைத்தையும் கணக்கிட்டு திட்டங்கள் வகுக்க வேண்டும். அப்போது தான் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும்.

அது சரி, எதோ ஒரு குக்கிராமத்தில் டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து அரசியல் பேசும் முனுசாமியையும், பட்டணத்தில் முகநூலில் இரசிகனாய் சண்டையிடும் அரவிந்தசாமியையும் எப்படி அளப்பது?

சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனத்தில் அனைவரும் சமம் என எழுதிய பின் எழுந்த கேள்வி. பரந்து விரிந்த இந்த இந்தியாவில் சமூக, பொருளாதார காரணிகளை எப்படி அளப்பது? குறை தெரிந்தால் நிரப்பி விடலாம் அல்லவா. ஆனால் குறைவான மக்கள்தொகை உள்ள நாடு அல்லவே. எனவே மதிப்பிடுதல், செயல்படுத்தல் இரண்டும் சீரான வேகத்தில் செல்ல வேண்டும். இல்லையேல் இந்தியா உலக அளவில் ஸ்திரதன்மை இழந்துவிடும். இவற்றை களையவே திட்டக்குழு அமைக்கப்பட்டது. அதற்க்கும் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள் தான்.

முதல் குழுவின் முதல் உறுப்பினர் ஆனார் பிரசண்ட சந்திர மஹலனோபிஸ். அவர் அளித்த 'தரவு ஆய்வு'(Data Analysis) முறை தான் இன்று பல்வேறு இடங்களில் பல்வேறாக பயன்படுகிறது. அந்த முறையை அவர் முதன்முதலில் பயன்படுத்தியது நமது முதல் ஐந்தாண்டு திட்டத்திற்கு தான்.

இன்று அவரது 125வது பிறந்தநாளை பெருமைபடுத்தும் விதமாக கூகுள் டூடுள் வெளியிட்டு அவரை பெருமைபடுத்தியுள்ளது.

ஞாயிறு, ஜூலை 20, 2014

உயிரே... உயிலே...



இம் மெய்யில்
இறைவன் எழுதிய உயிர் எழுத்து...
இரு சுருளில்
எனக்காக எழுதிய உயில் எழுத்து...
அம்மா போல் நிறம்
அப்பா போல் மூக்கு
தாத்தா போல் கோபம்
பாட்டி போல் அறிவு...
என என் பயோடேட்டாவில்
பாதியை அச்சடித்த அமிலம்...
இறக்க போகும் தந்தை எழுதும் உயில் அல்ல இது...
பிறக்க போகும் குழந்தைக்கு எழுதப்படும் உயில் இது...
DNA



எத்தனை முகங்கள், எத்தனை நிறங்கள், எத்தனை குணங்கள்...
எப்படி இவ்வளவு வித்தியாசங்கள்??? இந்த சிறு உடலில்...
ஒரே ஒரு இரு சுருள் டி.என்.ஏ தான் இது எல்லாற்றிற்க்கும் காரணம் என்னும் போது முற்றுப்புள்ளி இடமுடியாத ஆச்சர்யகுறியாய் தான் உள்ளது.
வெறும் 4 எழுத்துக்கள்(நியுக்ளியோடைடு) கொண்டு இவ்வளவு பில்லியன் கவிதைகள்(மக்கள்) எழுதியுள்ளான் அவன்!!!

அடினைன்(A)
சைட்டோசின்(
C)
குவானைன்(G)
தையமின்(T)

இந்த நான்கெழுத்து கவிதை தான் நான் அனைவரும்.
ஒவ்வொரு நியூக்ளியோடைடும் ஒரு முனையில் பாஸ்பேட்டையும், மறுமுனையில் சுகரையும் கொண்டிருக்கும்.
இரு நியூக்ளியோடைடுகள் இணையும் போது சுகர், பாஸ்பேட்டுடனும் : பாஸ்பேட் சுகருடனும் இணைகிறது.
இவ்வாறு தொடர்ச்சியாக இந்த நான்கு நியுக்ளியோடைடுகள் மாறி மாறி இணைவாதல் பலவித அமைப்புகள்(Pattern) தோன்றுகின்றன.

(இடையில் ஜீன், குரோமோசோம் போன்ற வார்த்தைகள் உங்களை இடைமறித்திருக்கலாம். குரோமோசோமின் ஒரு சிறு துண்டு ஜீன், டி.என்.ஏவின் ஒரு சிறு துண்டு குரோமோசோம்)

முக மற்றும் உடல் அமைப்பை புரதங்கள் தான் உருவாக்குகிறது.இந்த புரதங்கள் உருவாகுவதை டி.என்.ஏ தான் தீர்மானிக்கிறது. இந்த டி.என்.ஏ அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு புதிய தலைமுறையிலும் அந்த பண்புகள் அந்த டி.என்.ஏவால் தொடரப்படுகின்றன.


எவ்வாறு கடத்தப்படுகிறது?
‘மியோசிஸ் எனப்படும் நிகழ்ச்சி மூலம் நம் உடலில் உள்ள அனைத்து அசல் டி.என்.ஏக்களும் நகலெடுக்கப்படுகின்றன. இந்த நகல் இனப்பெருக்க செல்லை அடைந்து அடுத்த தலைமுறைக்கு கடப்படுகின்றன.
ஆக புரோட்டினை உருவாக்குவது மட்டுந்தான் டி.என்.ஏவின் வேலை.

புரோட்டினின் வகைகள்:
1) கட்டமைப்பு புரோட்டின் : மூளை முதல் நகம் வரை உருவாக்குவது இதன் பணி
2) கடத்தும் புரோட்டின் : உடலின் பல பகுதிகளுக்கு தேவையான பொருட்களை கடத்துகிறது(எ.கா: ஹிமோகுளோபின்)
3) சேமிப்பு புரோட்டின் : ஆற்றல் மற்றும் உயிர்சத்துக்களை சேமிக்க (எ.கா கல்லீரல்)
4) ஹார்மோன் : நம் உடலில் அனைத்து ஹார்மோங்களும் ஒரு வகையில் புரோட்டிங்களே.

டி.என்.ஏ நான்கு எழுத்து என்பது போல, புரதம் 20 எழுத்துக்கள்(அமினோ அமிலங்கள்).
இந்த 20 அமினோஅமிலங்கள் பல்வேறு முறைகளில் இணைந்து மேற்கண்ட புரோட்டின்களை உருவாக்குகிறது.
புரோட்டினை உருவாக்க பிறப்பிக்கபடும் ஆணையில் டி.என்.ஏவின் ஏதேனும் 3 நீயுக்ளியோடைடுகள் தான் இருக்கும்( ACG, ACT, TTG….) எனவே 4*4*4 என 64 வகையான ஆணைகளை பிறப்பிக்க முடியும்.

ஒரு புரோட்டின் உருவாக்க இது போல்100 முதல் 1000 ஆணைகள் வரை தேவைப்படும். இவ்வாறு 3 எழுத்து ஆணைகள் பல்வேறு வரிசைகளில் அடுக்கப்படும் போது (1000 * 1000 * 1000)^64 வகையான புரதங்கள் உருவாகின்றன.


உங்கள் டி.என்.ஏவிலும் சில நல்ல விஷயங்களை இணைத்துக் கொள்ளுங்கள். அடுத்த தலைமுறைக்கு அது அப்படியே கடத்தப்படலாம்...









சனி, மே 10, 2014

மர்ம முடிச்சு




இவ்வுலகில் தனக்கு தானே பெயர் வைத்துக் கொள்ளும் திறமையும், உரிமையும் ஒன்றிற்கு மட்டுமே உள்ளது....அது என்ன????

மிகவும் வியப்பாக தான் இருந்தது... முதன்முதலில் இந்த கணினியின் சுட்டுவிரல்(அதன் சுட்டி) பிடித்து கணக்கிடுகையில். இருபதாம் வாய்ப்பாடு வரை பல நூறு தடவை படித்தும், எழுதியும் பார்த்ததால் தான் சில நிமிடங்களில் கணக்கிட கற்றுகொண்டேன். வாயில்லா இந்த கணினி எங்கு கற்றுக் கொண்டது மில்லிநொடியில்... மில்லியன் கணக்கிட. பதில் தெரியாமல் பள்ளியில் பைத்தியம் பிடிக்க வைத்த கேள்வி...


கல்லூரியில் முதலாமாண்டு தான் தெளி(ரி)ந்தது. நம் கணினிக்கும் சொல்லித்தான் குடுக்கிறார்கள்.. ப்ரோகிராம்(நிரல்) என்ற பெயரில் புரிதலாக... அப்படியென்றால் நம் மூளையும் ப்ரோகிராம் செய்யப்பட்ட ஒன்றாகதான இருக்க வேண்டும். சுற்றுபுறத்திலிருந்து இன்புட்(உள்ளீடு) எடுத்துக்கொண்டு அதனை பிராசஸ்(பரிசீலனை) செய்து தேவையான கட்டளைகளை பிறப்பிக்கிறது. இந்த ப்ரோகிராமின் பெரும்பகுதி ஜீன் என்னும் சிப்பில் எழுதிவைக்கபட்டுள்ளது. மீதிபகுதியானது பேரண்டத்தில் உள்ள நட்சத்திரங்களை விட அதிகமாக உள்ள நீயுரான்களில் நம்மால் எழுதப்படுகிறது. கணினியின் நினைவானது அதில் உள்ள ட்ரான்சிஸ்டர்களை அடிப்படையாக கொண்டது. இந்த டிரான்சிஸ்டர்களில் இரு வகையான ‘Gate’ உள்ளது.
1) Floating Gate
2) Control Gate

ஒரு Floating Gate ஆனது மற்றொரு floating gate உடன் control gate வழியாக இணைகிறது. நாம் கணிக்கு தரும் தரவுகள் அனைத்தும் இவ்வாறு இரு Floating Gate இணைவதின் மூலம் சேமிக்கப்படுகிறது. நாம் தரவுகளை அழிக்கும்போது மீண்டும் இந்த இணைப்பானது பிரிக்கப்பட்டு வேறொரு நினைவிற்க்காக ஒதுக்கிவைக்கப்படுகிறது. 


இதேபோல் மூளையில் இரு நீயுரான்கள் இணையும் போது அங்கே தகவல்கள் சேமிக்கபடுகிறது. அந்த இரு நீயுரான்கள் ‘டைவர்ஸ் வாங்கும் போது நம் நினைவில் இருந்து அந்த தகவல்கள் அழிக்கப்படுகிறது.
இந்த மூளை தகவல்களை சேமிக்கும் விதம் மிகவும் வியப்பானது.
உதாரணமாக ‘தண்ணீர் என்ற வார்த்தையை நாம் நினைத்தவுடன் அதன் நிறம் நம் கண் முன்னே வந்து செல்லும். இது மூளையின் பின் பகுதியில் சேமிக்கபட்டிருக்கும். அதன் சுவையை நினைக்கும் போது மூளையின் முன் பகுதி அதை பற்றிய தகவலை தரும். தண்ணீரை தொடும்போது வரும் குளிர்ச்சியை நினைத்தால் மூளையின் பக்கவாட்டு பகுதி இப்படி தான் ஜில்லென்று இருக்கும் என சொல்லும்.

இந்த தகவல்கள் எல்லாம் முன் எப்பொழுதோ பல்வேறு புலன் உறுப்புகளால்(கண், மூக்கு, தோல்) மூளைக்கு அனுப்பபட்ட தகவல்கள். இந்த புலன் உறுப்புகள் மூளையின் எந்த பகுதியில் இணைக்கபட்டு இருக்கிறதோ, அந்த பகுதியில் தான் சேகரித்த தகவல்களை சேமித்து வைக்கிறது. சுருங்க கூறின் மூளைக்கும் பல்வேறு துறை சார்ந்த மந்திரிகள் உண்டு.

எத்தனை மந்திரிகள் இருந்தாலும் பிரதம மந்திரியாக ‘ஹிப்போகெம்பஸ் செயல்படுகிறது. தண்ணீரை பற்றிய மேற்கூறிய அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைத்துஇது தான் தண்ணீர் என சேமித்து வைக்கிறது(தண்ணீரை அல்ல.... தகவலை!!!)

கணினியில் ‘0 & ‘1 என பதியப்படும் தகவல்கள் மூளையில் எவ்வாறு பதியப்படுகின்றன???

முதலில் கொஞ்சம் ‘கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகனும். நரம்பு செல்களுக்கும்(நீயுரான்கள்), சாதாரண செல்களுக்கும் இடையில். இவ்விரு செல்களும் இணையும் இடத்திற்கு ‘ஸினாப்ஸ் என்று பெயர். இவ்விரு செல்களும் உரசி செல்லும் போது வேதியியல் மின்சாரவியலாகிறது. நரம்பு செல் ‘மின்சாரம் என்மீது பாய்கின்றதே என பாடிக்கொண்டே அந்த தகவலை மூளைக்கு எடுத்துச் செல்லும் சாதாரணசெல் உரசிய மயக்கத்தில்...

பின் அந்த மின்தூண்டல் மீண்டும் ஒரு ‘கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் செய்து இரு நீயுரான்களை இணையச் செய்து நினைவாக சேமிக்கிறது.
உங்கள் மூளையின் சில மில்லியன் நீயுரான்களுக்கு முடிச்சு போட நேரம் ஒதுக்கியதற்க்கு நன்றி...
மீண்டும் சந்திப்போம்....


  


விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...