காமராஜர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காமராஜர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூலை 15, 2014

முழுமூச்சாய் இறுதிமூச்சு வரை



ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால்
அழகு தான்... அதிசயம் தான்...
ஆனால்
30000 பள்ளிகளை கட்டிய இவரைக் கண்டால்
அதிசயித்து தான் பார்ப்பான் அவனும்...

வெறும் சட்டை மட்டும் தான் துறந்தார் காந்தி...
குடும்பத்தையே சட்டைசெய்யாமல் துறந்தாஎ இவர்...

நாட்டை துறந்து காட்டுக்கு சென்றார் புத்தர்...
வீட்டை துறந்து நாட்டுக்கு வந்தார் இவர்...

சற்றே திகைத்து தான் போயிருப்பார்
அந்த கடவுளும்...
இரண்டு கோடி பேருக்கு
இவ்வளவு நன்மை செய்யனுமா???
என்னால் முடியாது என்று
பின்னால் போயிருப்பார் அவர்...
முடியும் என்று முன்னால் வந்தார் இவர்..
முழுமூச்சாய்
இறுதிமூச்சு வரை முயன்றார்...

வெள்ளை சட்டைக்குள் கருப்பு உடல்
கருப்பு உடலுக்குள் வெள்ளை மனம்...
அப்பழுக்கற்ற மனம்...
கரைபடியாத கைகள்..

உலகில் ஒவ்வொரு தினமும் ஒரு பக்கம்
ஒவ்வொரு நாளும் படித்து கொண்டிருந்தார்...
உலகம் ஒவ்வொரு நாளும் எழுதிக் கொண்டிருந்தது
அவர் வரலாற்றை....

சுத்தமாக படிக்காதவர் தான்...
பொறாமை ப(பு)டிக்காதவர்...
பேராசை ப(பு)டிக்காதவர்...
சுயநலம் ப(பு)டிக்காதவர்...
வன்சொல் ப(பு)டிக்காதவர்...
அதிகாரம் ப(பு)டிக்காதவர்...
பதவியாசை ப(பு)டிக்காதவர்...

ஏழைகளை அணைக்கத் தெரிந்தவர்
எளிமையாய் நடக்க தெரிந்தவர்
இந்த இரண்டும் மட்டுமே தெரிந்தவர்...

ஆட்சியில் சேர்த்த சொத்துக்கள் ஏராளம்
10க்கும் மேற்பட்ட அணைகள்...
100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள்...
200 கல்லூரிகள்....
500 நூலகங்கள்...
30000 பள்ளிகள்...
மின் உற்பத்தி நிலையங்கள்....

சோஷியலிசம் பற்றி பேசி ரஷ்யாவில்
கைத்தட்டல் வாங்கினார் முதல் வாரம்....
சேற்றில் கால் வைத்து விவசாயி தோளில்
கைபோட்டு அன்பாக பேசினார் அடுத்த வாரம்...

ஆட்சிக்காக கட்சியில் சேர்பவர்கள் மத்தியில்
கட்சிக்காக ஆட்சியிலிருந்து விளகியவர்...

எதிர்கட்சியினரை பந்தாடும் ஆளுங்கட்சியின் மத்தியில்
எதிர்க்கட்சியினருக்கும் அமைச்சர் பதவி தந்தவர்....

கொஞ்சம் கோபக்காரர் தான்...
கொஞ்சம் நேரத்தில் மறையும் கோபம் தான்...

ஒரே ஒரு காமராசர்
தமிழ்நாடு
தொழிற்துறையில் 2ம் இடம்
கல்வியில் 4ம் இடம்
மின் உற்பத்தியில் 1ம் இடம்
விவசாய வளர்ச்சியில் 3ம் இடம்..
இன்று எத்தனையோ பேர்
அதை அழித்துக் கொண்டிருக்கின்றனர்..
அசைக்க கூட முடியாது
அவர் இட்ட அடித்தளத்தை...





வெள்ளி, ஜூலை 12, 2013

9 ஆண்டுகளில்....



 1)       1947ல் சென்னை மாகணத்தில் இருந்த மொத்த தொடக்க பள்ளிகள் 15,303. விடுதலை அடைந்த பின் 6000 பள்ளிகள் மூடப்பட்டன. 9000லிருந்து 1963ல்  30,020 ஆக உயர்ந்த்து பள்ளிகளின் எண்ணிக்கை.
2)      1954ல் 6 முதல் 11 வரை வயது வரையிலான குழந்தைகளில் 45% மட்டுமே பள்ளி சென்றனர். 1963லோ 80%த்தை எட்டியது.
3)      1954ல் 39ஆக இருந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 63ஆக உயர்ந்த்து 1964ல்
4)      1954ல் 141 தான் ஆசிரியர் பயிற்சி பள்ளி. 1963ல் 209
5)      ‘நூலகமா.. அப்படினா என்ன? என்பது 1954ன் நிலைமை. 1964ல் 638 பொது நூலகங்கள், 12 மாவட்ட மைய நூலகங்கள்.
6)      மாணவர்களுக்கு மட்டும் அல்ல. ஆசிரியர்களுக்கும் நல்ல காலம் தான் அந்த 9 ஆண்டு காலம். ஆசியாவிலே முதன்முதலாய் ஆசிரியர்களுக்கு நிரந்தர வைப்பு நிதி, ஓய்வுதியம், ஆயுள் காப்பீடு அறிமுகப்படுத்தப்பட்ட்து.
7)      ஓய்வு பெரும் வயது 55லிருந்து 58 ஆக உயர்த்தபட்டது.
8)      அமராவதி அனை(47000ஏக்கர் பாசன வசதி)
சாத்தனூர் அனை(20000ஏக்கர்)
வைகை அனை(20000ஏக்கர்)
மணிமுத்தாறு அனை(20000ஏக்கர்)
மலம்புழா அனை(46000ஏக்கர்)
கிருஷ்னகிரி அனை(7500ஏக்கர்)
கீழ் பவானி திட்டம்(200000ஏக்கர்)
மங்கலம் அனை(6000ஏக்கர்)
மேட்டூர் பாசன கால்வாய்(45000ஏக்கர்)
9)      59 நூல் நூற்பு ஆலைகள்,30 லட்சம் நூற்புக் கதர்கள்,8000 துணி நூற்புப் பாவுகள்
10)  கிண்டியில் மாபெரும் தொழிற்பேட்டை,சிமெண்ட் ஆலைகள்
நெய்வேலி உரத்தொழிற்சாலை (உற்பத்தி 70000 டன்கள்)
நெய்வேலி நிலக்கரிச்சுரங்கம்
ஐ.சி.எப். தொடர்வண்டிப் பெட்டிகள்
பெல் உயரழுத்த கொதிகலன்கள் (BHEL)
 சிறு போர்முனைக் கருவிகள் (துப்பாக்கித் தொழிற்சாலை)
ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை.
ஆவடி கனரக (டாங்க்) தொழிற்சாலை.
சேலம் இரும்பு உருக்கு ஆலை
9 ஆண்டுகளில் தமிழகம் தொழிற்துறையில் இந்தியாவிலே 2ம் இடத்தை பிடித்தது.
ஜுலை15- கல்வி வளர்ச்சி நாள் என்பதை விட தமிழக வளர்ச்சி நாளாக கொண்டாடுவதே பொருத்தமாய் இருக்கும்.


விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...