தலைவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தலைவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூலை 15, 2014

முழுமூச்சாய் இறுதிமூச்சு வரை



ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால்
அழகு தான்... அதிசயம் தான்...
ஆனால்
30000 பள்ளிகளை கட்டிய இவரைக் கண்டால்
அதிசயித்து தான் பார்ப்பான் அவனும்...

வெறும் சட்டை மட்டும் தான் துறந்தார் காந்தி...
குடும்பத்தையே சட்டைசெய்யாமல் துறந்தாஎ இவர்...

நாட்டை துறந்து காட்டுக்கு சென்றார் புத்தர்...
வீட்டை துறந்து நாட்டுக்கு வந்தார் இவர்...

சற்றே திகைத்து தான் போயிருப்பார்
அந்த கடவுளும்...
இரண்டு கோடி பேருக்கு
இவ்வளவு நன்மை செய்யனுமா???
என்னால் முடியாது என்று
பின்னால் போயிருப்பார் அவர்...
முடியும் என்று முன்னால் வந்தார் இவர்..
முழுமூச்சாய்
இறுதிமூச்சு வரை முயன்றார்...

வெள்ளை சட்டைக்குள் கருப்பு உடல்
கருப்பு உடலுக்குள் வெள்ளை மனம்...
அப்பழுக்கற்ற மனம்...
கரைபடியாத கைகள்..

உலகில் ஒவ்வொரு தினமும் ஒரு பக்கம்
ஒவ்வொரு நாளும் படித்து கொண்டிருந்தார்...
உலகம் ஒவ்வொரு நாளும் எழுதிக் கொண்டிருந்தது
அவர் வரலாற்றை....

சுத்தமாக படிக்காதவர் தான்...
பொறாமை ப(பு)டிக்காதவர்...
பேராசை ப(பு)டிக்காதவர்...
சுயநலம் ப(பு)டிக்காதவர்...
வன்சொல் ப(பு)டிக்காதவர்...
அதிகாரம் ப(பு)டிக்காதவர்...
பதவியாசை ப(பு)டிக்காதவர்...

ஏழைகளை அணைக்கத் தெரிந்தவர்
எளிமையாய் நடக்க தெரிந்தவர்
இந்த இரண்டும் மட்டுமே தெரிந்தவர்...

ஆட்சியில் சேர்த்த சொத்துக்கள் ஏராளம்
10க்கும் மேற்பட்ட அணைகள்...
100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள்...
200 கல்லூரிகள்....
500 நூலகங்கள்...
30000 பள்ளிகள்...
மின் உற்பத்தி நிலையங்கள்....

சோஷியலிசம் பற்றி பேசி ரஷ்யாவில்
கைத்தட்டல் வாங்கினார் முதல் வாரம்....
சேற்றில் கால் வைத்து விவசாயி தோளில்
கைபோட்டு அன்பாக பேசினார் அடுத்த வாரம்...

ஆட்சிக்காக கட்சியில் சேர்பவர்கள் மத்தியில்
கட்சிக்காக ஆட்சியிலிருந்து விளகியவர்...

எதிர்கட்சியினரை பந்தாடும் ஆளுங்கட்சியின் மத்தியில்
எதிர்க்கட்சியினருக்கும் அமைச்சர் பதவி தந்தவர்....

கொஞ்சம் கோபக்காரர் தான்...
கொஞ்சம் நேரத்தில் மறையும் கோபம் தான்...

ஒரே ஒரு காமராசர்
தமிழ்நாடு
தொழிற்துறையில் 2ம் இடம்
கல்வியில் 4ம் இடம்
மின் உற்பத்தியில் 1ம் இடம்
விவசாய வளர்ச்சியில் 3ம் இடம்..
இன்று எத்தனையோ பேர்
அதை அழித்துக் கொண்டிருக்கின்றனர்..
அசைக்க கூட முடியாது
அவர் இட்ட அடித்தளத்தை...





புதன், ஜனவரி 15, 2014

யார் என்று தெரிகிறதா???




  • மகாராஷ்டிரா மாநிலம், அஹமதுநகரில் ஒரு சிறிய கிராமத்தில் கூலித் தொழிலாளின் மகனாய் பிறந்தார்.

  • குடும்பத்தின் வறுமை அவரை 7ம் வகுப்பு வரை படிக்க மட்டுமே அனுமதித்தது. அதற்க்குபின் அவர் அத்தை வேலைக்காக மும்பைக்கு அவரை அழைத்து சென்றுவிட்டார்.

  • அதன்பிறகு இந்திய இராணுவத்தில் ஓட்டுநராக சேர்ந்தார்.1965ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போரில் ‘கெம்கரன் எல்லையில் பணியில் அமர்த்தப்பட்டார். போரின் போது இவர் நண்பர்கள் அனைவரும் இறந்தனர். இவர் மட்டும் காயங்களுடன் தப்பிப் பிழைத்தார்.
  • 1978ல் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். சிக்கிம், ஜம்மூ, அஸ்ஸா என பல மாநில எல்லைகளில் பணிபுரிந்திருந்தார்.
  • ஓய்வுக்கு பின் ‘பிரசார் விரோடி ஜன் அண்டோலன் என்றோ சமூக சேவை அமைப்பை தொடங்கினார். இவரின் சமூக சேவையை பாராட்டி ‘பத்மஸ்ரீ ‘பத்ம பூசன் விருதுகளை வழக்கி அரசு கௌரவித்தது.
  • தான் பிறந்த கிராமத்திற்கு பல நல்ல திட்டங்களை பெற்றுத்தந்துள்ளார். ‘ரிலிகன் சித்தி என்பது தான் இவர் பிறந்த அந்த கிராமம்.
 

  • முழுக்க முழுக்க மாற்று எரிசக்தியையே பயன்படுத்துகின்றனர் இக்கிராம மக்கள். ‘சூரிய, காற்று, இயற்கை எரிவாயு என எல்லாவிதமான ஆற்றலையும் பயன்படுத்துகின்றனர்.
  • மரம் நடுதல், ஏரி, குளம், குட்டைகளை தூர்வாருதல் இங்குள்ள அனைவரின் பகுதிநேர தொழில்.
  • ‘உலக வங்கி சுற்றுச் சூழல் பேணுதலில் இக்கிராமத்தை மாதிரி கிராமமாக அறிவித்துள்ளது.

  • 1995ல் மாகராஷ்டிரா மாநில அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. தனது தீவிர போராட்டத்தால் அவர்களை பதிவியில் இருந்து விலகச் செய்தார்.
  • தன் கிராமத்தில் உள்ள சிறு கோவிலில் தான் தன்னுடைய ஓய்வூதியத்தில் வசித்து வருகிறார் 1940, ஜனவரி15ல் பிறந்த இந்த பிரமச்சாரி.....
  • நமக்கெல்லாம் 2011ல் ‘ஜன் லோக்பால்காக உண்ணாவிரதம் இருந்தபோது தான் இவரை தெரியும். ஆனால் 1995 லிருந்தே ஊழலுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி வருகிறார் இந்த இரண்டாம் காந்தி.
  • முதல்தடவை(2011ல்) ஏதோ உணர்ச்சி பெருக்கில் மிகப்பெரும் ஆதரவை அளித்த இந்திய இளைய இரத்தமும், முகநூலும் & ஊடகங்களும், 2013ன் இறுதியில் இவர் நடத்திய உண்ணாவிரதத்தை சற்றும் பார்க்கவில்லை.
கிசன் பபாட் பாபுரோவ் ஹசாரே.....



வியாழன், அக்டோபர் 31, 2013

இந்தியாவின் முதல் பிரதமர்

  • பாரிஸ்டர் ஆக வேண்டும் என்பது அவர் விருப்பம். அதற்கான பணம் முழுவதையும் அவரே சம்பாதித்தார். ஆனால் அவர் அண்ணனுக்கும் அதே ஆசை. அதனால் தன் அண்ணனை அந்த பணத்தில் படிக்க வைத்தார். அதன் பின்னர் 38 வயதில் தான் தன் பாரிஸ்டர் கனவை நினைவாக்கினார்.
  • ஒருமுறை நண்பர்களுடன் சீட்டாட்டம் விளையாடிக் கொண்டிருக்கிறார். பக்கத்தில் காந்தி ஒரு கூட்டத்தில் உரையாடிக் கொண்டிருக்கிறார். நண்பர்கள் கூட்டத்திற்க்கு போகலாம் என்கிறார்கள். இவரோ ‘ஆட்டத்தை தொடருங்கள். பிரம்மச்சரியம், சிக்கனம், எளிமை என ஏதாவது பேசுவார். கோதுமையிலிருந்து கல் பொறுக்கத் தெரிந்தால் சுதந்திரம் கிடைத்துவிடும் என்று வீண் வார்த்தை பொழிவார். நீங்களே போய் கேளுங்கள். நான் வரவில்லை என்று கூறியவர். பின்னாளில் காந்தியின் சொல்லே வேதம் என கருதினார். காந்தியின் மிகுந்த நம்பிக்கைக்குரியவர் ஆனார்.
  • ஏரவடா சிறையில் காந்தியும், இவரும் ஒரே செல்லில் இருந்தனர். காந்தி சிறையிலேயே உண்ணாவிரதம் இருந்தார். காந்திக்கு அருகில் இருந்து அனைத்து பணிவிடைகளும் செய்தார் இவர். தன் அண்ணன் வெளியில் இறந்த போதும் சிறையிலிருந்து பரோலில் வெளி வர மறுத்துவிட்டார்.
வழக்கறிஞகர் தொழில் செய்து நன்றாக சம்பாதித்தார். ஆனால் கதர் இயக்கத்திலும், மது-தீண்டமை ஒழிப்பு போரட்டத்திலும் ஈடுபட தடையாக இருந்ததால் அத்தொழிலையும் கைவிட்டார். காந்தி அதை மிகுந்த மனவேதனையுடன் தன் ‘சத்திய சோதனையில் பதிவு செய்துள்ளார்.
  • குஜராத்தில் வறுமையில் வடிய விவசாயிகளிடமும் ஆங்கில அரசு வரி வசுல் செய்தது. காந்தியின் அறிவுறுத்தல் பேரில் போரட்டத்தில் இறங்கினார். ஆயிரக்கனக்கானோர் கைது செய்துபட்டனர். இருந்தும் போராட்டத்தை தொடர்ந்தார். ஆங்கில அரசால் ஒன்னும் செய்ய முடியவில்லை. வரியை நீக்கியது. இவர் நாடறிந்த தலைவரானார்.
 
  • 1946ல் இடைக்கால அரசு அமைக்க 16 மாகணங்களில் 13 மாகணங்கள் இவரை பிரதமராக முன்மொழிந்தன. வெறும் 3 மாகணங்கள் தான் நேருவை முன்மொழிந்தனர். நேரு தான் மவுண்ட் பேட்டனுடன் பேச்சுவார்த்தையில் உள்ளார். ஒருவேளை நேரு பிரதமராகாவிட்டால் ஆங்கிலேய அரசு சுதந்திரம் தர தயங்கலாம் என பயந்தார் காந்தி. காந்தி கேட்டுக்கொண்டற்க்கு இணங்க பிரதமர் போட்டியிலிருந்து விலகினார். நேரு இந்தியாவின் முதல் பிரதமரானார்.
  • அதற்க்கு பதிலாய் உள்துறை அமைச்சராக்கப்பட்டார். மிகவும் திறமையாக செயல்பட்டு சிதறிக்கிடந்த சுமார் 560 சமஸ்தானங்களை ‘இந்தியா என்ற நாடாக்கினார். இது மிகப்பெரும் வரலாற்றுச்சாதனை.
  • இராணுவ நடவடிக்கையின் மூலம் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க முயன்றார். ஆனால் நேரு அதற்க்கு அனுமதி மறுத்துவிட்டார்.
  • மனமுடைந்த இவர் காந்தியை சந்தித்து பதவி விலக போவதை தெரிவித்தார். இவர் சந்தித்து சென்ற சில நிமிடங்களில் காந்தி கொல்லப்பட்டார். உள்துறை அமைச்சர் என்ற முறையில் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வற்புறுத்தப்ப்ட்டார்.
  • “இவர் பிரதமராக வந்திருந்தால் இன்று காஷ்மீர் பிரச்சனையே இருந்திருக்காது – வரலாற்று ஆசிரியர்கள்
  • “இவர் பிரமராக வந்திருந்தால் இந்தியாவில் இன்னும் சிறப்பான ஆட்சியை கண்டிருக்கலாம்- இராஜேந்திர பிரசாத்(முதல் குடியரசு தலைவர்)
  • இவரின் பிறந்ததினம் இன்று. இரும்பு மனிதர் தான். ஆனால் மென்மையான இதயம் கொண்டவர்.
  • சர்தார் வல்லபாய் படேலின் புகழ் என்றும் ஓங்குக.
 

செவ்வாய், அக்டோபர் 01, 2013

காந்தியா.. யார் அவர்?


‘காந்தியா.. யார் அவர்?
சத்தியமா இந்த கேள்விய 120கோடில பாதி பேர் கேட்டிருப்பாங்க...ஒருவேளை பணத்தில் காந்தியின் உருவம் அச்சிடப்படாமால் இருந்திருந்தால்...

இல்ல இன்னும் சில வருடங்களில் தேர்வுகளில் இந்த மாதிரி கேள்வி கூட கேட்கலாம்....நம் ரூபாய் நோட்டில் இருக்கும் உருவம் யாருடையது?
இதற்க்கும் பாதிக்கும் மேலானோர் பதில் தெரியாமால் முழிக்கலாம்.

ஆக பணத்தின் மதிப்பு தான் காந்தியின் மதிப்பை இன்னும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. பணத்தின் மதிப்பை விட காந்தியின் மதிப்பு குறைந்து கொண்டுவருகிறது கடந்த சில வருடங்களாக..

‘காந்தியின் அகிம்சையினால் தான் நாம் சுதந்திரம் பெற பல காலம் ஆனது. ஆங்கிலேயரை எதிர்த்து சண்டையிட்டு இருந்தால் 1947க்கு முன்னரே விடுதலையை வாங்கியிருக்கலாம்

‘ஆங்கிலேயர் காந்தியின் போரட்டத்திற்க்கு பயந்து விடுதலை தரவில்லை. இதற்க்கும் மேலும் இந்தியாவை ஆள அவர்கள் விரும்பாமல் தான் சுதந்திரம் அளித்தார்கள்

‘காந்தியின் தனிமனித போரட்டத்திற்கு கிடைத்த சுதந்திரம் அல்ல இது. எத்தனையோ தலைவர்கள் செய்த தியாகத்தின் பயன் தான் நம் சுதந்திரம். காந்தியை மட்டும் தேசப்பிதா என்பது தவறு

‘நாம் அடிமை பட்டிருக்கிறோம்.. நமக்கு விடுதலை தேவை என்பதை தெரியாமலே தான் இருந்தனர் நம் மக்கள்.
மக்களை ஒருக்கிணைக்க, விழிக்கச் செய்ய எந்த அமைப்போ, தலைவர்களோ இல்லை சுமார் 150 ஆண்டுகால ஆங்கிலேய ஆட்சியில்.

1857ல் முதல் இந்திய சுதந்திர போர் என்று பாட புத்தகத்தில் படித்த நியாபகம். ஆனால் அது சுதந்திர போரே அல்ல என்பது வரலாற்று அறிஞர்களின் வாதம். ஆம், அதில் சுதந்திரம் என்ற குறிக்கோள் இல்லை. கொழுப்பு தடவிய தோட்டாவை உபயோக்க மறுத்து சிப்பாய்களும், துணைப்படை திட்டத்தின் கீழ் தன் நாட்டை இழந்த ஜான்சி ராணியும், தன் ஓய்வூதியம் வராததால் வங்காள ஆட்சியாளரும் அவர்கள் பகுதிகளில் கிளச்சியில் ஈடுபட்டனர். ஆக ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நடக்கவில்லை இந்த போர்(கிளர்ச்சி)..

1885ல் முதன்முதலில் ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ். ஆரம்பித்தவர் ஒரு ஆங்கிலேய அதிகாரி. அதன் பின் இந்தியர்கள் அதில் முக்கிய பொறுப்புகளை பெற்றனர்.
‘உயர் சாதி மாணவர்கள் ஆங்கில அரசில் பணிபுரிய, கல்லூரியில் சேர பரிந்துரை கடிதம் வழங்குவது போன்ற வேலைகளை மட்டும் செய்துவந்தது.

சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு காங்கிரஸ் என்ற அமைப்பு இருப்பதே தெரியாது. காங்கிரஸில் இருந்த அனைவரும் படித்த உயர்குடி இந்தியர்கள். ஆங்கில அரசிடமிருந்து உயர்குடி மக்களுக்கு பல சலுகைகளை வாங்கிதந்தனர், ஏழை எளிய மக்களை பற்றி எந்த கவலையும் படவில்லை.



1916ல் இந்தியா திரும்புகிறார் காந்தி. அவரும் படித்தவர் என்பதால் காங்கிரஸ் பற்றி தெரிந்து கொள்கிறார். உறுப்பினர் ஆகிறார். பின் காங்கிரஸின் தலைவராகிறார்.
·         காங்கிரசில் சேர உறுப்பினர் கட்டணத்தை குறைக்கிறார்
·         மும்பையில் செயல்பட்டது காங்கிரஸ்.. நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அலுவலகம் திறந்தார் காந்தி.
·         அனைத்து சாதி, மதத்தவரும் சேரலாம் என்றவிதியை கொண்டுவந்தார்.
·         காங்கிரஸ் கூட்டம் எந்த பகுதியில் நடக்கின்றதோ, அப்பகுதி மொழியில் தான் கூட்டம் நடைபெற வேண்டும் என அறிவித்தார்.(அதற்கு முன் ஹிந்தி தான் இந்தியா முழுவதும்)
·         காங்கிரஸின் அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் மூலமே ஆட்கள் தேர்ந்தேடுக்க ஆவன் செய்தார்.(அதற்கு முன் நியமித்தல் முறை தான்).
காந்தியின் இந்த நடவடிக்கைகள் தான் இந்திய மக்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தது. அனைத்து வேறுபாடுகளையும் மறந்து மக்கள் ஒற்றுமையாய் இயங்கினர்.

காங்கிரஸை சுதந்திரத்திற்க்காக மட்டும் பயன்படுத்தவில்லை காந்தி.
1920ல் சுமார் 1000காங்கிரஸ் உறுப்பினர்களை(இளைஞகர்கள்) இந்தியா முழுவதும் அனுப்பினார். முக்கியமாக கிராமபுறங்களுக்கு.
கீழ்கண்டவைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த.
·         தீண்டாமை & சாதி ஒழிப்பு
·         குடிப்பழக்கத்தின் தீமை
·         சுகாதாரத்தின் முக்கியத்துவம்
·         பெண்கள் முன்னேற்றம் & பெண் கல்வி
·         ஏழ்மை ஒழிப்பு

இவ்வாறு மக்களை முன்னேற்றி, ஆங்கிலேயர் முன்னால் நிறுத்தியவர் தான் காந்தி.

காந்தி வாங்கி தந்தது இரண்டு சுதந்திரம்.
1) ஆங்கிலேயரிடமிருந்து
2) அறியாமையிலிருந்து
  


  

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...