நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூன் 24, 2014

வைரஸ் பேனா



VIQ
VVIQ
VVVIQ
VVVVIQ...

பத்து, பன்னிரெண்டாம் வகுப்புகளில் அதிகமாக புத்தகங்களை ஆக்கிரமித்த சொற்கள் இவை. இது 2005ல் கேட்ட கேள்வி(அப்படினா VIQ னு போடனும்னு அர்த்தம்.) இது 2004, 2005 ல் கேட்ட கேள்வி(VVIQ-Very Very Important Question னு அர்த்தம்) இப்படியே VVVVIQ வரை செல்லும்.

அப்படி VVVVIQ வாங்கிய ஒரு கேள்வி 'நீயுட்டனின் பொது ஈர்ப்பு விதி'.
'An appple a day keeps doctor away' என்ற பழ'மொழியை 'An Apple in one day made our school life worser' என புதுமொழி உருவா(க்)கும் அளவுக்கும், இயற்பியலின் மீது நல்ல வேதியியல்(அதாங்க இந்த கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகுறது) உருவாகாமல் போனதுக்கும் இந்த ஈர்'ப்பு விதியும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.


"இரு பொருளகளுக்கு இடையேயான ஈர்ப்பியல் விசையானது அதன் நிறைகளுக்கு நேர்விகிதத்திலும், அவற்றிற்க்கிடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்விகிதத்திலும் இருக்கும்"

 இதற்க்கு உதாரணமாக புவிக்கும், நிலவுக்கும் இடையேயான ஈர்ப்பியல் விசை குறிப்பிடபட்டிருக்கும். மேலும் கடல் அலைகளுக்கும் இது தான் காரணம் என கேள்விக்கான விடை முடியும்.


புவிக்கு ஏதோ காந்த சக்தி உள்ளது. நிலவுக்கும் அது போல் இருக்கலாம். என்வே அவற்றிற்க்கு இடையே (காந்தவியல்) ஈர்ப்பு விசை இருக்கலாம். ஆனால் நிலவுக்கும், கடல் நீருக்கும்; புவிக்கும், நமக்கும் எப்படி ஈர்ப்புவிசை சாத்தியம்.??
கடல் நீரின் மீது செயல்படும் நிலவின் ஈர்ப்பு விசை நம் மீதும் செயல்படுமா??(அமாவாசை வந்துருச்சா என்று முட்டாள்தானமாக பேசுபவர்களை மொக்கைதனமாக கலாய்ப்பவர்கள் உண்மையில் கவனிக்கபட வேண்டியவர்கள், கீழ்பாக்கத்தில் அல்ல. பிர்லா கோளரங்கத்தில்)


முதலில் நீயுட்டன் 'இரு காந்த பொருட்களுக்கு இடையே' என தனது விதியை ஆரம்பிக்கவில்லை. 'இரு பொருட்களுக்கு இடையே' என எந்த மத, இன. சாதி பாகுபாடு இன்றி அண்டத்தில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் பொதுவாக அளித்துள்ளார்.ஆக எனக்கும், அலைபேசிக்கும்; எனக்கும், தொலைகாட்சிக்கும்; எனக்கும், மடிக்கணினிக்கும் இடையே ஈர்ப்பியல் விசை இருக்கதானே செய்யும்.(ஆனால் புத்தகமும், நானும் மட்டும் ஒரே துருவம் போல)

எனக்கும், என் அலைபேசிக்கும் இடையில் ஈர்ப்புவிசை இருந்தாலும் உண்மையில் அது மிக, மிக, மிக குறைவு(அறிவியல்பூர்வமாக மட்டுமே)
ஒல்லிபெல்லியில் கலந்துகொள்ளும் அளவிற்க்கு என் உடல் எடை(!) இருந்தாலும், செங்கல் போல் என் செல்லிடப்பேசி இருந்தாலும் Gன் மதிப்பானது G = 6.673×10-11 N m2 kg-2 என இருப்பதால் எங்கள் ஈர்ப்புவிசையை குறைத்துவிடுகிறது(என் அம்மாவின் திட்டைப் போல)
ஆனால் புவியின் எடையோ 5.972E24 kg என அதிகமாக இருப்பதால் சிறிய பொருளின் மீது கூட அதிகமான ஈர்ப்புவிசை செலுத்த முடிகிறது. இந்த ஈர்ப்புவிசையையே 'பூமியின் பொறுமை' என சங்ககால இலக்கியங்கள் கூறுகின்றன போலும்.


நம் தமிழ்நாட்டில் மின்வெட்டு போல உலகில் ஒரு நாள் 'ஈர்ப்பியல்வெட்டு' நடந்தால் எப்படி இருக்கும்???
1) நம்ம கால் ரெண்டும் தரையில இருக்காது(எகிறிக் குதித்தால் வானம் கூட இடிக்கும்)
2) தொகுப்பாளிகள்(VJ’s) சிகை அலங்காரம் நமக்கும் வந்துவிடும்.(அதான் அந்த தலைவிரி (அலங்)கோலம்)
3) எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அழ முடியாது. சுழிய புவியீர்ப்பு விசையால் கண்ணீரால் வெளிவர முடியாது.(இது இயற்க்கையாகவே தொலைகாட்சி தொடர்களுக்கு(Serials) முற்றுபுள்ளி இடும்)
4) உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பிரிவினை இல்லாத பொதுவுடைமை சமுதாயம் உண்டாகும்.(ஆம், எல்லோருமே உயரே தான்)
5) மிக முக்கியமாக முதல்வர் அம்மாவிற்க்கு அவருடைய அமைச்சரவை சகாக்களிடம் தகுந்த மரியாதை கிடைக்காது(ஆம், அவர்களால் 90டிகிரி குனிந்து வணக்கம் செலுத்த முடியாது)
6) அதைவிட முக்கியமாக நம் எல்லோரும் ‘வைரஸ் பேனா வாங்கியிருப்போம்.
என்றெல்லாம் கற்பனை செய்ய கூடாது.
புவியின் ஈர்ப்புவிசை இல்லையென்றால் அடுத்த கனமே வளிமண்டலம் விடுபட்டு சென்றுவிடும். செல்வது வளிமண்டலம் மட்டுமல்ல, ந்ம் அனைவரின் மூச்சுக்காற்றும் தான்.

வியாழன், அக்டோபர் 17, 2013

ஜாலி பயணம்..



விமானம் புறப்பட தயாராயிருந்தது.
கைபேசியை அனைத்து வைக்கும்மாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டனர்.
இன்னும் சில நொடிகளில் தரைக்கு விடை கொடுத்து, வானில் பறக்கும் முனைப்புடன் இருந்தது.
நொடி நெருங்கியதும் பயணம் இனிதே தொடங்கியது.
சிலருக்கு பிரயாணம். பலருக்கு பிரமிப்பு..


சில நிமிடங்கள் வரை எல்லாம் சரியாக தான் சென்று கொண்டிருந்தது.
திடீரென்று ஒரு சமவெளி பகுதியில் தரை மோதி வெடித்தது...
பயணித்த 156ல் 155 பேர் பலி. விமானி உட்பட.

பிழைத்தது ஒரே ஒரு உயிர். மிருகக்காட்சி சாலைக்கு அழைக்கப்பட்டு சென்ற குரங்கு தான் அது.
விசாரணை அதிகாரிகள் விபத்து நடந்த பகுதியில் இருந்த இந்த குரங்கை கைப்பற்றினர்.

அதிகாரி1 : கருப்பு பெட்டியும் கிடைக்கல. உயிரோட யாரும் இல்ல. எப்படி விபத்துக்கான் காரணத்த கண்டுபிடிக்க.

குரங்கு: உயிரோட தான் நான் இருக்கேன்ல.

அதிகாரி2 : ஐயா, குரங்கு பேசுது

அதிகாரி1: அட ஆமாயா.. பேசாம(பேசி தான்) இது கிட்டயே விசாரிக்கலாம் போல.

அதிகாரி2: நமக்கு வேற வழி இல்ல.

அ1: விமானம் கிளம்பும் போது பயணிகள் என்ன பண்ணுனாங்க

கு: சீட் பெல்ட் போட்டுகிட்டு இருந்தாங்க

அ1: விமான பணிப்பெண்?

கு: எல்லாருக்கும் குட்மார்னிங்க் சொல்லிகிட்டு இருந்தாங்க

அ2: அப்போ விமானி?

கு: புறப்பட எல்லாவற்றையும் தயார் செய்து கொண்டிருந்தனர்.

அ1: நீ?

கு: எல்லாறையும் பார்த்துக்கிட்டு இருந்தேன்.

அ1: விமானம் புறப்பட்ட பின் 30 நிமிடம் கழித்து பயணிகள் என்ன பண்ணுனாங்க?

கு: பாதி பேர் தூங்கிட்டாங்க. மீதி பேர் படிச்சுக்கிட்டு இருந்தாங்க

அ2: விமானபணிப்பெண்?

கு : மேக் அப் போட்டுகிட்டு இருந்தாங்க.

அ1: விமானி?

கு: விமானத்தை இயக்கி கொண்டிருந்தார்.

அ1 : நீ?

கு: இப்பவும் பார்த்துகிட்டுதான் இருந்தேன்..

அ1: விபத்து நடப்பதற்க்கு சற்று முன்னால், பயணிகள் என்ன பண்ணுனாங்க.. யாரும் கைல துப்பாக்கி வச்சிருந்தாங்கலா?

கு: யாரு கையிலயும் துப்பாக்கிலாம் இல்ல. அப்போ எல்லாரும் தூங்கிக்கிட்டு இருந்தாங்க.

அ2: விமான பணிப்பெண்?

கு: மேக் அப் போட்ட பின் எடுத்த போட்டவ பேஸ்புக்-ல அப்லோட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க.

அ1 : விமானி?

கு: அந்த போட்டோவுக்கு கமெண்ட் பண்ணிகிட்டு இருந்தார்.

அ1: நீ?

கு: விமானத்த இயக்கி கொண்டு இருந்தேன்...........

ஞாயிறு, அக்டோபர் 13, 2013

ஜின் ஜி து லி



சீடர்களே...

உங்கள் அனைவரையும் ஸ்ரீஸ்ரீ உதயானந்தாவின் ulaஅகில உலக தியான மையத்திற்கு வரவேற்கிறேன்.

இன்று நாம் பார்க்கப் போவது ஒரு எளிய பயிற்சி..

முதலில் பார்ப்பதற்க்கு பவர் ஸ்டார் போல சப்பையாக இருந்தாலும்
பள்ளிகூட வாத்தியார் போல உங்கள் முட்டியை கழற்றிவிடும்.

‘உங்கள் வயது என்ன என்று கேட்டால் ‘பாஸ் என்று அடுத்த கேள்விக்கு செல்லும் நடிகையின் வயதக் கூட இந்த பயிற்சி மூலம் கண்டுபிடிக்கலாம்.

பாஸ்(கரன்) மாதிரி அரியர்ஸ் எழுதிக் கொண்டே இருக்கும் பாய்ஸ் கூட இதை செய்தால் பாஸ் பண்ணலாம்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு இனிப்பான பயிற்சி. ஆம்.. ஒரு நாளைக்கு ஒரு நிமிடம் செய்தால் போதும்.

இனி ஆரம்பிப்போமா...
சீடர்களே..
அனைவரும் உங்கள் கண்களை மூட ஆழ்ந்த தியானத்திற்கு செல்லவும்...(ஹாலோ இப்ப இல்ல.. இத முழுசா படித்த பின்)

அப்படியே கண்னை மூடிய படியே எழுந்து நிற்க்கவும்..
அப்படியே நின்று கொண்டே ஒரு காலை 90டிகிரி மடக்கவும்(கண்களை மூடியபடியே)

இப்பொழுது உங்கள் முழு உடல் எடையும் ஒரு காலில் தாங்கும்படி நிற்ப்பீர்கள்.

உங்களால் 10 நொடிகள் வரை கூட நிற்க்க முடியவில்லை என்றால் நீங்கள் உடலால் 60 அல்லது 70 வயதை அடைந்துவிட்டீர்கள் என்று பொருள்.

கண்களை மூடவில்லை என்றால் உங்களால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நிற்க இயலும்.
ஆனால் கண்களை மூடிய நிலையில் 5நொடிகள் கூட நிற்க முடியாது..

இதன் பெயர் ‘ஜின் ஜி து லி
இது ஒரு சீன மருத்துவம்..
முக்கியமாக ‘மிகை இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், ஞாபக மறதி, கழுத்து வலி, முதுகு தண்டு வலி உள்ளோருக்கு பரிந்துரைக்கப் படுகிறது.
மேலும் இதை எல்லோரும் தினமும் ஒரு நிமிடம் செய்தால் இந்நோய்கள் வராமல் தடுக்கலாம்.

முதலில் கண்களை முழுதும் மூடி செய்தல் கடினமாக இருக்கலாம்.
ஆரம்பத்தில் சிறிது திறந்தபடி செய்து பயிற்சி செய்யலாம்..
பழக பழக கண்களை முழுவதும் மூடியபடி செய்யலாம்..

இடையில் இஷ்க்கு இஷ்க்கு என்றெல்லாம் கேட்கலையே....




விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...