பயனுள்ள தகவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயனுள்ள தகவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மே 10, 2014

மர்ம முடிச்சு




இவ்வுலகில் தனக்கு தானே பெயர் வைத்துக் கொள்ளும் திறமையும், உரிமையும் ஒன்றிற்கு மட்டுமே உள்ளது....அது என்ன????

மிகவும் வியப்பாக தான் இருந்தது... முதன்முதலில் இந்த கணினியின் சுட்டுவிரல்(அதன் சுட்டி) பிடித்து கணக்கிடுகையில். இருபதாம் வாய்ப்பாடு வரை பல நூறு தடவை படித்தும், எழுதியும் பார்த்ததால் தான் சில நிமிடங்களில் கணக்கிட கற்றுகொண்டேன். வாயில்லா இந்த கணினி எங்கு கற்றுக் கொண்டது மில்லிநொடியில்... மில்லியன் கணக்கிட. பதில் தெரியாமல் பள்ளியில் பைத்தியம் பிடிக்க வைத்த கேள்வி...


கல்லூரியில் முதலாமாண்டு தான் தெளி(ரி)ந்தது. நம் கணினிக்கும் சொல்லித்தான் குடுக்கிறார்கள்.. ப்ரோகிராம்(நிரல்) என்ற பெயரில் புரிதலாக... அப்படியென்றால் நம் மூளையும் ப்ரோகிராம் செய்யப்பட்ட ஒன்றாகதான இருக்க வேண்டும். சுற்றுபுறத்திலிருந்து இன்புட்(உள்ளீடு) எடுத்துக்கொண்டு அதனை பிராசஸ்(பரிசீலனை) செய்து தேவையான கட்டளைகளை பிறப்பிக்கிறது. இந்த ப்ரோகிராமின் பெரும்பகுதி ஜீன் என்னும் சிப்பில் எழுதிவைக்கபட்டுள்ளது. மீதிபகுதியானது பேரண்டத்தில் உள்ள நட்சத்திரங்களை விட அதிகமாக உள்ள நீயுரான்களில் நம்மால் எழுதப்படுகிறது. கணினியின் நினைவானது அதில் உள்ள ட்ரான்சிஸ்டர்களை அடிப்படையாக கொண்டது. இந்த டிரான்சிஸ்டர்களில் இரு வகையான ‘Gate’ உள்ளது.
1) Floating Gate
2) Control Gate

ஒரு Floating Gate ஆனது மற்றொரு floating gate உடன் control gate வழியாக இணைகிறது. நாம் கணிக்கு தரும் தரவுகள் அனைத்தும் இவ்வாறு இரு Floating Gate இணைவதின் மூலம் சேமிக்கப்படுகிறது. நாம் தரவுகளை அழிக்கும்போது மீண்டும் இந்த இணைப்பானது பிரிக்கப்பட்டு வேறொரு நினைவிற்க்காக ஒதுக்கிவைக்கப்படுகிறது. 


இதேபோல் மூளையில் இரு நீயுரான்கள் இணையும் போது அங்கே தகவல்கள் சேமிக்கபடுகிறது. அந்த இரு நீயுரான்கள் ‘டைவர்ஸ் வாங்கும் போது நம் நினைவில் இருந்து அந்த தகவல்கள் அழிக்கப்படுகிறது.
இந்த மூளை தகவல்களை சேமிக்கும் விதம் மிகவும் வியப்பானது.
உதாரணமாக ‘தண்ணீர் என்ற வார்த்தையை நாம் நினைத்தவுடன் அதன் நிறம் நம் கண் முன்னே வந்து செல்லும். இது மூளையின் பின் பகுதியில் சேமிக்கபட்டிருக்கும். அதன் சுவையை நினைக்கும் போது மூளையின் முன் பகுதி அதை பற்றிய தகவலை தரும். தண்ணீரை தொடும்போது வரும் குளிர்ச்சியை நினைத்தால் மூளையின் பக்கவாட்டு பகுதி இப்படி தான் ஜில்லென்று இருக்கும் என சொல்லும்.

இந்த தகவல்கள் எல்லாம் முன் எப்பொழுதோ பல்வேறு புலன் உறுப்புகளால்(கண், மூக்கு, தோல்) மூளைக்கு அனுப்பபட்ட தகவல்கள். இந்த புலன் உறுப்புகள் மூளையின் எந்த பகுதியில் இணைக்கபட்டு இருக்கிறதோ, அந்த பகுதியில் தான் சேகரித்த தகவல்களை சேமித்து வைக்கிறது. சுருங்க கூறின் மூளைக்கும் பல்வேறு துறை சார்ந்த மந்திரிகள் உண்டு.

எத்தனை மந்திரிகள் இருந்தாலும் பிரதம மந்திரியாக ‘ஹிப்போகெம்பஸ் செயல்படுகிறது. தண்ணீரை பற்றிய மேற்கூறிய அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைத்துஇது தான் தண்ணீர் என சேமித்து வைக்கிறது(தண்ணீரை அல்ல.... தகவலை!!!)

கணினியில் ‘0 & ‘1 என பதியப்படும் தகவல்கள் மூளையில் எவ்வாறு பதியப்படுகின்றன???

முதலில் கொஞ்சம் ‘கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகனும். நரம்பு செல்களுக்கும்(நீயுரான்கள்), சாதாரண செல்களுக்கும் இடையில். இவ்விரு செல்களும் இணையும் இடத்திற்கு ‘ஸினாப்ஸ் என்று பெயர். இவ்விரு செல்களும் உரசி செல்லும் போது வேதியியல் மின்சாரவியலாகிறது. நரம்பு செல் ‘மின்சாரம் என்மீது பாய்கின்றதே என பாடிக்கொண்டே அந்த தகவலை மூளைக்கு எடுத்துச் செல்லும் சாதாரணசெல் உரசிய மயக்கத்தில்...

பின் அந்த மின்தூண்டல் மீண்டும் ஒரு ‘கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் செய்து இரு நீயுரான்களை இணையச் செய்து நினைவாக சேமிக்கிறது.
உங்கள் மூளையின் சில மில்லியன் நீயுரான்களுக்கு முடிச்சு போட நேரம் ஒதுக்கியதற்க்கு நன்றி...
மீண்டும் சந்திப்போம்....


  


ஞாயிறு, மார்ச் 09, 2014

பார்க்காதே... பார்க்காதே...



பார்க்காதே... பார்க்காதே
ஐயையோ பார்க்காத...
நீ பார்த்தா பறக்குரேன்... பாத மறக்குறேன்...
பேச்ச குறைக்கிறேன் சட்டென்னு தான்....
இந்த ஒரு பார்வையால தானே பாழாகுறேன்..


பார்வையால பாழாகுறது இருக்கட்டும்... பார்க்கும் போது எப்படி நம் கண்களுக்கு வண்ணங்கள் தெரிகிறது?
ஒரு பொருள் இயற்க்கையாக எப்படி வண்ணம் பெறுகிறது?
உண்மையில் வண்ணங்கள் என்று எதுவும் உண்டா?
பதிலுக்காக கொஞ்சம் அலைவோமா.....

சூரியனின் மையப்பகுதியில் தொடர்ந்து ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் அணுக்களை உருவாக்குகின்றன. இவ்வாறு நடைபெறும் அணுக்கரு இணைவு நிகழ்வின் போது மிக அதிகமான ஆற்றல் வெப்பமாக வெளியிடப்படுகிறது. இரு அணுக்கள் இணையும் போது உருவாகும் மூன்றாவது அணுவின் எடை முதல் இரு அணுக்களின் எடைகளின் கூடுதலாக இருக்காது. உதாரணமாக ஒரு ஹீலியம் அணுவின் எடை 1கிராம் என்றால் உருவாகும் ஹைட்ரஜனின் எடை 2கிராமுக்கு குறைவாக இருக்கும். இதில் ஏற்படும் எடை இழப்பு ஐன்ஸ்டினின் E=mc2 என்ற சமன்பாட்டின் படி ஆற்றலாக மாற்றப்படும். தோராயமாக 0.3% எடையிழப்பு ஏற்படுவதாக அறியப்படுகிறது.

அது சரி.... எப்படி இரண்டு ஹைட்ரஜன் அணுக்களை இணைக்க முடியும்?
இரு அணுக்களை பிணைக்கும் விசை(Driving Force) எங்கிருந்து கிடைக்கிறது?அதுவும் முழுதும் நேர்மின் அணு.(எலக்ட்ரான் இருப்பதில்லை) இரு நேர்மின் அணுக்களுக்கு இடையே உள்ள விலக்குவிசை மீறி பிணைக்கும் விசை யாது?

சூரியன் மையப்பகுதியில் மட்டுமே அணுக்கரு இணைவு நடைபெறும். மையப்பகுதியில் ஈர்ப்புவிசை அதிகம் என்பதால் நேர்மின் அணுக்களை இணைக்கும் விசை தாராளமாக கிடைக்கிறது.

1) முதலில் இரு புரோட்டானகள் இணைந்து ஒரு டியூட்ரியம் அணு உண்டாகிறது.
2) அந்த டியூட்ரியம் அணு ஒரு புரோட்டான் அணுவுடன் இணைந்து ஹீலியம்-3(ஐசோடோப்பு) மற்றும் காமா கதிர்களை வெளியிடுகிறது.
3) பின் இரு ஹீலியம்-3 அணுக்கள் இணைந்து ஹீலியம்-4 அணு உருவாகிறது.
உண்மையில் ஹைட்ரஜன் அணுக்கள் மட்டும் இணைவதில்லை. சூரியனில் 85% ஆற்றல் இவ்வகையில் தான் உருவாகிறது.
மீதமுள்ள 15% ஆற்றல் கீழ்க்கண்ட வினையின் மூலம் கிடைக்கிறது.

1) ஒரு ஹீலியம்-3 அணுவும், ஒரு ஹீலியம்-4 அணுவும் இணைந்து பெரிலியம்-7 அணு உண்டாகிறது.
2) ஒரு பெரிலியம்-7 அணு எலக்ட்ரானுடன் இணைந்து லித்தியம்-7 அணு உருவாகிறது.
3) லித்தியம்-7 புரோட்டானுடன் இணைந்து இரு ஹீலியம்-4 அணு உருவாகிறது.
இவ்வாறு வெளிப்படும் வெப்ப ஆற்றல் மின் காந்த அலைகளாக அண்டத்தில் பரவுகிறது.


சூரியன் வெளியிடும் இந்த மின்காந்த அலைவரிசையில் மூன்று அடுக்குகள் உள்ளன. ஒரு அடுக்கில் புலனாகும் அலைகற்றை இருக்கும். இதில் ஏழு நிறங்கள் உள்ளன(அதாவது அலைநீளம் 390nm முதல் 700nm வரை). இந்த அடுக்கிற்கு முன்னால் குறைந்த அலைநீளம் கொண்ட  ரேடியோ அலைகள், மைக்ரோ அலைகள், அகச்சிவப்பு அலைகள் உள்ளன. பின்னால் புறஊதா கதிர்கள், காமா கதிர்கள், எக்ஸ்ரே கதிர்கள் உள்ளன. ஆனால் 50% புலனாகும் அலைகற்றையும், 40% ரேடியோ அலைகற்றையும், வெறும் 10% புறஊதாகதிர்களும் அடங்கியுள்ளன(தப்பிச்சோம்)...

அலையும், வண்ணமும்:
ரொம்ப அலைஞ்சிட்டிங்களா.... கொஞ்சம் கலர்புல்லா பார்ப்போமா??
அலைநீளம் 390nm முதல் 700nm வரை உள்ள மின்காந்த அலைகள் பூமியை அடைந்து ஏதேனும் ஒரு பொருளின் மீது படும்பொழுது, எல்லா அலைநீள கதிர்களையும் உட்கவர்ந்து(Adsorb) ஏதேனும் ஒரு அலைநீள கதிரை மட்டும் எதிரொளிக்கிறது(Reflect).
இதனால் அப்பொருள் எதிரொளிக்கப்பட்ட அலைநீளத்தின் வண்ணத்தில் தெரிகிறது. எல்லா அலைநீளத்தையும் எதிரொளிக்கும் பொருள் வெள்ளை நிறத்திலும், எல்லா அலைநீளத்தையும் உட்கவரும் பொருள் கருமை நிறத்திலும் காட்சியளிக்கும். ஆக இயற்க்கையில் எல்லா பொருட்களும் கருப்பே(வண்ணமற்றவை)..ஆப்பிள் உண்மையில் சிவப்பு அல்ல... மரங்கள் உண்மயில் பச்சை அல்ல.. நம் ஹீரோயின்கள் உண்மையில் இவ்வளவு நிறம் அல்ல..... ‘எல்லாம் மாயையே
 
சூரியன், பொருளிலிருந்து அடுத்ததாக கண்களுக்கு பயணத்தை தொடருவோம்.. எப்படி இந்த கால் இஞ்ச் கண்கள் கலர்புல்லாக காண உதவுகிறது???
கண்கள்:
பல மில்லியன் குச்சி செல்கள், கூம்பு செல்கள் நிறைந்தது நம் கண்கள்.
ஏற்கனவே ஒரு பொருள் ஒரு அலைநீளத்தை மட்டும் தான் எதிரொளிக்கும் என பார்த்தோம் அல்லவா.. அந்த அலைநீள ஒளி மட்டும் நம் கண்ணின் விளித்திரையை அடையும்.
குச்சி, கூம்பு செலகளில்  S, M, L  என பல வகைகள் உள்ளன.  மஞ்சள் அல்லது பச்சை நிற ஒளி விழுன் பொழுது L, M வகை கூம்பு செலகள் அதிகமாகவும், S கூம்பு செல்கள் மிக் குறைவாகவும் தூண்டப்படுகிறது,
சிகப்பு நிற ஒளி L வகை கூம்பு செல்களை அதிகமாகவும், M, sS வகை கூம்பு செல்களை குறைவாகவும் தூண்டுகிறது. 

அனைத்து கூம்பு, குச்சி செல்களும் புரதம்(ஸ்காட்டாப்சின்) மற்றும் வைட்டமின்-ஏ னால் ஆனது. ஒளியானது இந்த செல்களில் விழும்பொழுது வேதிவினை நடைபெறுகிறது(ஏனென்றால் ஒளி தன்னுள் ஆற்றலை கொண்டுள்ளது. அந்த ஆற்றலால் வேதிவினை நடைபெறுகிறது).
வேதிவினையில் உருவாகும் மெடரோடாப்சின்-2 மின்காந்த தூண்டலை ஏற்படுத்துகிறது(ஆக்ஸிஜன் ஒடுக்க வினையினால்). இது பார்வை நரம்பின் மூலம் மூளைக்கு கடத்தப்படுகிறது. இந்த பார்வை நரம்பு மூளையின் பின்புறம் ஆக்ஸிபட்டல் என்ற பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும். 

கண், காது, மூக்கு, தோல் என அனைத்து உணர் உறுப்புகள் மூலம் பெறப்படும் செய்திகள் மூளைக்கு மின்காந்த தூண்டலாகவே அனுப்பபடுகிறது. மூளை இதை எப்படி உணருகிறது???

அடுத்த பகுதியில்.....

ஞாயிறு, ஜனவரி 19, 2014

சந்திரனை தொட்டது யார்



சாய்ந்து சாய்ந்து தான்
பார்த்துக் கொண்டிருக்கிறது
அந்த நிலவை...
#இந்த பூமி...
(23.5டிகிரியில்)

பூமியின் நிழலில்
ஒளிந்து கொண்டே
வெட்கத்துடன் எட்டிப்பார்க்கிறது
பூமியை....
#அரைநிலா...

கவிதை என்ற பெயரில் கிறுக்கி கொண்டிருக்கும் நான் முதல்
உண்மையாகவே கவிதை எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர்கள் முதல்
நிலாவை தொடாதவர்கள் யாவரும் இலர்.


ஆனால் உண்மையாகவே நிலாவை முதன்முதலில் தொட்டவர் நீல் ஆம்ஸ்ட்ராங்க்.
(கடுப்பாகாதிங்க.. ப்ளீஸ், இனிமே தான் படமே ஆரம்பிக்கவிருக்கிறது)

1961
அமெரிக்கா வெள்ளை மாளிகை.
(ஒரு தடவ கண்ணை மூடி, திறந்திங்கனா வெள்ளை மாளிகை முன்னாடி நிற்பிங்க. தேவயாணி மாதிரி விசா வாங்க தேவையில்லை.)

கென்னடி(அதிபர்): நிலவிற்கு முதன்முதலில் ஒரு நாடு மனிதனை அனுப்பும் என்றால் அது அமெரிக்காவாகத் தான் இருக்கும்.

ஏதோ சொல்லியாச்சி... ஏதாவது செய்யணுமே...
ஒட்டுமொத்த அமெரிக்க மானமும் அவர் கூறிய இந்த வார்த்தையில் அடகு வைக்கபட்டுவிட்டது.. யாராவது (விண்வெளி) கப்பல் ஏறி சென்றால் தான் அந்த மானம் திரும்ப வரும்.

மானத்தை பின் தள்ளி மனதில் பயம் முண்னணி வகித்தது.
‘தென்னை மரம் அளவிற்கு புதைமணல் இருக்குமாமே
‘பயங்கர புதை குழிகள் இருக்குமாமே
‘இறங்க இடமில்லாமல் வெறும் கூரமையான பாறைகள்
என ஏகப்பட்ட வதந்திகள் அங்கும் வாக்கிங்க் போயிக் கொண்டிருந்தன..

ஆனால் மானத்தை காப்பாற்றியே ஆகணும்... அண்ணன் அமெரிக்காவுக்கு.

1966
ரஷ்யா
லூனா-9 என்ற ஆளில்லா விண்கலத்தை வெற்றிகரமாக நிலாவிற்கு அனுப்பியது.
ஆளில்லா விண்கலம் அழகாக நிலவை படம் பிடித்து ரேடியோ சிக்னல்களாக பூமிக்கு அனுப்பியது.
வெட்கமில்லா அமெரிக்கா அழகாக அதை திருடியது இங்கிலாந்து உதவியுடன்.
ஒரு வழியாக பயத்தை பின்னுக்கு தள்ளி மானம் வென்றது.
திருடிய அந்த படத்தின் உதவியால் அந்த வதந்திகள் அனைத்தும் பொய் என தெளிந்தது அமெரிக்கா. துணிச்சலாக களத்தில் இறங்கியது.

1967 அக்டோபர்,11
மீண்டும் அமெரிக்கா
அப்பலோ-1 என்ற விண்கலம் நிலவை நோக்கி செல்ல தயாராக இருந்தது. ஒரு சிறிய மின்சார கோளாறு. கிளம்பும் சற்று நேரத்திற்கு முன்பு வெடித்து சிதறியது.
விர்ஜில் கிம்சம், எட்வர்ட் வோய்ட், ரோஜர் ஸாஃப் என்ற மூன்று அப்பாவி வீரர்கள் இறந்தார்கள். ஆம், அவர்கள் நிலவில் முதன் முதலில் காலடி வைப்பதாக இருந்தவர்கள். ஆனால் அவர்கள் பயணம் தொடங்காமலே முடிந்தது.

1969 ஜூலை16
அதே அமெரிக்கா
அப்பலோ-11, நீல் ஆம்ஸ்ட்ராங்க், ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் விண்வெளிகப்பலில் கிளம்பினர். அதில் ஈகிள் என்ற விண்வெளி வாகனமும் இருந்தது. நான்கு நாள் நீண்ட பயணத்திற்கு பிறகு niniநிலவு வந்தது.(ஆமா, மூணு நாள் நைட்டும் வந்துருக்கும்ல) காலின்ஸ் டிரைவர் போல. ஆம்ஸ்ட்ராங்க், ஆல்ட்ரின் இருவரையும் ஈகிள் வாகனத்தின் மூலம் இறக்கிவிட்டு விண்வெளிகப்பலில் நிலாவை(அந்த நிலாவைத்தாங்க) சுற்ற கிளம்புவிட்டார். ஆம்ஸ்ட்ராங்க், ஆல்ட்ரின் இருவரும் ஈகிள் மூலம் இறங்கினர். சுமார் 2 மணிநேரம் 31 நிமிடம் நிலவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். நிலவில் ஆம்ஸ்ட்ராங்க்  தன்னை ஒரு புகைபடம் கூட எடுக்கவில்லை. நாம் பார்ப்பது எல்லாம் ஆல்ட்ரின்  புகைபடம் தான். பின் காலின்ஸ்காக காத்திருந்தனர். காலின்ஸ் வந்ததும் அந்த கப்பலில் ஏறி அமெரிக்காவின் மானத்தை காப்பாற்றினர்.

சுபம்....


விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...