வெள்ளி, செப்டம்பர் 13, 2013

என் காதில் விழுந்த கேள்விகள்



ஒரு வழியாக விரைவாக, சரியாக வந்துவிட்டது தீர்ப்பு.
தீர்ப்பு வந்தவுடன் ஒரு கூட்டம் கிளம்பிவிட்டது.



மரண தண்டனை சரியான தீர்வல்ல

மரண தண்டனையை பார்த்து, பயந்து திருந்திவிட போவதில்லை தான்.
இந்த 4 பேரையும் சில ஆண்டுகள் அரசாங்க செலவில் வாழ வைத்து, திருத்தி நல்ல ‘மனிதர்களாக வெளியே அனுப்பலாம். நாளை அவர்களால் இந்தியாவே உலகளவில் பெருமைபடலாம்.
ஆனால் நிர்பயாவின் நரம்புகள் அனுபவித்த வலிகளை இந்த 4(+1)களும் அனுபவிக்க வேண்டாமா...

சின்ன பையன் அறிவில்லாம பண்ணிட்டான்பா

17 வயதிலே இவ்வளவு பெரிய தப்பு செய்யும் ‘சிறுவன் 3 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு ‘பெரியவனாய் சமத்து பையனாய் இருப்பானா??!!!!
18 வயது என்பது நாம் நிணயித்த ஒரு வயது... அவ்வளவு தான்...
14வயதில் ஒரு சிறுவன் டிகிரி முடிக்கும் போது இந்த சமூகம் அவனை மிகவும் அதிகமாக பாராட்டுகிறது. ‘வயதுக்கு மீறிய சாதனை என கொஞ்சுகிறது.
அதே 17 வயதில் ஒரு தவறு செய்தால் இவன் ‘சிறுவன் என விதி விலக்கு அளிக்கிறது. ‘வயதுக்கு மீறிய செயல் என தண்டனை தர மறுக்கிறது.

ஒரு பொண்ணு நைட் 10 மணிக்கு படம் பார்த்துத்து பையனோட தனியா சுத்தலாமா

முழு இந்தியாவுக்கே தான் சுதந்திரம் கொடுத்துத்து போயிருக்கான் வெள்ளைக்காரன்.... ஆண்களுக்கு மட்டும் அல்ல.
10 மணிக்கு ஒரு(நான்கு) ஆண்(கள்) மது அருந்திவிட்டு சுற்றுவது தப்பில்லை என்றால், ஒரு பெண் படத்திற்க்கு சென்று விட்டு திரும்புவதும் தப்பில்லை தான்.

இது போன்ற குற்றங்கள் தினந்தோறும் எவ்வளவோ நடக்கத்தான் செய்கின்றன.. ஊடகங்கள் இதை மட்டும் ஏன் பெரிது படுத்த வேண்டும்?

எல்லாத்தையும் பெரிது படுத்தினா அதுக்கு மட்டும் ஒரு சேனல் வேணும்.

இந்த விசயத்தை பெரிது படுத்தியதுனால் தான் ‘வர்மா அறிக்கை என்ற ஒன்றை அரசு நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்ற முடிந்தது.
வர்மா அறிக்கையின் பரிந்துரைகளில் நிறைவேற்றப்பட்ட சில சட்டங்கள்..
19-மார்ச்-2013 அன்று நாடளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அமில வீச்சு- குறைந்த பட்சம் 10ஆண்டுகள், அதிக பட்சம் ஆயுள் தண்டனை
அமில வீச்சு முயற்சி- குறைந்த பட்சம் 5ஆண்டுகள், அதிக பட்சம் 7ஆண்டுகள்.
பாலியல் தொந்தரவு(தொடுதல், தாகாத வார்த்தை, சைகைகள்)- 5ஆண்டுகள் வரை சிறை தண்டனை.
தவறாக புகைப்படம் எடுத்தல்- 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை
பின் தொடர்தல்- அதிகபட்சமாக 1 ஆண்டு வரை.

இவை அனைத்தையும் கொண்டுவந்தது ‘நிர்பயா என்றால் மிகையல்ல.

தண்டனை மட்டும் அல்ல.. பாதிக்கப்ப்ட்ட பெண்களின் மறுவாழ்விற்க்கும் வழிவகை செய்கிறது புதிய சட்டம்..
நடந்த நல்ல விசயங்களை பாருங்கள்.

என்ன தான் சட்டம் இருந்தாலும் தப்பு பண்ணுறவன் தப்பு பண்ண தான் செய்வான்

தப்பு பண்ணுறவன் சட்டத்துக்கு பயப்பட மாட்டான் தான்..
தப்பு செய்பவனை திருத்துவதை விட நல்லவனை தப்பு செய்யாமல் வைத்திருக்கயாவது சட்டம் வேண்டும்.

எந்த திருடனும் போலிஸுக்கு பயந்து தொழிலை விடவில்லை..
எந்த தீவிரவாதியும் இராணுவத்திற்க்கு பயந்து மனிதனாக மாறுவதில்லை. மனித வெடிகுண்டாக வேண்டுமானால் மாறுகிறார்கள்.
ஆனால் பொது மக்கள் போலிஸுக்கும், இராணுவத்திற்க்கும் பயப்படுகிறார்களே.

இப்போ நீங்க ஏதோ கேள்வி கேக்குற மாதிரி இருக்கே.......


விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...