புதன், ஜூலை 29, 2020

ஐங்குறு ஹைக்கூ...!


என் செல்பேசியின் சுவர்சித்திரமானாய் நீ...
அன்று முதல்
என் செல்பேசியும்
என் சொல்பேச்சு
கேட்க மறுக்கிறது...!


******


அவசரநிலை பிரகடனம்,
அருகில் நீ வந்தாலே...
என் மனதிற்குள்...!


******


என் இதயத்தின் மெளனம் மட்டுமல்ல
உன் இதழின் மெளனம் கூட மரணம் தான் எனக்கு...!


******


வானவில் வண்ணம் தானே?
இங்கு மட்டும் என்ன
இரு வானவில்கள் கரு நிறத்தில்
கண்ணை பறிக்கின்றன...!

******

என் இமைகளுக்குள்
விழிநீரால் வரைந்த சித்திரமா நீ?
இமை முடியும் தெரிகிறாயே...!


விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...