செவ்வாய், ஜூன் 24, 2014

வைரஸ் பேனா



VIQ
VVIQ
VVVIQ
VVVVIQ...

பத்து, பன்னிரெண்டாம் வகுப்புகளில் அதிகமாக புத்தகங்களை ஆக்கிரமித்த சொற்கள் இவை. இது 2005ல் கேட்ட கேள்வி(அப்படினா VIQ னு போடனும்னு அர்த்தம்.) இது 2004, 2005 ல் கேட்ட கேள்வி(VVIQ-Very Very Important Question னு அர்த்தம்) இப்படியே VVVVIQ வரை செல்லும்.

அப்படி VVVVIQ வாங்கிய ஒரு கேள்வி 'நீயுட்டனின் பொது ஈர்ப்பு விதி'.
'An appple a day keeps doctor away' என்ற பழ'மொழியை 'An Apple in one day made our school life worser' என புதுமொழி உருவா(க்)கும் அளவுக்கும், இயற்பியலின் மீது நல்ல வேதியியல்(அதாங்க இந்த கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகுறது) உருவாகாமல் போனதுக்கும் இந்த ஈர்'ப்பு விதியும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.


"இரு பொருளகளுக்கு இடையேயான ஈர்ப்பியல் விசையானது அதன் நிறைகளுக்கு நேர்விகிதத்திலும், அவற்றிற்க்கிடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்விகிதத்திலும் இருக்கும்"

 இதற்க்கு உதாரணமாக புவிக்கும், நிலவுக்கும் இடையேயான ஈர்ப்பியல் விசை குறிப்பிடபட்டிருக்கும். மேலும் கடல் அலைகளுக்கும் இது தான் காரணம் என கேள்விக்கான விடை முடியும்.


புவிக்கு ஏதோ காந்த சக்தி உள்ளது. நிலவுக்கும் அது போல் இருக்கலாம். என்வே அவற்றிற்க்கு இடையே (காந்தவியல்) ஈர்ப்பு விசை இருக்கலாம். ஆனால் நிலவுக்கும், கடல் நீருக்கும்; புவிக்கும், நமக்கும் எப்படி ஈர்ப்புவிசை சாத்தியம்.??
கடல் நீரின் மீது செயல்படும் நிலவின் ஈர்ப்பு விசை நம் மீதும் செயல்படுமா??(அமாவாசை வந்துருச்சா என்று முட்டாள்தானமாக பேசுபவர்களை மொக்கைதனமாக கலாய்ப்பவர்கள் உண்மையில் கவனிக்கபட வேண்டியவர்கள், கீழ்பாக்கத்தில் அல்ல. பிர்லா கோளரங்கத்தில்)


முதலில் நீயுட்டன் 'இரு காந்த பொருட்களுக்கு இடையே' என தனது விதியை ஆரம்பிக்கவில்லை. 'இரு பொருட்களுக்கு இடையே' என எந்த மத, இன. சாதி பாகுபாடு இன்றி அண்டத்தில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் பொதுவாக அளித்துள்ளார்.ஆக எனக்கும், அலைபேசிக்கும்; எனக்கும், தொலைகாட்சிக்கும்; எனக்கும், மடிக்கணினிக்கும் இடையே ஈர்ப்பியல் விசை இருக்கதானே செய்யும்.(ஆனால் புத்தகமும், நானும் மட்டும் ஒரே துருவம் போல)

எனக்கும், என் அலைபேசிக்கும் இடையில் ஈர்ப்புவிசை இருந்தாலும் உண்மையில் அது மிக, மிக, மிக குறைவு(அறிவியல்பூர்வமாக மட்டுமே)
ஒல்லிபெல்லியில் கலந்துகொள்ளும் அளவிற்க்கு என் உடல் எடை(!) இருந்தாலும், செங்கல் போல் என் செல்லிடப்பேசி இருந்தாலும் Gன் மதிப்பானது G = 6.673×10-11 N m2 kg-2 என இருப்பதால் எங்கள் ஈர்ப்புவிசையை குறைத்துவிடுகிறது(என் அம்மாவின் திட்டைப் போல)
ஆனால் புவியின் எடையோ 5.972E24 kg என அதிகமாக இருப்பதால் சிறிய பொருளின் மீது கூட அதிகமான ஈர்ப்புவிசை செலுத்த முடிகிறது. இந்த ஈர்ப்புவிசையையே 'பூமியின் பொறுமை' என சங்ககால இலக்கியங்கள் கூறுகின்றன போலும்.


நம் தமிழ்நாட்டில் மின்வெட்டு போல உலகில் ஒரு நாள் 'ஈர்ப்பியல்வெட்டு' நடந்தால் எப்படி இருக்கும்???
1) நம்ம கால் ரெண்டும் தரையில இருக்காது(எகிறிக் குதித்தால் வானம் கூட இடிக்கும்)
2) தொகுப்பாளிகள்(VJ’s) சிகை அலங்காரம் நமக்கும் வந்துவிடும்.(அதான் அந்த தலைவிரி (அலங்)கோலம்)
3) எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அழ முடியாது. சுழிய புவியீர்ப்பு விசையால் கண்ணீரால் வெளிவர முடியாது.(இது இயற்க்கையாகவே தொலைகாட்சி தொடர்களுக்கு(Serials) முற்றுபுள்ளி இடும்)
4) உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பிரிவினை இல்லாத பொதுவுடைமை சமுதாயம் உண்டாகும்.(ஆம், எல்லோருமே உயரே தான்)
5) மிக முக்கியமாக முதல்வர் அம்மாவிற்க்கு அவருடைய அமைச்சரவை சகாக்களிடம் தகுந்த மரியாதை கிடைக்காது(ஆம், அவர்களால் 90டிகிரி குனிந்து வணக்கம் செலுத்த முடியாது)
6) அதைவிட முக்கியமாக நம் எல்லோரும் ‘வைரஸ் பேனா வாங்கியிருப்போம்.
என்றெல்லாம் கற்பனை செய்ய கூடாது.
புவியின் ஈர்ப்புவிசை இல்லையென்றால் அடுத்த கனமே வளிமண்டலம் விடுபட்டு சென்றுவிடும். செல்வது வளிமண்டலம் மட்டுமல்ல, ந்ம் அனைவரின் மூச்சுக்காற்றும் தான்.

ஞாயிறு, ஜூன் 08, 2014

சற்றுச்சூழல்

ஆம்...
சற்று தான் சூழ்ந்துள்ளது
சுற்றுச்சூழல்...

நம்மைச் சுற்றிச் சூழ்ந்த சுற்றுச்சூழல்
இன்று தொலைவில் தனியாய் சுருண்டு கிடக்கின்றதே....

அறிவை கொஞ்சம் வளர்த்ததில்
பசுமையும் மங்கலாய் தெரிகின்றதே...



கடவுளின் இரு கை இயற்றிய இயற்க்கையை
மனிதனின் செயற்க்கை சிதைக்கின்றதே....

சிறு அணுவிலிருந்து ஆயிரம் ஆற்றல்
எடுக்கத் தெரிந்த மனிதா...
சிறு விதையிலிருந்து ஆயிரம் காய் கனி மலர்களை
எடுக்கத் தெரியுமோ???

நம் விஞ்ஞான விரல் தீண்டியதில்
பனியும் நாணத்தில் உருகுகி
கடலுடன் கள்ளத் தொடர்பு கொள்கிறது...
பாவம் பனிக்கரடி...
பனியின்றி தனியாய் தவிக்கிறது...

10000 மைல்களுக்கு அப்பால் உருகும் பனிக்கட்டி
என் வீட்டு வாசலை நனைக்காது
என்ற மெத்தனம் சில ஆண்டுகள் வேண்டுமானால் பலிக்கலாம்.
...

வேலி பயிரை மேய்ந்தால் கூட பரவாயில்லை...
இங்கு பயிரே வேலியை மேய்கின்றதே...
ஓசோன்!!!




பருவம் மாறிய பருவநிலை
உருவம் மாறிய நீர்நிலை
தண்ணீருக்கும் விலை பெற்று தந்தது....

பாலிஎத்திலீன் பையை கண்டுபிடித்த
பாவிப்பையனை தேடுகின்றேன்...
மஞ்சப்பை என்றாலே நாகரீகமில்லாதவன் என
படம் வர அவனே முன்னோடி....

அனாதையாக குழந்தை வாழலாம்
ஆனால்
தனியாக மனிதால் வாழ முடியாது.
..

தமிழும், சுற்றுச்சூழலும் வெறும் தேர்ச்சி பெற தான்...
கணிதமும், அறிவியலும் தான்
மதிப்பை(¡) தரும் மதிப்பெண் பெற
என்றிருக்கும் கல்வி இருக்கும் வரை
பெயரவில் தொடரும்
சுற்றுச்சூழல் தினம் :-( :-( :-(

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...