ஞாயிறு, மார்ச் 08, 2015

தம் இதழ் மொழி = தமிழ் மொழி.

  • மனிதன் முதன் முதலில் தன் இதழ் திறந்து பேசிய மொழி நம் தமிழ் மொழி தானாம். அதனால் தான் 'தம் இதழ் மொழி' எனப் பெயரிட்டான். கால வெள்ளத்தில் மூழ்கிய சில எழுத்துக்களால் இன்று 'தமிழ்' என்று தலை நிமிர்ந்து நிற்க்கிறது.

  • பரிணாம வளர்ச்சியின் ஆரம்பத்தில் மனிதன் பெரும்பாலும் ஆற்றுப் பகுதிக்கு அருகே தான் வசித்து வந்தான். காரணம் தேவையான நீர், வேளாண்மை மற்றும் தண்ணீர் குடிக்க வரும் மிருகங்களை வேட்டையாட. ஆனால் மழைக்காலங்களில் ஆற்றுக்கு அருகில் வசிக்க முடியாது என்பதால் ஆற்றை விட்டு சற்று நகர்ந்து குடில்களை அமைப்பார்கள். இவ்வாறு 'ஊர்ந்து' கொண்டே இருப்பதால் 'ஊர்' எனப் பெயரிட்டான். அதே நேரத்தில் வளர்ச்சியடந்த சில பகுதிகள் 'நகர்ந்து' தொலைவில் சென்றுவிட்டன. அதனால் 'நகர்' என பெயரிட்டான். (ஊர்தல்- அங்கும் இங்க்கும் செல்லுதல், நகர்தல்-தொலைவிற்கு செல்லுதல்)

  • 'பேரன், பேத்தி' என்று தவறாகவே அழைக்கின்றனர் கொஞ்சம் தமிழ் பேசும் நம் தாத்தா, பாட்டிகளும். ஆம், மேலை நாடுகளில் தன் குழந்தைக்கு பெற்றோரின் முதல் பெயரே கடைசியாக சேர்க்கப்படும்(Last name). ஆனால் நம் கலாச்சாரத்தில் அப்படி இல்லை(இனிசியல் மட்டும் தான், தமிழன் தன் தந்தையின் பெயரை முன்னே வைத்தான். பின்னே வைக்கவில்லை)
     ஆனால் தங்கள் குழ்ந்தைக்கு தன் பெற்றோரின் பெயரை வைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. எனவே தன் பெயரை கொண்டவன்(ள்) என்னும் வகையில் 'பெயரன், பெயர்த்தி' என அழைக்கப்பட்டனர் முன் ஒரு காலத்தில்.

  • கணி(கணக்கிடு)+பொறி(இயந்திரம்)

  • புற்றுநோய்- எறும்பு புற்றை போல் தேவையில்லாத திசுக்களை இந்நோய் ஏற்படுத்தும் ஆதலால்.

  • உள்+அகம்=உலகம் (பிரபஞ்சத்தின் உள் பகுதி)

  • சுடர்(ஒளி பொருந்திய பொருள்) - இதுவே பின்னர் ஆங்கிலத்தில் 'ஸ்டார்' என்னும் சொல்லுக்கு வேர்ச்சொல்லாய் அமைந்தது.

  • ஆரத்தீ(ஆரம்+தீ) - வட்டமாக(ஆரம்) தீயை(கற்பூரம்) சுற்றுவது.

  • சீர் - சீர் செய்தல்(நல்ல நிலமைக்கு கொண்டுவருதல்) சீரகம்- அகததை(உள் உறுப்புகளை) சீர் செய்வதால்

கதை(அல்ல நிஜம்) - பல வலை தளங்கள்.
திரைக்கதை               - உதய குமாரன்

திங்கள், மார்ச் 02, 2015

குறுக்கு வழிகள்...!

அலை என்னும் சிறகால்
பறக்க துடிக்கும் கடல்...

ஆதவனையும் அடக்கிவிட்ட இறுமாப்பில்
நிமிர்ந்து நிற்க்கும் மலை...

பசுமையான நினைவுகளை என்றும்
அசைபோட்டு கொண்டிருக்கும் காடு...

சொர்க்கத்திற்கு செல்லும் குறுக்கு வழிகள்...!

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...