செவ்வாய், ஏப்ரல் 01, 2014

கட்டியணைத்து...முத்தமிட்டு...




கட்டியணைத்து
முத்தமிட்டு
கொஞ்சி விளையாடிய
தவழும் குழந்தை
எட்டி உதைத்து
மறந்துவிடுகிறது இந்த பூமியை...
நடக்க தெரிந்ததும்...

முன்னோக்கி நடந்தான் மனிதன்...
சற்றே வழுக்கியது இந்த பூமிக்கு...

குப்பைதொட்டி இல்லா தெரு இல்லை..
குப்பை உள்ள தொட்டியும் இல்லை...

தூசுவால் உருவான பூமி...
இன்று
மாசுவால் மயானமாகிறது...

மட்கா குப்பை(பாலீத்தின்) மண்ணையும்,
மட்கும் குப்பை(பணம்) மனதையும்
பாழ்படுத்தும் பண்பாட்டில் பயணிக்கின்றோம்...

சுற்றம் மட்டுமல்ல
சுற்றுச்சூழலும் தூரம் சென்றுவிட்டது
உலகை சுருக்கிய இந்த தொழில்நுட்ப யுகத்தில்...

பச்சை பட்டு உடுத்திய
இந்த பூமி
கற்பழிக்கபட்டு கொண்டே இருக்கிறது...
அதைக் கண்டு கண்ணீர் சிந்த
அந்த வானுக்கும் வற்றிவிட்டது...

கொஞ்சம் கொஞ்சமாக
இயற்க்கை எய்து கொண்டிருக்கிறது... இயற்க்கை
அதை காப்பாற்றுவது நம் கையில்...

Foolஏப்ரல்.1 முட்டாள்கள் தினம்(Fools Day) கொண்டாடுவதற்க்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன்.
இருந்தாலும் இன்று படிமநிலை எரிபொருள் தினம் (Fossil Fuels Day).
தோண்டி தோண்டி எடுக்கப்படும் நிலக்கரி, பெட்ரோலியம் என்றோ ஒரு நாள் கிடைக்காமல் நம்மளை முட்டாளாக்க போகிறது. அதற்க்காக கூட இந்த முட்டாள் தினம் கொண்டாடபடலாம்..

2000மெகாவாட் உற்பத்தி செய்யகூடிய ஒரு அனல் மின் நிலையம் ஒரு நாளைக்கு 20000டன் நிலக்கரியை எரிக்க வேண்டியுள்ளது. இந்த அளவுக்கு நிலக்கரியை எரிப்பதால் வெளிப்படும் சல்பர்-டை-ஆக்ஸைடும், நைட்ரஸ் ஆக்ஸைடும் எவ்வளவு  என்று கணக்கிட்டு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எரிப்பதால் மட்டும் அல்ல. நிலக்கரியை வெடியெடுக்கும் போதும், எரிந்த பின் சாம்பலை வெளியேற்றும் போதும் கூட பெருமளவு மாசுபடுகிறது.


அனுமின்சாரத்தை விட அனல்மின்சாரம் பாதுகாப்பானது. குறைவான மாசுபாடு தான் உடையது என்றாலும் இன்னும் சில வருடங்களுக்கு மட்டுமே போதுமான இருப்பு இருப்பதால் அதனை குறைவாக உபயோகபடுத்தலே நலம்.

நம் கையில் என்ன இருக்கிறது??

நிலக்கரியில் இருந்து முக்கியமாக பெறப்படுவது மின்சாரம்.
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தலின் மூலம் பர்ஸில் பணத்தையும், பூமியில் நிலக்கரியையும் சேமிக்கலாம்..

சன்னலை அடைத்து ஏசி காற்றில் இருப்பதை விட சன்னலை திறந்து ஓசி காற்றில் தென்றலுடன் கைகோர்த்து கவிதை கிறுக்கலாம்.

யார் மேலோ உள்ள கோபத்தை காட்ட நல்ல வாய்ப்பாக நம் துணியை அடித்து, கசக்கி, பிழிந்து துவைக்கலாம்.. , வாஷிங்க்மெஷின் இல்லாமலே..

களிமண்ணால் செய்யப்பட்ட பல பொம்மைகள் வைத்து கொலு கொண்டாடுவதை போல, ஒரு மட்பானை வாங்கி வைத்து குலு குலு என கொண்டாடலாம்....

மின்விளக்கு, மின்விசிறி போன்றவற்றை சொந்தக்காரர்கள் போல் வைத்திருக்க வேண்டும்.. தேவைப்படும் போது வைத்துக் கொண்டு தேவை இல்லாதபோது அணைத்து வைக்கலாம்...

மொத்ததுல பழைய கற்காலத்துக்கு போகனும்... அப்படித்தன சொல்ல வர...
அப்படினு கேட்க தன இந்த மானிட்டர் பக்கம் கோபமா வரிங்க...

எதையும் உபயோகப்படுத்த வேண்டாம் என்பது என் கருத்து அல்ல...
தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்துங்கள் என்பதே உங்கள் பாதம் தொட்ட என் அன்பான வேண்டுகோள்.....



விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...