என் கருத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என் கருத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜனவரி 13, 2014

தொட்டில் பழக்கம்




‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள்...
ஆனால் இன்றோ தொட்டில் (கட்டும்) பழக்கமே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

தொட்டில்-
குழந்தைக்கு கிடைத்த
இரண்டாம் கருவறை’.


மாறிவரும் நாகரிகமாக்கல் பல குழந்தைகளின் இரண்டாம் கருவறையை கலைத்துவிட்டது. தொப்புள் கொடி துண்டிக்கப்பட்டாலும், தொட்டிலில் தொடரும் தாய் சேய் உறவு. பொதுவாக தொட்டிலை தாயின் தன் சேலையில் தான் கட்டுவாள். அதனால் இந்த புதிய உலகத்திலும் குழந்தை தன் தாயின் பரிசத்தையும், வெப்பத்தையும் உணர முடியும். தொட்டில் பொதுவாக 6 பக்கங்களில் அலைவுறும் தன்மை கொண்டது. அவ்வாறு தொட்டிலை ஆட்டும் போது குழந்தைக்கு ஆகாயத்தில் பறக்கும் உணர்வை கொடுக்கும். இது குழந்தையின் பய உணர்வை இது குறைக்கிறது. தொட்டிலில் போடப்படும் குழந்தை சில நிமிடங்களில் உறங்கும் இரகசியம் இதுவரை யாரும் அறியார்.  அதிலும் மரத்தடியில் கட்டப்படும் தொட்டில் சொர்க்கத்திற்கும் ஒரு அடி மேலே. எந்தவொரு கவலையும் இல்லாமல் தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்கலாம் தாய். பொதுவாக தொட்டில் குழந்தையின் முகத்தை மூடி மூச்சி விட சிரமப்பட கூடாது என்பதற்காக நடுவில் ‘தொட்டில் கட்டை என்ற ஒன்றும் இருக்கும். இது பொதுவாக தாய்மாமனின் சீராக இருக்கும். அந்த தொட்டில் கட்டையில் சில விளையாட்டு பொம்மைகள் தொங்கவிட பட்டிருக்கும். இன்று ஒரு சில கடைகளில் மட்டுமே கிடைக்கப்பெருகின்றது அந்த ‘தொட்டில் கட்டை. அதுவும் மரத்தினால் செய்யப்பட்ட கட்டை கிடைப்பது அரிதிலும் அரிது.

சமீபகாலமாக தொட்டில்களை பார்க்க முடிந்தது இரயில் பயணங்களில் தான்.
இரண்டு பெர்த்களின் நடுவில் கட்டப்படும் தொட்டிலில் உறங்க்கும் குழந்தைக்கு, அந்த இரயிலே தாலாட்டு பாடி ஆட்டிவிடும்.
அமெரிக்காரன் இதை கண்டுபிடித்தான், ஜப்பான்காரன் கடலில் இரயில் விட்டான் என பொறாமைபடும் நாம் ஏன் குழந்தைக்கு பாதுகாப்பான, சுகாதாரமான, இயற்க்கையான ஒரு படு(இரு)க்கையை கண்டுபிடித்தோம் என பெருமைபட தவறிவிடுகிறோம்?
தொட்டில் மட்டுமல்ல. தொட்டிலுடன் கூடிய தாலாட்டும் தலைமறைவாகி வருகிறது.
தாலாட்டு-1
ஆரரோ அரிரோ அராரோ அரிரரோ
யார் அடிச்சா நீ அழுர,
அத்தை அடிச்சாலோ, அரளி பூச்செண்டால,
சித்தி அடிச்சாலோ செம்பந்தி பூச்செண்டால,
மாமா அடிச்சாரோ மல்லிகை பூச்செண்டால,
தாத்தா அடிச்சாரோ தாமரை பூச்செண்டால,
கண்ணம் சிவக்குதடா... கண்ணீரு பெருக்குதடா...
யாரடிச்சி நீ அழுறா... கண்ணே நீ கண்ணுறங்கு....”
தாலாட்டு-2
ஆராரோ ஆரிரரோ
ஆறு ரண்டும் காவேரி,
காவேரி கரையிலயும்
காசி பதம் பெற்றவனே!
கண்ணே நீ கண்ணுறங்கு!
கண்மணியே நீ உறங்கு!
பச்சை இலுப்பை வெட்டி,
பவளக்கால் தொட்டிலிட்டு,
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீ உறங்கு!
நானாட்ட நீ தூங்கு!
நாகமரம் தேரோட!
தேரு திரும்பி வர!
தேவ ரெல்லாம் கை யெடுக்க!
வண்டி திரும்பி வர!
வந்த பொண்கள் பந்தாட!
வாழப் பழ மேனி!
வைகாசி மாங்கனியே!
கொய்யாப் பழ மேனி! - நான் பெத்த
கொஞ்சி வரும் ரஞ்சிதமே!
வாசலிலே வன்னிமரம்!
வம்மிசமாம் செட்டி கொலம்!
செட்டி கொலம் பெத்தெடுத்த!
சீராளா நீ தூங்கு!
சித்திரப் பூ தொட்டிலிலே!
சீராளா நீ தூங்கு!
கொறத்தி கொறமாட!
கொறவ ரெல்லாம் வேதம் சொல்ல!
வேதஞ் சொல்லி வெளியே வர!
வெயிலேறி போகுதையா!
மாசி பொறக்கு மடா!
மாமன் குடி யீடேற!
தையி பொறக்குமடா - உங்க
தகப்பன் குடி யீடேற!
ஆராரோ ஆரிரரோ
கண்ணே நீ கண்ணுறங்கு!
தாலாட்டு-3
ஆராரிரோ ஆரிரரோ என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
மானே மரகதமே - என் கண்ணே
மாசிலாக் கண்மணியே!
ஆராரிரோ ஆரிரரோ என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
அப்பா வருவாரே என் கண்ணே
ஆசமுத்தம் தருவாரே!
ஆராரிரோ ஆரிரரோ என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
மாமன் வருவாரே என் கண்ணே
மாங்கனிகள் தருவாரே!
ஆராரிரோ ஆரிரரோ என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
அத்த வந்தாக்கா என் கண்ணே
அல்லிப்பூ தருவாளே!

இன்னும் பல சொந்தங்களை இணைத்து தாலாட்டு பாடுவர். என் காதை அடைந்தவை இவை மட்டுமே. இவ்வாறு சொந்தபந்தங்களை தாலாட்டியே தன் குழந்தைக்கு அறிமுகபடுத்தி வைப்பாள் அன்னை.
இன்றோ ஸ்கைப்பிலும், வைப்பரிலும் தான் உறவுகளை அறிமுகம் செய்துவைக்க வேண்டியுள்ளது.
தமிழர்திருநாளான இந்த தைத்திருநாளில் நாம் தமிழர்களின் சிறப்பை கொஞ்சம் திரும்பி பார்போம். முன்னேறிச் செல்லும் இந்த தொழில்நுட்பத்துடன் நாமும் வீரநடை போடுவோம். அதே நேரம் நம் தமிழ் மரபில் உள்ள நல்ல விஷயங்களையும் தூசி தட்டி கையில் எடுத்துச் செல்வோம்...

அனைவருக்கும் இனிய தமிழர் தின வாழ்த்துக்கள்........







வெள்ளி, செப்டம்பர் 13, 2013

என் காதில் விழுந்த கேள்விகள்



ஒரு வழியாக விரைவாக, சரியாக வந்துவிட்டது தீர்ப்பு.
தீர்ப்பு வந்தவுடன் ஒரு கூட்டம் கிளம்பிவிட்டது.



மரண தண்டனை சரியான தீர்வல்ல

மரண தண்டனையை பார்த்து, பயந்து திருந்திவிட போவதில்லை தான்.
இந்த 4 பேரையும் சில ஆண்டுகள் அரசாங்க செலவில் வாழ வைத்து, திருத்தி நல்ல ‘மனிதர்களாக வெளியே அனுப்பலாம். நாளை அவர்களால் இந்தியாவே உலகளவில் பெருமைபடலாம்.
ஆனால் நிர்பயாவின் நரம்புகள் அனுபவித்த வலிகளை இந்த 4(+1)களும் அனுபவிக்க வேண்டாமா...

சின்ன பையன் அறிவில்லாம பண்ணிட்டான்பா

17 வயதிலே இவ்வளவு பெரிய தப்பு செய்யும் ‘சிறுவன் 3 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு ‘பெரியவனாய் சமத்து பையனாய் இருப்பானா??!!!!
18 வயது என்பது நாம் நிணயித்த ஒரு வயது... அவ்வளவு தான்...
14வயதில் ஒரு சிறுவன் டிகிரி முடிக்கும் போது இந்த சமூகம் அவனை மிகவும் அதிகமாக பாராட்டுகிறது. ‘வயதுக்கு மீறிய சாதனை என கொஞ்சுகிறது.
அதே 17 வயதில் ஒரு தவறு செய்தால் இவன் ‘சிறுவன் என விதி விலக்கு அளிக்கிறது. ‘வயதுக்கு மீறிய செயல் என தண்டனை தர மறுக்கிறது.

ஒரு பொண்ணு நைட் 10 மணிக்கு படம் பார்த்துத்து பையனோட தனியா சுத்தலாமா

முழு இந்தியாவுக்கே தான் சுதந்திரம் கொடுத்துத்து போயிருக்கான் வெள்ளைக்காரன்.... ஆண்களுக்கு மட்டும் அல்ல.
10 மணிக்கு ஒரு(நான்கு) ஆண்(கள்) மது அருந்திவிட்டு சுற்றுவது தப்பில்லை என்றால், ஒரு பெண் படத்திற்க்கு சென்று விட்டு திரும்புவதும் தப்பில்லை தான்.

இது போன்ற குற்றங்கள் தினந்தோறும் எவ்வளவோ நடக்கத்தான் செய்கின்றன.. ஊடகங்கள் இதை மட்டும் ஏன் பெரிது படுத்த வேண்டும்?

எல்லாத்தையும் பெரிது படுத்தினா அதுக்கு மட்டும் ஒரு சேனல் வேணும்.

இந்த விசயத்தை பெரிது படுத்தியதுனால் தான் ‘வர்மா அறிக்கை என்ற ஒன்றை அரசு நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்ற முடிந்தது.
வர்மா அறிக்கையின் பரிந்துரைகளில் நிறைவேற்றப்பட்ட சில சட்டங்கள்..
19-மார்ச்-2013 அன்று நாடளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அமில வீச்சு- குறைந்த பட்சம் 10ஆண்டுகள், அதிக பட்சம் ஆயுள் தண்டனை
அமில வீச்சு முயற்சி- குறைந்த பட்சம் 5ஆண்டுகள், அதிக பட்சம் 7ஆண்டுகள்.
பாலியல் தொந்தரவு(தொடுதல், தாகாத வார்த்தை, சைகைகள்)- 5ஆண்டுகள் வரை சிறை தண்டனை.
தவறாக புகைப்படம் எடுத்தல்- 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை
பின் தொடர்தல்- அதிகபட்சமாக 1 ஆண்டு வரை.

இவை அனைத்தையும் கொண்டுவந்தது ‘நிர்பயா என்றால் மிகையல்ல.

தண்டனை மட்டும் அல்ல.. பாதிக்கப்ப்ட்ட பெண்களின் மறுவாழ்விற்க்கும் வழிவகை செய்கிறது புதிய சட்டம்..
நடந்த நல்ல விசயங்களை பாருங்கள்.

என்ன தான் சட்டம் இருந்தாலும் தப்பு பண்ணுறவன் தப்பு பண்ண தான் செய்வான்

தப்பு பண்ணுறவன் சட்டத்துக்கு பயப்பட மாட்டான் தான்..
தப்பு செய்பவனை திருத்துவதை விட நல்லவனை தப்பு செய்யாமல் வைத்திருக்கயாவது சட்டம் வேண்டும்.

எந்த திருடனும் போலிஸுக்கு பயந்து தொழிலை விடவில்லை..
எந்த தீவிரவாதியும் இராணுவத்திற்க்கு பயந்து மனிதனாக மாறுவதில்லை. மனித வெடிகுண்டாக வேண்டுமானால் மாறுகிறார்கள்.
ஆனால் பொது மக்கள் போலிஸுக்கும், இராணுவத்திற்க்கும் பயப்படுகிறார்களே.

இப்போ நீங்க ஏதோ கேள்வி கேக்குற மாதிரி இருக்கே.......


விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...