சனி, ஜூன் 01, 2013

கவிதைக்கு பொய் அழகுதானாம்...!

யுரேனியம் கூட வெறும் தூசு தான்
சிறிய நீயுட்ரான் தாக்காத வரை...!
அதுபோல தான் என் கவிதைகளும்
உன் விழிகளின் பார்வை விழாத வரை...!

கவிதையில் கூட பொய் பேசாதவன் நான்...
காரணம்
கற்பனைக்கு செல்லவிடாமல் தடைபோட்ட உன் நிஜ அழகு...

பெண்ணே...
நீ தாராளமாக பொய் பேசு
கவிதைக்கு பொய் அழகுதானாம்...!

உண்மையான சொர்க்கம் விண்வெளி தான்
எவ்வளவு துன்பம் வந்தாலும் அழ முடியாது...!


விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...