சனி, ஜூலை 13, 2013

வைரமுத்துவின் வைர வரிகள்...

இந்தியா உயர்ந்த தேசம். ஆனால் தேசத்தின் உயரத்தில் எல்லா மக்களும் இல்லை.

யார் இல்லையென்றாலும் வாழமுடியும் என்றாலும் நீ இல்லையென்றால் நான் வாழமுடியாது என்று கருதச் செய்வதே காதல்

“மனசு பின்னாடி மனுசன் போனான்னா அவன் மிருகம்; மனுசன் பின்னாடியே மனசு வந்துச்சுன்னா அவன் தெய்வம்“

சத்தியமான பொழப்பு எந்தச் சோதனை வந்தாலும் தாங்கும்; சாமர்த்தியமான பொழப்பு சின்னச் சோதனை வந்தாலும் தாங்காது.

இந்தியாவில் கவலை தருவன கங்கையும் லஞ்சமும். கங்கை குறைந்து கொண்டேபோகிறது; லஞ்சம் கூடிக்கொண்டே போகிறது.

விவசாயம் ஒரு தர்மம். அதில் உழைப்பவன் மட்டுமா பசியாறுகிறான்? உலகமே பசியாறுகிறது. 

உலகப்போரில் கொல்லப்பட்டவர்கள் 60லட்சம்; இன்று பட்டினிச்சாவு 130லட்சம். இப்போது ஆண்டுக்கு 2 உலகப்போர்கள்.

அனுபவிக்கிறது மட்டும்தான் காசு. அதுக்கு மேல பதுக்கி வைக்கிறதெல்லாம் வெறும் நம்பர்னு தெரியாமப் போகுது பலபேருக்கு.

*****

இக்கவிதைகள் யாவும் கவிப்பேரரசின் 'மூன்றாம் உலக போர்' என்னும் நூலில் இடம் பெற்றவை.
உலவெப்பமயமாதல், உலகமயமாக்கல் ஆகியவற்றால் நம் இந்திய விவசாயிகள் சந்திக்கும் மூன்றாம் உலக போரே இந்த நூல்.
இதில் கவிதை இருக்கும்
இதில் காதல் இருக்கும்
இதில் அறிவு இருக்கும்
இதில் உண்மை இருக்கும்
கண்டிப்பா படிங்க.......



விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...