புதன், ஜனவரி 15, 2014

யார் என்று தெரிகிறதா???




  • மகாராஷ்டிரா மாநிலம், அஹமதுநகரில் ஒரு சிறிய கிராமத்தில் கூலித் தொழிலாளின் மகனாய் பிறந்தார்.

  • குடும்பத்தின் வறுமை அவரை 7ம் வகுப்பு வரை படிக்க மட்டுமே அனுமதித்தது. அதற்க்குபின் அவர் அத்தை வேலைக்காக மும்பைக்கு அவரை அழைத்து சென்றுவிட்டார்.

  • அதன்பிறகு இந்திய இராணுவத்தில் ஓட்டுநராக சேர்ந்தார்.1965ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போரில் ‘கெம்கரன் எல்லையில் பணியில் அமர்த்தப்பட்டார். போரின் போது இவர் நண்பர்கள் அனைவரும் இறந்தனர். இவர் மட்டும் காயங்களுடன் தப்பிப் பிழைத்தார்.
  • 1978ல் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். சிக்கிம், ஜம்மூ, அஸ்ஸா என பல மாநில எல்லைகளில் பணிபுரிந்திருந்தார்.
  • ஓய்வுக்கு பின் ‘பிரசார் விரோடி ஜன் அண்டோலன் என்றோ சமூக சேவை அமைப்பை தொடங்கினார். இவரின் சமூக சேவையை பாராட்டி ‘பத்மஸ்ரீ ‘பத்ம பூசன் விருதுகளை வழக்கி அரசு கௌரவித்தது.
  • தான் பிறந்த கிராமத்திற்கு பல நல்ல திட்டங்களை பெற்றுத்தந்துள்ளார். ‘ரிலிகன் சித்தி என்பது தான் இவர் பிறந்த அந்த கிராமம்.
 

  • முழுக்க முழுக்க மாற்று எரிசக்தியையே பயன்படுத்துகின்றனர் இக்கிராம மக்கள். ‘சூரிய, காற்று, இயற்கை எரிவாயு என எல்லாவிதமான ஆற்றலையும் பயன்படுத்துகின்றனர்.
  • மரம் நடுதல், ஏரி, குளம், குட்டைகளை தூர்வாருதல் இங்குள்ள அனைவரின் பகுதிநேர தொழில்.
  • ‘உலக வங்கி சுற்றுச் சூழல் பேணுதலில் இக்கிராமத்தை மாதிரி கிராமமாக அறிவித்துள்ளது.

  • 1995ல் மாகராஷ்டிரா மாநில அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. தனது தீவிர போராட்டத்தால் அவர்களை பதிவியில் இருந்து விலகச் செய்தார்.
  • தன் கிராமத்தில் உள்ள சிறு கோவிலில் தான் தன்னுடைய ஓய்வூதியத்தில் வசித்து வருகிறார் 1940, ஜனவரி15ல் பிறந்த இந்த பிரமச்சாரி.....
  • நமக்கெல்லாம் 2011ல் ‘ஜன் லோக்பால்காக உண்ணாவிரதம் இருந்தபோது தான் இவரை தெரியும். ஆனால் 1995 லிருந்தே ஊழலுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி வருகிறார் இந்த இரண்டாம் காந்தி.
  • முதல்தடவை(2011ல்) ஏதோ உணர்ச்சி பெருக்கில் மிகப்பெரும் ஆதரவை அளித்த இந்திய இளைய இரத்தமும், முகநூலும் & ஊடகங்களும், 2013ன் இறுதியில் இவர் நடத்திய உண்ணாவிரதத்தை சற்றும் பார்க்கவில்லை.
கிசன் பபாட் பாபுரோவ் ஹசாரே.....



விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...