செவ்வாய், ஏப்ரல் 14, 2015

அதிகாரம் : அதிசயம்

1) நமக்கு கிடைத்தது மட்டும் ஆயிரத்து
    முன்னூற்று முப்பது பாக்கள்.

2) இவரையும் குறளையும் வாழ்த்த புலவர்பலர்
    இயற்றினர் திருவள்ளுவ மாலை.

3) தமிழில் உலகை எழுதினாலும் தமிழை
    எழுத வில்லை எங்கும்.

4) அ'வில் ஆரம்பித்து ன்'ல் முடித்து
    தமிழ் நீலகலம் அளந்தார்.

5)  ஐந்து குறளில் பேசினார் உதடுகளுக்கு
    இடையில் உரசல் இல்லாமல்.

6) நூற்றி நாற்ப்பதை தாண்ட வில்லையெந்த
    குறளும் டிவிட்டர் போல.

7) ஒரு நாட்டையோ மொழியையோ கூறாமல்
    உலகபொது மறையாக்கி தந்தார்.

8)  சண்டை போடுவது முதல் சமையல்வரை
     கற்றுதந்த சகலகலா வள்ளுவர்.

9) இரண்டடி ஏழு சீர் பத்து குறள்
    என் கட்டமைத்த வல்லுனர்.

10) அதிகாரமாக சொன்னாலும் அதிகாரமாய் சொல்லாமல்
     அன்பாக சொல்லிய அறிஞரவர்.

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...