சனி, ஏப்ரல் 02, 2016

அந்த சின்ன தேவதை!



ஆயிரம் சிற்பங்கள்
சுமந்தும் கிடைக்காத அழகை
அசையும் சித்திரமாய்
நீ சுற்றி திரிகையில் பெற்றது
அந்த கோவில்!

கல்லில் உறங்கி கிடக்கும்
அந்த சாமியை எழுப்ப
இத்தனை மணிகள் வேணாமே.
உன் கால் கொலுசின் ஓசை போதுமே!

உன் பிஞ்சு விரல்கள் கோர்த்து
கும்பிடும் அழகில்
நாத்திகனான எனக்கும்
தெய்வ தரிசனம்!

உன் நெற்றியில் குங்குமம்
இரு புருவங்களுக்கிடையில்
உதித்த செங்கதிராய்
இன்னும் கொஞ்சம் பிரகாசம்!

கோவில் யானையை
பார்த்ததும் பயப்படும் உன் விழிகள்.
உன் உச்சிதனை முகர முடியா
வருத்ததில் அந்த யானை!

குளத்தின் படிக்கட்டில்
உன் ஈரபாதம் பதித்த தடயத்தில்
என் காலடி நனைத்து கொண்டேன்!

கோபுரங்களை அண்ணாந்து பார்த்துவிட்டு
கோவிலை மீண்டும் கட்டிடமாக்கி
புறப்பட்டுச் சென்றாள்
அந்த சின்ன தேவதை!

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...