திங்கள், ஜனவரி 13, 2014

தொட்டில் பழக்கம்




‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள்...
ஆனால் இன்றோ தொட்டில் (கட்டும்) பழக்கமே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

தொட்டில்-
குழந்தைக்கு கிடைத்த
இரண்டாம் கருவறை’.


மாறிவரும் நாகரிகமாக்கல் பல குழந்தைகளின் இரண்டாம் கருவறையை கலைத்துவிட்டது. தொப்புள் கொடி துண்டிக்கப்பட்டாலும், தொட்டிலில் தொடரும் தாய் சேய் உறவு. பொதுவாக தொட்டிலை தாயின் தன் சேலையில் தான் கட்டுவாள். அதனால் இந்த புதிய உலகத்திலும் குழந்தை தன் தாயின் பரிசத்தையும், வெப்பத்தையும் உணர முடியும். தொட்டில் பொதுவாக 6 பக்கங்களில் அலைவுறும் தன்மை கொண்டது. அவ்வாறு தொட்டிலை ஆட்டும் போது குழந்தைக்கு ஆகாயத்தில் பறக்கும் உணர்வை கொடுக்கும். இது குழந்தையின் பய உணர்வை இது குறைக்கிறது. தொட்டிலில் போடப்படும் குழந்தை சில நிமிடங்களில் உறங்கும் இரகசியம் இதுவரை யாரும் அறியார்.  அதிலும் மரத்தடியில் கட்டப்படும் தொட்டில் சொர்க்கத்திற்கும் ஒரு அடி மேலே. எந்தவொரு கவலையும் இல்லாமல் தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்கலாம் தாய். பொதுவாக தொட்டில் குழந்தையின் முகத்தை மூடி மூச்சி விட சிரமப்பட கூடாது என்பதற்காக நடுவில் ‘தொட்டில் கட்டை என்ற ஒன்றும் இருக்கும். இது பொதுவாக தாய்மாமனின் சீராக இருக்கும். அந்த தொட்டில் கட்டையில் சில விளையாட்டு பொம்மைகள் தொங்கவிட பட்டிருக்கும். இன்று ஒரு சில கடைகளில் மட்டுமே கிடைக்கப்பெருகின்றது அந்த ‘தொட்டில் கட்டை. அதுவும் மரத்தினால் செய்யப்பட்ட கட்டை கிடைப்பது அரிதிலும் அரிது.

சமீபகாலமாக தொட்டில்களை பார்க்க முடிந்தது இரயில் பயணங்களில் தான்.
இரண்டு பெர்த்களின் நடுவில் கட்டப்படும் தொட்டிலில் உறங்க்கும் குழந்தைக்கு, அந்த இரயிலே தாலாட்டு பாடி ஆட்டிவிடும்.
அமெரிக்காரன் இதை கண்டுபிடித்தான், ஜப்பான்காரன் கடலில் இரயில் விட்டான் என பொறாமைபடும் நாம் ஏன் குழந்தைக்கு பாதுகாப்பான, சுகாதாரமான, இயற்க்கையான ஒரு படு(இரு)க்கையை கண்டுபிடித்தோம் என பெருமைபட தவறிவிடுகிறோம்?
தொட்டில் மட்டுமல்ல. தொட்டிலுடன் கூடிய தாலாட்டும் தலைமறைவாகி வருகிறது.
தாலாட்டு-1
ஆரரோ அரிரோ அராரோ அரிரரோ
யார் அடிச்சா நீ அழுர,
அத்தை அடிச்சாலோ, அரளி பூச்செண்டால,
சித்தி அடிச்சாலோ செம்பந்தி பூச்செண்டால,
மாமா அடிச்சாரோ மல்லிகை பூச்செண்டால,
தாத்தா அடிச்சாரோ தாமரை பூச்செண்டால,
கண்ணம் சிவக்குதடா... கண்ணீரு பெருக்குதடா...
யாரடிச்சி நீ அழுறா... கண்ணே நீ கண்ணுறங்கு....”
தாலாட்டு-2
ஆராரோ ஆரிரரோ
ஆறு ரண்டும் காவேரி,
காவேரி கரையிலயும்
காசி பதம் பெற்றவனே!
கண்ணே நீ கண்ணுறங்கு!
கண்மணியே நீ உறங்கு!
பச்சை இலுப்பை வெட்டி,
பவளக்கால் தொட்டிலிட்டு,
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீ உறங்கு!
நானாட்ட நீ தூங்கு!
நாகமரம் தேரோட!
தேரு திரும்பி வர!
தேவ ரெல்லாம் கை யெடுக்க!
வண்டி திரும்பி வர!
வந்த பொண்கள் பந்தாட!
வாழப் பழ மேனி!
வைகாசி மாங்கனியே!
கொய்யாப் பழ மேனி! - நான் பெத்த
கொஞ்சி வரும் ரஞ்சிதமே!
வாசலிலே வன்னிமரம்!
வம்மிசமாம் செட்டி கொலம்!
செட்டி கொலம் பெத்தெடுத்த!
சீராளா நீ தூங்கு!
சித்திரப் பூ தொட்டிலிலே!
சீராளா நீ தூங்கு!
கொறத்தி கொறமாட!
கொறவ ரெல்லாம் வேதம் சொல்ல!
வேதஞ் சொல்லி வெளியே வர!
வெயிலேறி போகுதையா!
மாசி பொறக்கு மடா!
மாமன் குடி யீடேற!
தையி பொறக்குமடா - உங்க
தகப்பன் குடி யீடேற!
ஆராரோ ஆரிரரோ
கண்ணே நீ கண்ணுறங்கு!
தாலாட்டு-3
ஆராரிரோ ஆரிரரோ என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
மானே மரகதமே - என் கண்ணே
மாசிலாக் கண்மணியே!
ஆராரிரோ ஆரிரரோ என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
அப்பா வருவாரே என் கண்ணே
ஆசமுத்தம் தருவாரே!
ஆராரிரோ ஆரிரரோ என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
மாமன் வருவாரே என் கண்ணே
மாங்கனிகள் தருவாரே!
ஆராரிரோ ஆரிரரோ என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
அத்த வந்தாக்கா என் கண்ணே
அல்லிப்பூ தருவாளே!

இன்னும் பல சொந்தங்களை இணைத்து தாலாட்டு பாடுவர். என் காதை அடைந்தவை இவை மட்டுமே. இவ்வாறு சொந்தபந்தங்களை தாலாட்டியே தன் குழந்தைக்கு அறிமுகபடுத்தி வைப்பாள் அன்னை.
இன்றோ ஸ்கைப்பிலும், வைப்பரிலும் தான் உறவுகளை அறிமுகம் செய்துவைக்க வேண்டியுள்ளது.
தமிழர்திருநாளான இந்த தைத்திருநாளில் நாம் தமிழர்களின் சிறப்பை கொஞ்சம் திரும்பி பார்போம். முன்னேறிச் செல்லும் இந்த தொழில்நுட்பத்துடன் நாமும் வீரநடை போடுவோம். அதே நேரம் நம் தமிழ் மரபில் உள்ள நல்ல விஷயங்களையும் தூசி தட்டி கையில் எடுத்துச் செல்வோம்...

அனைவருக்கும் இனிய தமிழர் தின வாழ்த்துக்கள்........







புதன், ஜனவரி 01, 2014

ஸாரி பிரம்மா....

இந்த பிரம்மனுக்கு தலைக்கணம் அதிகம்
நான்கு தலைகள் இருப்பதனால் அல்ல
இவ்வளவு அழகாய் உன்னை படைத்ததினால்...!

*********

பிரம்மனின் ரெஸ்யூமேவை பார்த்தேன்

சாதனைப் பட்டியலில் உன்பெயர்...!
உன் பெயர் மட்டுந்தான்...!


********

இன்னும் அழுது கொண்டிருக்கிறான் பிரம்மன்...!

அழகாய் ஒருத்தியை படைக்க நினைத்து
எத்தனையோ தேவதைகளை படைத்தான்...!

யாரும் இல்லை
அவன் நினைத்த அழகில்...!

விண்ணிலேயே வைத்திருந்தான்
எல்லா தேவதைகளையும்

ஒருத்தியை மட்டும்
தெரியாமல் தொலைத்துவிட்டான்

நினைத்ததை படைத்தும்
தொலைத்தாதால்

இன்னும் அழுதுகொண்டிருக்கிறான் பிரம்மன்...!
 

வியாழன், அக்டோபர் 31, 2013

இந்தியாவின் முதல் பிரதமர்

  • பாரிஸ்டர் ஆக வேண்டும் என்பது அவர் விருப்பம். அதற்கான பணம் முழுவதையும் அவரே சம்பாதித்தார். ஆனால் அவர் அண்ணனுக்கும் அதே ஆசை. அதனால் தன் அண்ணனை அந்த பணத்தில் படிக்க வைத்தார். அதன் பின்னர் 38 வயதில் தான் தன் பாரிஸ்டர் கனவை நினைவாக்கினார்.
  • ஒருமுறை நண்பர்களுடன் சீட்டாட்டம் விளையாடிக் கொண்டிருக்கிறார். பக்கத்தில் காந்தி ஒரு கூட்டத்தில் உரையாடிக் கொண்டிருக்கிறார். நண்பர்கள் கூட்டத்திற்க்கு போகலாம் என்கிறார்கள். இவரோ ‘ஆட்டத்தை தொடருங்கள். பிரம்மச்சரியம், சிக்கனம், எளிமை என ஏதாவது பேசுவார். கோதுமையிலிருந்து கல் பொறுக்கத் தெரிந்தால் சுதந்திரம் கிடைத்துவிடும் என்று வீண் வார்த்தை பொழிவார். நீங்களே போய் கேளுங்கள். நான் வரவில்லை என்று கூறியவர். பின்னாளில் காந்தியின் சொல்லே வேதம் என கருதினார். காந்தியின் மிகுந்த நம்பிக்கைக்குரியவர் ஆனார்.
  • ஏரவடா சிறையில் காந்தியும், இவரும் ஒரே செல்லில் இருந்தனர். காந்தி சிறையிலேயே உண்ணாவிரதம் இருந்தார். காந்திக்கு அருகில் இருந்து அனைத்து பணிவிடைகளும் செய்தார் இவர். தன் அண்ணன் வெளியில் இறந்த போதும் சிறையிலிருந்து பரோலில் வெளி வர மறுத்துவிட்டார்.
வழக்கறிஞகர் தொழில் செய்து நன்றாக சம்பாதித்தார். ஆனால் கதர் இயக்கத்திலும், மது-தீண்டமை ஒழிப்பு போரட்டத்திலும் ஈடுபட தடையாக இருந்ததால் அத்தொழிலையும் கைவிட்டார். காந்தி அதை மிகுந்த மனவேதனையுடன் தன் ‘சத்திய சோதனையில் பதிவு செய்துள்ளார்.
  • குஜராத்தில் வறுமையில் வடிய விவசாயிகளிடமும் ஆங்கில அரசு வரி வசுல் செய்தது. காந்தியின் அறிவுறுத்தல் பேரில் போரட்டத்தில் இறங்கினார். ஆயிரக்கனக்கானோர் கைது செய்துபட்டனர். இருந்தும் போராட்டத்தை தொடர்ந்தார். ஆங்கில அரசால் ஒன்னும் செய்ய முடியவில்லை. வரியை நீக்கியது. இவர் நாடறிந்த தலைவரானார்.
 
  • 1946ல் இடைக்கால அரசு அமைக்க 16 மாகணங்களில் 13 மாகணங்கள் இவரை பிரதமராக முன்மொழிந்தன. வெறும் 3 மாகணங்கள் தான் நேருவை முன்மொழிந்தனர். நேரு தான் மவுண்ட் பேட்டனுடன் பேச்சுவார்த்தையில் உள்ளார். ஒருவேளை நேரு பிரதமராகாவிட்டால் ஆங்கிலேய அரசு சுதந்திரம் தர தயங்கலாம் என பயந்தார் காந்தி. காந்தி கேட்டுக்கொண்டற்க்கு இணங்க பிரதமர் போட்டியிலிருந்து விலகினார். நேரு இந்தியாவின் முதல் பிரதமரானார்.
  • அதற்க்கு பதிலாய் உள்துறை அமைச்சராக்கப்பட்டார். மிகவும் திறமையாக செயல்பட்டு சிதறிக்கிடந்த சுமார் 560 சமஸ்தானங்களை ‘இந்தியா என்ற நாடாக்கினார். இது மிகப்பெரும் வரலாற்றுச்சாதனை.
  • இராணுவ நடவடிக்கையின் மூலம் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க முயன்றார். ஆனால் நேரு அதற்க்கு அனுமதி மறுத்துவிட்டார்.
  • மனமுடைந்த இவர் காந்தியை சந்தித்து பதவி விலக போவதை தெரிவித்தார். இவர் சந்தித்து சென்ற சில நிமிடங்களில் காந்தி கொல்லப்பட்டார். உள்துறை அமைச்சர் என்ற முறையில் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வற்புறுத்தப்ப்ட்டார்.
  • “இவர் பிரதமராக வந்திருந்தால் இன்று காஷ்மீர் பிரச்சனையே இருந்திருக்காது – வரலாற்று ஆசிரியர்கள்
  • “இவர் பிரமராக வந்திருந்தால் இந்தியாவில் இன்னும் சிறப்பான ஆட்சியை கண்டிருக்கலாம்- இராஜேந்திர பிரசாத்(முதல் குடியரசு தலைவர்)
  • இவரின் பிறந்ததினம் இன்று. இரும்பு மனிதர் தான். ஆனால் மென்மையான இதயம் கொண்டவர்.
  • சர்தார் வல்லபாய் படேலின் புகழ் என்றும் ஓங்குக.
 

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...