ஞாயிறு, மார்ச் 09, 2014

பார்க்காதே... பார்க்காதே...



பார்க்காதே... பார்க்காதே
ஐயையோ பார்க்காத...
நீ பார்த்தா பறக்குரேன்... பாத மறக்குறேன்...
பேச்ச குறைக்கிறேன் சட்டென்னு தான்....
இந்த ஒரு பார்வையால தானே பாழாகுறேன்..


பார்வையால பாழாகுறது இருக்கட்டும்... பார்க்கும் போது எப்படி நம் கண்களுக்கு வண்ணங்கள் தெரிகிறது?
ஒரு பொருள் இயற்க்கையாக எப்படி வண்ணம் பெறுகிறது?
உண்மையில் வண்ணங்கள் என்று எதுவும் உண்டா?
பதிலுக்காக கொஞ்சம் அலைவோமா.....

சூரியனின் மையப்பகுதியில் தொடர்ந்து ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் அணுக்களை உருவாக்குகின்றன. இவ்வாறு நடைபெறும் அணுக்கரு இணைவு நிகழ்வின் போது மிக அதிகமான ஆற்றல் வெப்பமாக வெளியிடப்படுகிறது. இரு அணுக்கள் இணையும் போது உருவாகும் மூன்றாவது அணுவின் எடை முதல் இரு அணுக்களின் எடைகளின் கூடுதலாக இருக்காது. உதாரணமாக ஒரு ஹீலியம் அணுவின் எடை 1கிராம் என்றால் உருவாகும் ஹைட்ரஜனின் எடை 2கிராமுக்கு குறைவாக இருக்கும். இதில் ஏற்படும் எடை இழப்பு ஐன்ஸ்டினின் E=mc2 என்ற சமன்பாட்டின் படி ஆற்றலாக மாற்றப்படும். தோராயமாக 0.3% எடையிழப்பு ஏற்படுவதாக அறியப்படுகிறது.

அது சரி.... எப்படி இரண்டு ஹைட்ரஜன் அணுக்களை இணைக்க முடியும்?
இரு அணுக்களை பிணைக்கும் விசை(Driving Force) எங்கிருந்து கிடைக்கிறது?அதுவும் முழுதும் நேர்மின் அணு.(எலக்ட்ரான் இருப்பதில்லை) இரு நேர்மின் அணுக்களுக்கு இடையே உள்ள விலக்குவிசை மீறி பிணைக்கும் விசை யாது?

சூரியன் மையப்பகுதியில் மட்டுமே அணுக்கரு இணைவு நடைபெறும். மையப்பகுதியில் ஈர்ப்புவிசை அதிகம் என்பதால் நேர்மின் அணுக்களை இணைக்கும் விசை தாராளமாக கிடைக்கிறது.

1) முதலில் இரு புரோட்டானகள் இணைந்து ஒரு டியூட்ரியம் அணு உண்டாகிறது.
2) அந்த டியூட்ரியம் அணு ஒரு புரோட்டான் அணுவுடன் இணைந்து ஹீலியம்-3(ஐசோடோப்பு) மற்றும் காமா கதிர்களை வெளியிடுகிறது.
3) பின் இரு ஹீலியம்-3 அணுக்கள் இணைந்து ஹீலியம்-4 அணு உருவாகிறது.
உண்மையில் ஹைட்ரஜன் அணுக்கள் மட்டும் இணைவதில்லை. சூரியனில் 85% ஆற்றல் இவ்வகையில் தான் உருவாகிறது.
மீதமுள்ள 15% ஆற்றல் கீழ்க்கண்ட வினையின் மூலம் கிடைக்கிறது.

1) ஒரு ஹீலியம்-3 அணுவும், ஒரு ஹீலியம்-4 அணுவும் இணைந்து பெரிலியம்-7 அணு உண்டாகிறது.
2) ஒரு பெரிலியம்-7 அணு எலக்ட்ரானுடன் இணைந்து லித்தியம்-7 அணு உருவாகிறது.
3) லித்தியம்-7 புரோட்டானுடன் இணைந்து இரு ஹீலியம்-4 அணு உருவாகிறது.
இவ்வாறு வெளிப்படும் வெப்ப ஆற்றல் மின் காந்த அலைகளாக அண்டத்தில் பரவுகிறது.


சூரியன் வெளியிடும் இந்த மின்காந்த அலைவரிசையில் மூன்று அடுக்குகள் உள்ளன. ஒரு அடுக்கில் புலனாகும் அலைகற்றை இருக்கும். இதில் ஏழு நிறங்கள் உள்ளன(அதாவது அலைநீளம் 390nm முதல் 700nm வரை). இந்த அடுக்கிற்கு முன்னால் குறைந்த அலைநீளம் கொண்ட  ரேடியோ அலைகள், மைக்ரோ அலைகள், அகச்சிவப்பு அலைகள் உள்ளன. பின்னால் புறஊதா கதிர்கள், காமா கதிர்கள், எக்ஸ்ரே கதிர்கள் உள்ளன. ஆனால் 50% புலனாகும் அலைகற்றையும், 40% ரேடியோ அலைகற்றையும், வெறும் 10% புறஊதாகதிர்களும் அடங்கியுள்ளன(தப்பிச்சோம்)...

அலையும், வண்ணமும்:
ரொம்ப அலைஞ்சிட்டிங்களா.... கொஞ்சம் கலர்புல்லா பார்ப்போமா??
அலைநீளம் 390nm முதல் 700nm வரை உள்ள மின்காந்த அலைகள் பூமியை அடைந்து ஏதேனும் ஒரு பொருளின் மீது படும்பொழுது, எல்லா அலைநீள கதிர்களையும் உட்கவர்ந்து(Adsorb) ஏதேனும் ஒரு அலைநீள கதிரை மட்டும் எதிரொளிக்கிறது(Reflect).
இதனால் அப்பொருள் எதிரொளிக்கப்பட்ட அலைநீளத்தின் வண்ணத்தில் தெரிகிறது. எல்லா அலைநீளத்தையும் எதிரொளிக்கும் பொருள் வெள்ளை நிறத்திலும், எல்லா அலைநீளத்தையும் உட்கவரும் பொருள் கருமை நிறத்திலும் காட்சியளிக்கும். ஆக இயற்க்கையில் எல்லா பொருட்களும் கருப்பே(வண்ணமற்றவை)..ஆப்பிள் உண்மையில் சிவப்பு அல்ல... மரங்கள் உண்மயில் பச்சை அல்ல.. நம் ஹீரோயின்கள் உண்மையில் இவ்வளவு நிறம் அல்ல..... ‘எல்லாம் மாயையே
 
சூரியன், பொருளிலிருந்து அடுத்ததாக கண்களுக்கு பயணத்தை தொடருவோம்.. எப்படி இந்த கால் இஞ்ச் கண்கள் கலர்புல்லாக காண உதவுகிறது???
கண்கள்:
பல மில்லியன் குச்சி செல்கள், கூம்பு செல்கள் நிறைந்தது நம் கண்கள்.
ஏற்கனவே ஒரு பொருள் ஒரு அலைநீளத்தை மட்டும் தான் எதிரொளிக்கும் என பார்த்தோம் அல்லவா.. அந்த அலைநீள ஒளி மட்டும் நம் கண்ணின் விளித்திரையை அடையும்.
குச்சி, கூம்பு செலகளில்  S, M, L  என பல வகைகள் உள்ளன.  மஞ்சள் அல்லது பச்சை நிற ஒளி விழுன் பொழுது L, M வகை கூம்பு செலகள் அதிகமாகவும், S கூம்பு செல்கள் மிக் குறைவாகவும் தூண்டப்படுகிறது,
சிகப்பு நிற ஒளி L வகை கூம்பு செல்களை அதிகமாகவும், M, sS வகை கூம்பு செல்களை குறைவாகவும் தூண்டுகிறது. 

அனைத்து கூம்பு, குச்சி செல்களும் புரதம்(ஸ்காட்டாப்சின்) மற்றும் வைட்டமின்-ஏ னால் ஆனது. ஒளியானது இந்த செல்களில் விழும்பொழுது வேதிவினை நடைபெறுகிறது(ஏனென்றால் ஒளி தன்னுள் ஆற்றலை கொண்டுள்ளது. அந்த ஆற்றலால் வேதிவினை நடைபெறுகிறது).
வேதிவினையில் உருவாகும் மெடரோடாப்சின்-2 மின்காந்த தூண்டலை ஏற்படுத்துகிறது(ஆக்ஸிஜன் ஒடுக்க வினையினால்). இது பார்வை நரம்பின் மூலம் மூளைக்கு கடத்தப்படுகிறது. இந்த பார்வை நரம்பு மூளையின் பின்புறம் ஆக்ஸிபட்டல் என்ற பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும். 

கண், காது, மூக்கு, தோல் என அனைத்து உணர் உறுப்புகள் மூலம் பெறப்படும் செய்திகள் மூளைக்கு மின்காந்த தூண்டலாகவே அனுப்பபடுகிறது. மூளை இதை எப்படி உணருகிறது???

அடுத்த பகுதியில்.....

ஞாயிறு, ஜனவரி 19, 2014

சந்திரனை தொட்டது யார்



சாய்ந்து சாய்ந்து தான்
பார்த்துக் கொண்டிருக்கிறது
அந்த நிலவை...
#இந்த பூமி...
(23.5டிகிரியில்)

பூமியின் நிழலில்
ஒளிந்து கொண்டே
வெட்கத்துடன் எட்டிப்பார்க்கிறது
பூமியை....
#அரைநிலா...

கவிதை என்ற பெயரில் கிறுக்கி கொண்டிருக்கும் நான் முதல்
உண்மையாகவே கவிதை எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர்கள் முதல்
நிலாவை தொடாதவர்கள் யாவரும் இலர்.


ஆனால் உண்மையாகவே நிலாவை முதன்முதலில் தொட்டவர் நீல் ஆம்ஸ்ட்ராங்க்.
(கடுப்பாகாதிங்க.. ப்ளீஸ், இனிமே தான் படமே ஆரம்பிக்கவிருக்கிறது)

1961
அமெரிக்கா வெள்ளை மாளிகை.
(ஒரு தடவ கண்ணை மூடி, திறந்திங்கனா வெள்ளை மாளிகை முன்னாடி நிற்பிங்க. தேவயாணி மாதிரி விசா வாங்க தேவையில்லை.)

கென்னடி(அதிபர்): நிலவிற்கு முதன்முதலில் ஒரு நாடு மனிதனை அனுப்பும் என்றால் அது அமெரிக்காவாகத் தான் இருக்கும்.

ஏதோ சொல்லியாச்சி... ஏதாவது செய்யணுமே...
ஒட்டுமொத்த அமெரிக்க மானமும் அவர் கூறிய இந்த வார்த்தையில் அடகு வைக்கபட்டுவிட்டது.. யாராவது (விண்வெளி) கப்பல் ஏறி சென்றால் தான் அந்த மானம் திரும்ப வரும்.

மானத்தை பின் தள்ளி மனதில் பயம் முண்னணி வகித்தது.
‘தென்னை மரம் அளவிற்கு புதைமணல் இருக்குமாமே
‘பயங்கர புதை குழிகள் இருக்குமாமே
‘இறங்க இடமில்லாமல் வெறும் கூரமையான பாறைகள்
என ஏகப்பட்ட வதந்திகள் அங்கும் வாக்கிங்க் போயிக் கொண்டிருந்தன..

ஆனால் மானத்தை காப்பாற்றியே ஆகணும்... அண்ணன் அமெரிக்காவுக்கு.

1966
ரஷ்யா
லூனா-9 என்ற ஆளில்லா விண்கலத்தை வெற்றிகரமாக நிலாவிற்கு அனுப்பியது.
ஆளில்லா விண்கலம் அழகாக நிலவை படம் பிடித்து ரேடியோ சிக்னல்களாக பூமிக்கு அனுப்பியது.
வெட்கமில்லா அமெரிக்கா அழகாக அதை திருடியது இங்கிலாந்து உதவியுடன்.
ஒரு வழியாக பயத்தை பின்னுக்கு தள்ளி மானம் வென்றது.
திருடிய அந்த படத்தின் உதவியால் அந்த வதந்திகள் அனைத்தும் பொய் என தெளிந்தது அமெரிக்கா. துணிச்சலாக களத்தில் இறங்கியது.

1967 அக்டோபர்,11
மீண்டும் அமெரிக்கா
அப்பலோ-1 என்ற விண்கலம் நிலவை நோக்கி செல்ல தயாராக இருந்தது. ஒரு சிறிய மின்சார கோளாறு. கிளம்பும் சற்று நேரத்திற்கு முன்பு வெடித்து சிதறியது.
விர்ஜில் கிம்சம், எட்வர்ட் வோய்ட், ரோஜர் ஸாஃப் என்ற மூன்று அப்பாவி வீரர்கள் இறந்தார்கள். ஆம், அவர்கள் நிலவில் முதன் முதலில் காலடி வைப்பதாக இருந்தவர்கள். ஆனால் அவர்கள் பயணம் தொடங்காமலே முடிந்தது.

1969 ஜூலை16
அதே அமெரிக்கா
அப்பலோ-11, நீல் ஆம்ஸ்ட்ராங்க், ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் விண்வெளிகப்பலில் கிளம்பினர். அதில் ஈகிள் என்ற விண்வெளி வாகனமும் இருந்தது. நான்கு நாள் நீண்ட பயணத்திற்கு பிறகு niniநிலவு வந்தது.(ஆமா, மூணு நாள் நைட்டும் வந்துருக்கும்ல) காலின்ஸ் டிரைவர் போல. ஆம்ஸ்ட்ராங்க், ஆல்ட்ரின் இருவரையும் ஈகிள் வாகனத்தின் மூலம் இறக்கிவிட்டு விண்வெளிகப்பலில் நிலாவை(அந்த நிலாவைத்தாங்க) சுற்ற கிளம்புவிட்டார். ஆம்ஸ்ட்ராங்க், ஆல்ட்ரின் இருவரும் ஈகிள் மூலம் இறங்கினர். சுமார் 2 மணிநேரம் 31 நிமிடம் நிலவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். நிலவில் ஆம்ஸ்ட்ராங்க்  தன்னை ஒரு புகைபடம் கூட எடுக்கவில்லை. நாம் பார்ப்பது எல்லாம் ஆல்ட்ரின்  புகைபடம் தான். பின் காலின்ஸ்காக காத்திருந்தனர். காலின்ஸ் வந்ததும் அந்த கப்பலில் ஏறி அமெரிக்காவின் மானத்தை காப்பாற்றினர்.

சுபம்....


புதன், ஜனவரி 15, 2014

யார் என்று தெரிகிறதா???




  • மகாராஷ்டிரா மாநிலம், அஹமதுநகரில் ஒரு சிறிய கிராமத்தில் கூலித் தொழிலாளின் மகனாய் பிறந்தார்.

  • குடும்பத்தின் வறுமை அவரை 7ம் வகுப்பு வரை படிக்க மட்டுமே அனுமதித்தது. அதற்க்குபின் அவர் அத்தை வேலைக்காக மும்பைக்கு அவரை அழைத்து சென்றுவிட்டார்.

  • அதன்பிறகு இந்திய இராணுவத்தில் ஓட்டுநராக சேர்ந்தார்.1965ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போரில் ‘கெம்கரன் எல்லையில் பணியில் அமர்த்தப்பட்டார். போரின் போது இவர் நண்பர்கள் அனைவரும் இறந்தனர். இவர் மட்டும் காயங்களுடன் தப்பிப் பிழைத்தார்.
  • 1978ல் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். சிக்கிம், ஜம்மூ, அஸ்ஸா என பல மாநில எல்லைகளில் பணிபுரிந்திருந்தார்.
  • ஓய்வுக்கு பின் ‘பிரசார் விரோடி ஜன் அண்டோலன் என்றோ சமூக சேவை அமைப்பை தொடங்கினார். இவரின் சமூக சேவையை பாராட்டி ‘பத்மஸ்ரீ ‘பத்ம பூசன் விருதுகளை வழக்கி அரசு கௌரவித்தது.
  • தான் பிறந்த கிராமத்திற்கு பல நல்ல திட்டங்களை பெற்றுத்தந்துள்ளார். ‘ரிலிகன் சித்தி என்பது தான் இவர் பிறந்த அந்த கிராமம்.
 

  • முழுக்க முழுக்க மாற்று எரிசக்தியையே பயன்படுத்துகின்றனர் இக்கிராம மக்கள். ‘சூரிய, காற்று, இயற்கை எரிவாயு என எல்லாவிதமான ஆற்றலையும் பயன்படுத்துகின்றனர்.
  • மரம் நடுதல், ஏரி, குளம், குட்டைகளை தூர்வாருதல் இங்குள்ள அனைவரின் பகுதிநேர தொழில்.
  • ‘உலக வங்கி சுற்றுச் சூழல் பேணுதலில் இக்கிராமத்தை மாதிரி கிராமமாக அறிவித்துள்ளது.

  • 1995ல் மாகராஷ்டிரா மாநில அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. தனது தீவிர போராட்டத்தால் அவர்களை பதிவியில் இருந்து விலகச் செய்தார்.
  • தன் கிராமத்தில் உள்ள சிறு கோவிலில் தான் தன்னுடைய ஓய்வூதியத்தில் வசித்து வருகிறார் 1940, ஜனவரி15ல் பிறந்த இந்த பிரமச்சாரி.....
  • நமக்கெல்லாம் 2011ல் ‘ஜன் லோக்பால்காக உண்ணாவிரதம் இருந்தபோது தான் இவரை தெரியும். ஆனால் 1995 லிருந்தே ஊழலுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி வருகிறார் இந்த இரண்டாம் காந்தி.
  • முதல்தடவை(2011ல்) ஏதோ உணர்ச்சி பெருக்கில் மிகப்பெரும் ஆதரவை அளித்த இந்திய இளைய இரத்தமும், முகநூலும் & ஊடகங்களும், 2013ன் இறுதியில் இவர் நடத்திய உண்ணாவிரதத்தை சற்றும் பார்க்கவில்லை.
கிசன் பபாட் பாபுரோவ் ஹசாரே.....



விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...