சனி, மே 10, 2014

மர்ம முடிச்சு




இவ்வுலகில் தனக்கு தானே பெயர் வைத்துக் கொள்ளும் திறமையும், உரிமையும் ஒன்றிற்கு மட்டுமே உள்ளது....அது என்ன????

மிகவும் வியப்பாக தான் இருந்தது... முதன்முதலில் இந்த கணினியின் சுட்டுவிரல்(அதன் சுட்டி) பிடித்து கணக்கிடுகையில். இருபதாம் வாய்ப்பாடு வரை பல நூறு தடவை படித்தும், எழுதியும் பார்த்ததால் தான் சில நிமிடங்களில் கணக்கிட கற்றுகொண்டேன். வாயில்லா இந்த கணினி எங்கு கற்றுக் கொண்டது மில்லிநொடியில்... மில்லியன் கணக்கிட. பதில் தெரியாமல் பள்ளியில் பைத்தியம் பிடிக்க வைத்த கேள்வி...


கல்லூரியில் முதலாமாண்டு தான் தெளி(ரி)ந்தது. நம் கணினிக்கும் சொல்லித்தான் குடுக்கிறார்கள்.. ப்ரோகிராம்(நிரல்) என்ற பெயரில் புரிதலாக... அப்படியென்றால் நம் மூளையும் ப்ரோகிராம் செய்யப்பட்ட ஒன்றாகதான இருக்க வேண்டும். சுற்றுபுறத்திலிருந்து இன்புட்(உள்ளீடு) எடுத்துக்கொண்டு அதனை பிராசஸ்(பரிசீலனை) செய்து தேவையான கட்டளைகளை பிறப்பிக்கிறது. இந்த ப்ரோகிராமின் பெரும்பகுதி ஜீன் என்னும் சிப்பில் எழுதிவைக்கபட்டுள்ளது. மீதிபகுதியானது பேரண்டத்தில் உள்ள நட்சத்திரங்களை விட அதிகமாக உள்ள நீயுரான்களில் நம்மால் எழுதப்படுகிறது. கணினியின் நினைவானது அதில் உள்ள ட்ரான்சிஸ்டர்களை அடிப்படையாக கொண்டது. இந்த டிரான்சிஸ்டர்களில் இரு வகையான ‘Gate’ உள்ளது.
1) Floating Gate
2) Control Gate

ஒரு Floating Gate ஆனது மற்றொரு floating gate உடன் control gate வழியாக இணைகிறது. நாம் கணிக்கு தரும் தரவுகள் அனைத்தும் இவ்வாறு இரு Floating Gate இணைவதின் மூலம் சேமிக்கப்படுகிறது. நாம் தரவுகளை அழிக்கும்போது மீண்டும் இந்த இணைப்பானது பிரிக்கப்பட்டு வேறொரு நினைவிற்க்காக ஒதுக்கிவைக்கப்படுகிறது. 


இதேபோல் மூளையில் இரு நீயுரான்கள் இணையும் போது அங்கே தகவல்கள் சேமிக்கபடுகிறது. அந்த இரு நீயுரான்கள் ‘டைவர்ஸ் வாங்கும் போது நம் நினைவில் இருந்து அந்த தகவல்கள் அழிக்கப்படுகிறது.
இந்த மூளை தகவல்களை சேமிக்கும் விதம் மிகவும் வியப்பானது.
உதாரணமாக ‘தண்ணீர் என்ற வார்த்தையை நாம் நினைத்தவுடன் அதன் நிறம் நம் கண் முன்னே வந்து செல்லும். இது மூளையின் பின் பகுதியில் சேமிக்கபட்டிருக்கும். அதன் சுவையை நினைக்கும் போது மூளையின் முன் பகுதி அதை பற்றிய தகவலை தரும். தண்ணீரை தொடும்போது வரும் குளிர்ச்சியை நினைத்தால் மூளையின் பக்கவாட்டு பகுதி இப்படி தான் ஜில்லென்று இருக்கும் என சொல்லும்.

இந்த தகவல்கள் எல்லாம் முன் எப்பொழுதோ பல்வேறு புலன் உறுப்புகளால்(கண், மூக்கு, தோல்) மூளைக்கு அனுப்பபட்ட தகவல்கள். இந்த புலன் உறுப்புகள் மூளையின் எந்த பகுதியில் இணைக்கபட்டு இருக்கிறதோ, அந்த பகுதியில் தான் சேகரித்த தகவல்களை சேமித்து வைக்கிறது. சுருங்க கூறின் மூளைக்கும் பல்வேறு துறை சார்ந்த மந்திரிகள் உண்டு.

எத்தனை மந்திரிகள் இருந்தாலும் பிரதம மந்திரியாக ‘ஹிப்போகெம்பஸ் செயல்படுகிறது. தண்ணீரை பற்றிய மேற்கூறிய அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைத்துஇது தான் தண்ணீர் என சேமித்து வைக்கிறது(தண்ணீரை அல்ல.... தகவலை!!!)

கணினியில் ‘0 & ‘1 என பதியப்படும் தகவல்கள் மூளையில் எவ்வாறு பதியப்படுகின்றன???

முதலில் கொஞ்சம் ‘கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகனும். நரம்பு செல்களுக்கும்(நீயுரான்கள்), சாதாரண செல்களுக்கும் இடையில். இவ்விரு செல்களும் இணையும் இடத்திற்கு ‘ஸினாப்ஸ் என்று பெயர். இவ்விரு செல்களும் உரசி செல்லும் போது வேதியியல் மின்சாரவியலாகிறது. நரம்பு செல் ‘மின்சாரம் என்மீது பாய்கின்றதே என பாடிக்கொண்டே அந்த தகவலை மூளைக்கு எடுத்துச் செல்லும் சாதாரணசெல் உரசிய மயக்கத்தில்...

பின் அந்த மின்தூண்டல் மீண்டும் ஒரு ‘கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் செய்து இரு நீயுரான்களை இணையச் செய்து நினைவாக சேமிக்கிறது.
உங்கள் மூளையின் சில மில்லியன் நீயுரான்களுக்கு முடிச்சு போட நேரம் ஒதுக்கியதற்க்கு நன்றி...
மீண்டும் சந்திப்போம்....


  


செவ்வாய், ஏப்ரல் 01, 2014

கட்டியணைத்து...முத்தமிட்டு...




கட்டியணைத்து
முத்தமிட்டு
கொஞ்சி விளையாடிய
தவழும் குழந்தை
எட்டி உதைத்து
மறந்துவிடுகிறது இந்த பூமியை...
நடக்க தெரிந்ததும்...

முன்னோக்கி நடந்தான் மனிதன்...
சற்றே வழுக்கியது இந்த பூமிக்கு...

குப்பைதொட்டி இல்லா தெரு இல்லை..
குப்பை உள்ள தொட்டியும் இல்லை...

தூசுவால் உருவான பூமி...
இன்று
மாசுவால் மயானமாகிறது...

மட்கா குப்பை(பாலீத்தின்) மண்ணையும்,
மட்கும் குப்பை(பணம்) மனதையும்
பாழ்படுத்தும் பண்பாட்டில் பயணிக்கின்றோம்...

சுற்றம் மட்டுமல்ல
சுற்றுச்சூழலும் தூரம் சென்றுவிட்டது
உலகை சுருக்கிய இந்த தொழில்நுட்ப யுகத்தில்...

பச்சை பட்டு உடுத்திய
இந்த பூமி
கற்பழிக்கபட்டு கொண்டே இருக்கிறது...
அதைக் கண்டு கண்ணீர் சிந்த
அந்த வானுக்கும் வற்றிவிட்டது...

கொஞ்சம் கொஞ்சமாக
இயற்க்கை எய்து கொண்டிருக்கிறது... இயற்க்கை
அதை காப்பாற்றுவது நம் கையில்...

Foolஏப்ரல்.1 முட்டாள்கள் தினம்(Fools Day) கொண்டாடுவதற்க்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன்.
இருந்தாலும் இன்று படிமநிலை எரிபொருள் தினம் (Fossil Fuels Day).
தோண்டி தோண்டி எடுக்கப்படும் நிலக்கரி, பெட்ரோலியம் என்றோ ஒரு நாள் கிடைக்காமல் நம்மளை முட்டாளாக்க போகிறது. அதற்க்காக கூட இந்த முட்டாள் தினம் கொண்டாடபடலாம்..

2000மெகாவாட் உற்பத்தி செய்யகூடிய ஒரு அனல் மின் நிலையம் ஒரு நாளைக்கு 20000டன் நிலக்கரியை எரிக்க வேண்டியுள்ளது. இந்த அளவுக்கு நிலக்கரியை எரிப்பதால் வெளிப்படும் சல்பர்-டை-ஆக்ஸைடும், நைட்ரஸ் ஆக்ஸைடும் எவ்வளவு  என்று கணக்கிட்டு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எரிப்பதால் மட்டும் அல்ல. நிலக்கரியை வெடியெடுக்கும் போதும், எரிந்த பின் சாம்பலை வெளியேற்றும் போதும் கூட பெருமளவு மாசுபடுகிறது.


அனுமின்சாரத்தை விட அனல்மின்சாரம் பாதுகாப்பானது. குறைவான மாசுபாடு தான் உடையது என்றாலும் இன்னும் சில வருடங்களுக்கு மட்டுமே போதுமான இருப்பு இருப்பதால் அதனை குறைவாக உபயோகபடுத்தலே நலம்.

நம் கையில் என்ன இருக்கிறது??

நிலக்கரியில் இருந்து முக்கியமாக பெறப்படுவது மின்சாரம்.
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தலின் மூலம் பர்ஸில் பணத்தையும், பூமியில் நிலக்கரியையும் சேமிக்கலாம்..

சன்னலை அடைத்து ஏசி காற்றில் இருப்பதை விட சன்னலை திறந்து ஓசி காற்றில் தென்றலுடன் கைகோர்த்து கவிதை கிறுக்கலாம்.

யார் மேலோ உள்ள கோபத்தை காட்ட நல்ல வாய்ப்பாக நம் துணியை அடித்து, கசக்கி, பிழிந்து துவைக்கலாம்.. , வாஷிங்க்மெஷின் இல்லாமலே..

களிமண்ணால் செய்யப்பட்ட பல பொம்மைகள் வைத்து கொலு கொண்டாடுவதை போல, ஒரு மட்பானை வாங்கி வைத்து குலு குலு என கொண்டாடலாம்....

மின்விளக்கு, மின்விசிறி போன்றவற்றை சொந்தக்காரர்கள் போல் வைத்திருக்க வேண்டும்.. தேவைப்படும் போது வைத்துக் கொண்டு தேவை இல்லாதபோது அணைத்து வைக்கலாம்...

மொத்ததுல பழைய கற்காலத்துக்கு போகனும்... அப்படித்தன சொல்ல வர...
அப்படினு கேட்க தன இந்த மானிட்டர் பக்கம் கோபமா வரிங்க...

எதையும் உபயோகப்படுத்த வேண்டாம் என்பது என் கருத்து அல்ல...
தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்துங்கள் என்பதே உங்கள் பாதம் தொட்ட என் அன்பான வேண்டுகோள்.....



ஞாயிறு, மார்ச் 09, 2014

பார்க்காதே... பார்க்காதே...



பார்க்காதே... பார்க்காதே
ஐயையோ பார்க்காத...
நீ பார்த்தா பறக்குரேன்... பாத மறக்குறேன்...
பேச்ச குறைக்கிறேன் சட்டென்னு தான்....
இந்த ஒரு பார்வையால தானே பாழாகுறேன்..


பார்வையால பாழாகுறது இருக்கட்டும்... பார்க்கும் போது எப்படி நம் கண்களுக்கு வண்ணங்கள் தெரிகிறது?
ஒரு பொருள் இயற்க்கையாக எப்படி வண்ணம் பெறுகிறது?
உண்மையில் வண்ணங்கள் என்று எதுவும் உண்டா?
பதிலுக்காக கொஞ்சம் அலைவோமா.....

சூரியனின் மையப்பகுதியில் தொடர்ந்து ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் அணுக்களை உருவாக்குகின்றன. இவ்வாறு நடைபெறும் அணுக்கரு இணைவு நிகழ்வின் போது மிக அதிகமான ஆற்றல் வெப்பமாக வெளியிடப்படுகிறது. இரு அணுக்கள் இணையும் போது உருவாகும் மூன்றாவது அணுவின் எடை முதல் இரு அணுக்களின் எடைகளின் கூடுதலாக இருக்காது. உதாரணமாக ஒரு ஹீலியம் அணுவின் எடை 1கிராம் என்றால் உருவாகும் ஹைட்ரஜனின் எடை 2கிராமுக்கு குறைவாக இருக்கும். இதில் ஏற்படும் எடை இழப்பு ஐன்ஸ்டினின் E=mc2 என்ற சமன்பாட்டின் படி ஆற்றலாக மாற்றப்படும். தோராயமாக 0.3% எடையிழப்பு ஏற்படுவதாக அறியப்படுகிறது.

அது சரி.... எப்படி இரண்டு ஹைட்ரஜன் அணுக்களை இணைக்க முடியும்?
இரு அணுக்களை பிணைக்கும் விசை(Driving Force) எங்கிருந்து கிடைக்கிறது?அதுவும் முழுதும் நேர்மின் அணு.(எலக்ட்ரான் இருப்பதில்லை) இரு நேர்மின் அணுக்களுக்கு இடையே உள்ள விலக்குவிசை மீறி பிணைக்கும் விசை யாது?

சூரியன் மையப்பகுதியில் மட்டுமே அணுக்கரு இணைவு நடைபெறும். மையப்பகுதியில் ஈர்ப்புவிசை அதிகம் என்பதால் நேர்மின் அணுக்களை இணைக்கும் விசை தாராளமாக கிடைக்கிறது.

1) முதலில் இரு புரோட்டானகள் இணைந்து ஒரு டியூட்ரியம் அணு உண்டாகிறது.
2) அந்த டியூட்ரியம் அணு ஒரு புரோட்டான் அணுவுடன் இணைந்து ஹீலியம்-3(ஐசோடோப்பு) மற்றும் காமா கதிர்களை வெளியிடுகிறது.
3) பின் இரு ஹீலியம்-3 அணுக்கள் இணைந்து ஹீலியம்-4 அணு உருவாகிறது.
உண்மையில் ஹைட்ரஜன் அணுக்கள் மட்டும் இணைவதில்லை. சூரியனில் 85% ஆற்றல் இவ்வகையில் தான் உருவாகிறது.
மீதமுள்ள 15% ஆற்றல் கீழ்க்கண்ட வினையின் மூலம் கிடைக்கிறது.

1) ஒரு ஹீலியம்-3 அணுவும், ஒரு ஹீலியம்-4 அணுவும் இணைந்து பெரிலியம்-7 அணு உண்டாகிறது.
2) ஒரு பெரிலியம்-7 அணு எலக்ட்ரானுடன் இணைந்து லித்தியம்-7 அணு உருவாகிறது.
3) லித்தியம்-7 புரோட்டானுடன் இணைந்து இரு ஹீலியம்-4 அணு உருவாகிறது.
இவ்வாறு வெளிப்படும் வெப்ப ஆற்றல் மின் காந்த அலைகளாக அண்டத்தில் பரவுகிறது.


சூரியன் வெளியிடும் இந்த மின்காந்த அலைவரிசையில் மூன்று அடுக்குகள் உள்ளன. ஒரு அடுக்கில் புலனாகும் அலைகற்றை இருக்கும். இதில் ஏழு நிறங்கள் உள்ளன(அதாவது அலைநீளம் 390nm முதல் 700nm வரை). இந்த அடுக்கிற்கு முன்னால் குறைந்த அலைநீளம் கொண்ட  ரேடியோ அலைகள், மைக்ரோ அலைகள், அகச்சிவப்பு அலைகள் உள்ளன. பின்னால் புறஊதா கதிர்கள், காமா கதிர்கள், எக்ஸ்ரே கதிர்கள் உள்ளன. ஆனால் 50% புலனாகும் அலைகற்றையும், 40% ரேடியோ அலைகற்றையும், வெறும் 10% புறஊதாகதிர்களும் அடங்கியுள்ளன(தப்பிச்சோம்)...

அலையும், வண்ணமும்:
ரொம்ப அலைஞ்சிட்டிங்களா.... கொஞ்சம் கலர்புல்லா பார்ப்போமா??
அலைநீளம் 390nm முதல் 700nm வரை உள்ள மின்காந்த அலைகள் பூமியை அடைந்து ஏதேனும் ஒரு பொருளின் மீது படும்பொழுது, எல்லா அலைநீள கதிர்களையும் உட்கவர்ந்து(Adsorb) ஏதேனும் ஒரு அலைநீள கதிரை மட்டும் எதிரொளிக்கிறது(Reflect).
இதனால் அப்பொருள் எதிரொளிக்கப்பட்ட அலைநீளத்தின் வண்ணத்தில் தெரிகிறது. எல்லா அலைநீளத்தையும் எதிரொளிக்கும் பொருள் வெள்ளை நிறத்திலும், எல்லா அலைநீளத்தையும் உட்கவரும் பொருள் கருமை நிறத்திலும் காட்சியளிக்கும். ஆக இயற்க்கையில் எல்லா பொருட்களும் கருப்பே(வண்ணமற்றவை)..ஆப்பிள் உண்மையில் சிவப்பு அல்ல... மரங்கள் உண்மயில் பச்சை அல்ல.. நம் ஹீரோயின்கள் உண்மையில் இவ்வளவு நிறம் அல்ல..... ‘எல்லாம் மாயையே
 
சூரியன், பொருளிலிருந்து அடுத்ததாக கண்களுக்கு பயணத்தை தொடருவோம்.. எப்படி இந்த கால் இஞ்ச் கண்கள் கலர்புல்லாக காண உதவுகிறது???
கண்கள்:
பல மில்லியன் குச்சி செல்கள், கூம்பு செல்கள் நிறைந்தது நம் கண்கள்.
ஏற்கனவே ஒரு பொருள் ஒரு அலைநீளத்தை மட்டும் தான் எதிரொளிக்கும் என பார்த்தோம் அல்லவா.. அந்த அலைநீள ஒளி மட்டும் நம் கண்ணின் விளித்திரையை அடையும்.
குச்சி, கூம்பு செலகளில்  S, M, L  என பல வகைகள் உள்ளன.  மஞ்சள் அல்லது பச்சை நிற ஒளி விழுன் பொழுது L, M வகை கூம்பு செலகள் அதிகமாகவும், S கூம்பு செல்கள் மிக் குறைவாகவும் தூண்டப்படுகிறது,
சிகப்பு நிற ஒளி L வகை கூம்பு செல்களை அதிகமாகவும், M, sS வகை கூம்பு செல்களை குறைவாகவும் தூண்டுகிறது. 

அனைத்து கூம்பு, குச்சி செல்களும் புரதம்(ஸ்காட்டாப்சின்) மற்றும் வைட்டமின்-ஏ னால் ஆனது. ஒளியானது இந்த செல்களில் விழும்பொழுது வேதிவினை நடைபெறுகிறது(ஏனென்றால் ஒளி தன்னுள் ஆற்றலை கொண்டுள்ளது. அந்த ஆற்றலால் வேதிவினை நடைபெறுகிறது).
வேதிவினையில் உருவாகும் மெடரோடாப்சின்-2 மின்காந்த தூண்டலை ஏற்படுத்துகிறது(ஆக்ஸிஜன் ஒடுக்க வினையினால்). இது பார்வை நரம்பின் மூலம் மூளைக்கு கடத்தப்படுகிறது. இந்த பார்வை நரம்பு மூளையின் பின்புறம் ஆக்ஸிபட்டல் என்ற பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும். 

கண், காது, மூக்கு, தோல் என அனைத்து உணர் உறுப்புகள் மூலம் பெறப்படும் செய்திகள் மூளைக்கு மின்காந்த தூண்டலாகவே அனுப்பபடுகிறது. மூளை இதை எப்படி உணருகிறது???

அடுத்த பகுதியில்.....

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...