செவ்வாய், ஜூலை 02, 2013

என்னமோ ஜீடிபியாம்ல... அப்படின என்ன ஸார்?

இது கூட தெரியாதா.. கிராஸ் டொமஸ்டிக் ப்ராடக்ட்(GDP)னு  சொல்ற உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது.
அப்போ என்னோட அடுத்த கேள்வி 'கிராஸ் டொமஸ்டிக் ப்ராடக்ட்' னா என்ன?????
"கூந்தல் இருக்குற மகராசி அள்ளி முடியலாம்"னு ஒரு பழமொழி இருக்கு.
இருக்கட்டும்...அது எதுக்கு இப்போ????(அகெய்ன் உங்க மைண்ட் வாய்ஸ்)
வெல்.. எல்லாத்துக்குமே ஒரு அளவுகோல் வேணும்(உன் இம்சைக்கு அளவு இல்லையா கேட்காதிங்க ப்ளீஸ்)

பொருளாதாரத்தை அளவிடும் ஒரு அளவீடு தான் GDP.(யாரடி நீ மோகினி GDல கூட ஒரு பொன்னு சொல்லும்ல,"india's current GDP rate is 3.5%")

இந்த GDP ய 2 வகைல சொல்லுவாங்க.
1)GDP in amount
2)GDP Growth Rate(in Percentege,அந்த பொன்னு சொன்னது இதான்)

GDP in amount

ஒரு நாட்ல ஒரு வருடம்(சில சமங்களில் அரையாண்டு,காலாண்டு கூட) உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் சந்தை மதிப்பின் மொத்த மதிப்பே GDP.
இதுல இந்தியால எங்கயோ ஒரு மூலைல உற்பத்தி ஆகுற சின்ன குண்டூசில இருந்து நாம விடுற ராக்கெட் வரை அவற்றின் சந்தை மதிப்பு கணக்கிடப்படுகிறது.
சேவை என்பதில் நம்ம வீட்டுக்கு பக்கதில அயர்ன் பண்ணுறவங்களுக்கு கொடுக்குற 5ரூபால இருந்து ஐடி நிறுவனங்கள் பெறும் லட்சம் கோடி வரை அடங்கும்.
ஒரு வருடத்திற்க்கு அப்படி கணக்கு பார்த்த அந்த நம்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எவ்வளவு வரும்னு தான யோசிக்கிறிங்க.
2012ல நம்ம GDP வந்து 1,947,000 மில்லியன் டாலர்(நாம 10வது இடம் உலகத்துல)

10வது இடம்னு சந்தோஷபடாதிங்க பாஸ்.
இது நம்ம நாட்டோட நெலம தான்(ஓ.கே..முன்னெற்றம் தான்)
இந்த GDPய 128கோடியால(நம்ம மக்கள் தொகையே தான்)வகுக்கனும்..இப்ப கிடைக்கிறது தனிநபர் GDP.
இதுல இந்தியா 143வது இடம்.(Rich get Richer.Poor get Poorer)

GDP Growth Rate
இப்போ அந்த பொண்ண பார்போம்...சாரி, அந்த பொண்ணு சொன்ன GDP Growth Rate ன என்னானு பார்போம்.
2011ல GDP 1897608மில்லியன் டாலர்
2012ல GDP 1947000மில்லியன் டாலர்
2011ல விட 2012ல் எவ்வளவு சதவிகதம் GDP(in amt) உயர்ந்து(சில சமயம் குறைந்து) இருக்கோ அதான் GDP Growth rate.

இப்போ அந்த பழமொழிக்கு வரென்."கூந்தல் இருக்குற மகராசி அள்ளி முடியலாம்"ங்கர மாதிரி GDP அதிகமா இருக்கு நாடு நெரைய கடன் வாங்கலாம். அதன் நாம நெரைய கடன் வாங்குரோம்.
இந்தியாவால கடன திருப்பி செலுத்த முடியும்.
( திருப்பி செலுத்த முடியும். அதுக்குகாக கடன் வாங்கலாமா..... அடுத்த பதிவில்)

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...