வெள்ளி, ஜூலை 19, 2013

இமாலய இமயம்...



‘உலகிலேயே மிக உயரமான சிகரம் எவரெஸ்ட். இதன் உயரம் 8850மீட்டர். இது நேபால் மற்றும் சீனா எல்லையில் அமைந்துள்ளது
(பின்ன 16.13லட்சம் பேர் மேல பொறாமைப்பட்டு, போட்டிக்கு 125ரூபாய் கட்டி குருப்4 எக்ஸாமுக்கு ப்ரிப்பரேசன்.)
B.E வரைக்கும் படிச்சிட்டு(போய்ட்டு) மீண்டும் 6வருடங்கள் பின்னோக்கி...
என் தம்பி புத்தகத்தை சண்டை போட்டு வாங்கி ப(பு)டிச்சிக்கிட்டு இருக்கேன்.
B.E ல ஒரு லேப். ஒரு ஒயர் விட்டத்தை அளக்கனும். இதுக்கு 5 ரீடிங் எடுக்கனும். 3 மணி நேரம் இதுக்கு மட்டும்.
இவிங்க எப்படி இவ்வளவு பெரிய மலை உச்சியின் உயரத்தை இவ்வளவு கரக்ட அளந்துருப்பாங்ய்க..

200 வருடங்கள் பின்னோக்கி.........
கி.பி.1802. இந்த பிரிட்டிஷ்காரங்களுக்கு ஒரு ஆச. உயரத்திலேயே உயரமான இடம் எதுனு கண்டுபிடிக்க.
உயரமான இடம் நாளே கண்டிப்பா மலை தான். அதனால உலகத்தில இருக்குற மலைகளின் உயரத்தை அள்க்க ஒரு குழுவ அனுப்புனாங்க.
நியாபகம் இருக்கட்டும்.. நாம இருப்பது 1802(கதையோட மூழ்கித்திங்கனா)
1802ல செயற்க்கைகோள் இல்ல. கணினி இல்ல. GPS, Google Map இப்படி எதுவும் இல்ல.
அளப்பதும் நாம தான்... கணக்குகளும் நாம் தான் போட வேண்டும்...
அளப்பதற்க்கு அவர்கள் பயன்படுத்தியது இயந்திர உபகரணங்களே.
அதன் எடை சுமார் 500கிலோ.. இதை மலையின் உச்சிக்கு எடுத்துச் செல்ல வேண்டும். (அதற்க்கு மட்டும் 12 பேர் கொண்ட குழு. பின்னர் அளவிடுதல், கணக்கிடுதலுக்கு தனித்தனி குழு.)
அவர்கள் பயன்படுத்தியது நாம் 8ம் வகுப்பில் படித்த சாதாரன முக்கோணவியல் தான்..
இந்தியாவில அவங்க ஆரம்பிச்சது முதல்ல தென்னிந்தியால தான்.
1830ல தான் இமாலயதுக்கு போனாங்க(நாமலும் இப்ப தான் போக போரோம்)
ஆனா நேபால் அந்த குழுவ அனுமதிக்கல.
பல ஆண்டுகளுக்கு பிறகு தான் அனுமதி தந்தாங்க. இருந்தாலும் ஒரு அதிகாரி மலேரியாவால இறந்துத்தாறு.. 2பேரு ரிட்டையர் ஆயிட்டாங்க.
அப்புறம் மறுபடியும் ஒரு புது குழுவ அனுப்பி 1857 தான் முடிவிக்கு வந்தாங்க. பீக்XVxvxv தான் உலகிலேயே உயரமான சிகரம்.. அதன் உயரம் 8840மீட்டர். பின்னர் அதில் பணியாற்றிய உயர் அதிகாரியான எவெரெஸ்ட் என்பதையே அதற்க்கு சூட்டினர்..

கிட்ட 1999 தான் அமெரிக்கா அது 8850மீட்டர் என உறுதி செய்தது... satellite, GPS  போன்ற நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன்...
ஆனால் எதுவும் இல்லாமல் 200 ஆண்டுகளுக்கு முன்னரே கிட்டதட்ட சரியாக கணித்துள்ளனர்... 
அவர்களின் சாதனையும் இமயம் போல் உயர்ந்தது தான்.....

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...