வியாழன், ஜூலை 25, 2013

ஆங்கிரி பேர்டாம்...

 
தரையில் விளையாடிய காலம் போய்
திரையில் விளையாடிக் கொண்டிருக்கிறோம்
பம்பரம்
கோலிக்குண்டு
கிட்டிப்பிள்ளை
தட்டாங்கல்
பல்லாங்குழி
தாயம்
என அத்தனையும் இரையானது
இந்த சின்னஞ்சிறு செல்லிடப் பேசின் கோரப்பசிக்கு
கையளவு திரையில் காரே ஓட்டலாம்
கைவிரலை தவிர வேறெதும் ஓடலையே
ஆங்கிரி பேர்டாம்...
மோதினால் கட்டிடமே இடியுமாம்
எப்படியெல்லாம் விளையாடிராங்க!!!
சில நிமிட பேருந்து பயணங்களில்
சில நிமிட காத்திருப்புகளில்
வேலையேதும் இல்லாத வேளைகளில்
எல்லாம் விளையாடுகிறோம்
-விளையாடுகிறோம் என்னும் பேரில்
போன தலைமுறை
விளையாடியது....மறந்தது
வரும் தலைமுறை
அறியாது....வருந்தாது
இந்த தலைமுறை
விளையாடியது....விளையாட முடியாமல் போனது
அதான் இந்த ஏக்கமும் வருத்தமும்...!

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...