செவ்வாய், ஜூலை 09, 2013

ராக்கெட்டின் பின்னால்



ஜப்பானின் ஓரிகாமி, நம் பண்டைய வில் வித்தை மற்றும் நவீன ராக்கெட் ஏவும் தொழில்நுட்பம் இவை அனைத்தையும் பயன்படுத்தி விடுவதுதான் நம் காகித ராக்கெட்.(கொஸ்டின் பேப்பெர்ல விடுர ராக்கெட் ரொம்ப தூரம் போனா நெறைய மார்க் வாங்குவோம்னு ஒரு செண்டிமெண்ட் வேற)

எப்படி தான் இந்த ராக்கெட் மேல போகுது. (அட நம்ம காகித ராக்கெட்டோ தீபாவளி ராக்கேட்டோ இல்லங்க.. இந்த இஸ்ரோ ராக்கெட்)
அதுக்கு முன்னாடி,
காற்று மிக மிக எடை குறைவு தான். ஆனா(ல்) வேகமாக செல்லும் பொருளின் மீது அதே காற்று செலுத்தும் விசை மிக மிக அதிகம்.
அதே சமயம் இந்த பூமி எதையும் அவ்வளவு சீக்கரம் விட்டுறாது.
காரணம் புவியீர்ப்பு விசை.
நம்ம ராக்கெட் பாவம். மாமியா, மருமக சண்டைல மாட்டிக்கிற கணவன்மார் போல. இந்த ரெண்டு விசையையும் சமாளிக்கனும்.
முக்கியமா செயற்க்கைகோள்கள் பல டன் எடையுடன் இருப்பதால், புவியீர்ப்பு விசைக்கு எதிராக செலுத்த அதிக வேகத்தில் செலுத்த வேண்டும்.
அதே நேரத்தில் மிக அதிக வேகத்தில்(11.2கி.மீ/விநாடிக்கு மேல்) செலுத்தினால் புவியை விட்டு தப்பி சென்று விடும்.
வேகத்தை குறைத்தால்  புவியீர்ப்பு விசைக்கு எதிராக செலுத்த முடியாது.
ராக்கெட் ஏவும் போது இந்த வேகத்தை தீர்மானிப்பது முக்கியமானது(பெரும்பாலும் எடை மற்றும் எவ்வளவு உயரத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்பதை பொறுத்து)
பூமியில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்திற்கு வளி மண்டலம் மிகவும் அடர்த்தியாக இருக்கும். அதனால் ராக்கெட் செங்குத்தாக செலுத்தப்படும்.
அதன்பின் அது சில கோணம் திருப்பப்படும். அவ்வாறு திருப்பப்படும் போது ராக்கெட்டின் தலைப்பகுதி கிழக்குப் பக்கமாக திருப்பப்படும்.(பூமி மேற்க்கிலிருந்து கிழக்காக சுற்றுவதால்)
மிக உயரத்தில் நிறுத்தப்படும் செயற்க்கைகோள்கள் நீண்ட ஆயுளை பெரும்.( காற்றினால் ஏற்படும் தடை குறைவு என்பதால்)

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...