சனி, ஜூலை 27, 2013

மரம் மாதிரி...



உயிர் மட்டும் தான் தந்தாள் தாய்
உயிர்மூச்சு தந்து கொண்டிருக்கிறாய் நீ


காகிதம் தந்தாய்
எழுதினோம் "மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்"
"காடுகளை காப்போம். நாட்டை காப்போம்" என்றெல்லாம்
மதிப்பெண்கள் பெற்றோம்
மதி மட்டும் மாறலையே

நிழல் தந்தாய்
நிழலை மட்டும் பெற்றுக் கொண்டோம் நாங்கள்
நிஜமாகிய உன்னை மறந்து விட்டு

நாங்கள் வாழ நீ வேண்டும்
நீ வாழ நாங்கள் மாற வேண்டும்
உன் நண்பனாக...!


சின்ன வயசில இருந்தே மரம் கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜன தருதுனு மட்டும் சொல்லியே ஏமாத்திதாங்க. ஆமாங்க மரம் நாம் சுவாசிக்க இந்த ஒரு வேலைய மட்டும் செய்யல. மரம் ஒரு வடிகட்டியாகவும் செயல்படுகிறது. காற்றிலுள்ள சிறிய துகள்கள், ஓசோன், NO2, SO2,அம்மோனியா என அனைத்தையும் எடுத்துக்கொள்கிறது.
தரைக்கு மேல காற்ற வடிகட்டுதுனு பார்த்த தரைக்கு கீழேயும் வேல செய்யுது இந்த மரம். மரத்தின் அசுத்த நீரையும் வடிகட்டுகிறது. நீர் மாசுபாட்டையும் குறைக்கிறது.
இப்படி நின்னுகிட்டே காற்று, நீர் என இரண்டையும் சுத்தமாக்கிறது இந்த மரம். (ஆனா நாம கொஞ்ச நேரம் நின்டா, ஏன்டா மரம் மாதிரி நிக்கிரனு கேக்குராங்க
·         வெறும் 4 மரங்கள் சுமார் 50கிலோ மாசுத்துகள்களை அழிக்கிறதாம் ஒரு வருடத்தில்
·         வெறும் 400 மரங்கள் ஒரு வருடத்தில் 530லி மழைநீரை சேமிக்கிறது.
·         வெறும் 4000 மரங்கள் போதும் ஒரு வருடத்தில் வெள்ளத்தினால் ஏற்ப்படும் சேதங்களில் 70கோடியை மிச்சப்ப்டுத்த.
·         கடைகளுக்கு அருகில் மரங்கள் இருந்தால் பொருட்கள் வாங்குபவர்கள் 11% அதிகமாக செலவு செய்வார்களாம்(அவர்கள் மனம் மகிழ்ச்சியாய் இருப்பதால்)
·         கரண்ட் பில்லில் வருடத்திற்க்கு 3000ரூபாய் வரை குறைய வாய்ப்பு இருக்கிறது.
·         உங்கள் வீட்டின் மதிப்பு ஒரு 15% அதிகமாகும் மரங்கள் சூல இருந்தால்
·          மரம் கேட்டால் நீங்கள் வருடத்திற்க்கு 31000ரூபாய் கட்ட வேண்டியிருக்கும. அது தரும் ஆக்ஸிஜனின் மதிப்பு.
·         சுத்தம் செய்யும் வேலைக்கு தனியாக 62000ரூபாய் தர வேண்டியிருக்கும்


விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...