சனி, ஜூலை 27, 2013

2.காதல் ஓட்டம்...

இதற்கு முன்



அந்த நொடி தான் அவளைக் கண்ட கடைசி நொடி என எனக்குத் தெரியும். இறுதியாண்டின் இறுதித் தேர்வை எழுதிவிட்டுச் செல்கிறாள் அவள். இன்னும் ஒரே ஒரு தேர்வுக்காக காத்திருக்கிறேன் நான். ஆனால் இப்போது காத்திருப்பதோ அந்த ஏழாவது பேருந்து என்னைக் கடக்கும் அந்த நொடிக்காக.
ஆறாவதாக வந்த பேருந்து. ‘பின்னால் ஒரு இளவரசி வருகிறாள்.. ஒதுங்கி நில் என்று அரண்மனை ஊழியர்கள் சொல்வது போல கண்ணில் புழுதியை வாரி இறைத்துச் சென்றது. கண்களை கசக்கினேன். கண்ணீர் வந்தது. தூசி விழுந்ததால் மட்டும் அல்ல என்று தெரிந்தது. ஒரு வழியாக கண்களை சரியாக திறந்து பார்க்கும் போது நுழைவாயிலிடம் விடைபெற்று சென்றுகொண்டிருந்தது அந்த ஏழாவது பேருந்து.
கல்லூரிக்கு உள்ளே கல்லூரிப் பேருந்து காத்திருக்கும் – மாணவர்களுக்கு
கல்லூரிக்கு வெளியெ நகரப் பேருந்துக்கு காத்திருக்கும் – மாண்வர்கள்
நான் காத்திருப்போன் பட்டியலில். நாளை மீண்டும்(மட்டும்) திரும்பி வருகிறேன் என்று சொல்லிவிட்டு பேருந்து நிறுத்தத்திற்கு வந்து அமர்ந்தேன். இந்த பேருந்து நிறுத்தம் தான் நான் அவளைக் கண்ட முதல் இடம். இங்கிருந்துதான் ஆரம்ப்பித்தது என் காதல் ஓட்டம். ஆரம்ப்பித்து மூன்றாம் ஆண்டைத் தொடப் போகிறது. இன்று வரை நான் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறேன்.... ஒரு வழிப்பாதையில்.
இந்த மூன்று ஆண்டுகளில் ஒரு வார்த்தைக் கூட பேசியதில்லை அவளிடம். என் பெயர் அவளுக்கு தெரியுமா என்று கூட தெரியாது. நான் இந்த கல்லூரி தான் என்று அவளுக்கு தெரியுமா என்றும் தெரியாது. என் பிம்பம் ஒரு முறையாவது அவள் கருவிழியில் பட்டதுண்டா என்றும் தெரியவில்லை.
முதலாம் ஆண்டின் முதல் வாரமே பழிகியது பேருந்து நிறுத்தமிடமும், அருகிலுள்ள கடையுடனும் தான். இன்னொரு நண்பன் வந்ததும் சேர்ந்து போகலாம் என்று பேருந்து நிறுத்தத்திலேயே அமர்ந்திருந்தேன் நான். 


அவள் வந்தால் நகரப் பேருந்தில். அது தான் அவளைக் கண்ட முதல் நாள். பேருந்திலிருந்து இறங்கினாள் அவள். அமர்ந்திருந்த நான் எழுந்தேன். அனிச்சையாய் மரியாதை அந்த அழ(கி)குக்கு. அவளை வர்ணிக்க அப்பொழுது வார்த்தை தெரியவில்லை. அவள் மட்டுமே தெரிந்ததால்.
அவள் இறங்கியவுடன் பேருந்து நகர்ந்தது. நுழைவாயிலை நோக்கி நடந்தாள் அவள். நான் மட்டும் அசையவில்லை. அவள் தந்த போதையில் திடமாய் நின்று கொண்டிருந்தேன். திடிரென்று ஒரு பயம் நெஞ்சைக் கவ்வியது.
இவள் இன்று இங்கு நடக்கும் வங்கித் தேர்வை எழுத வந்த பெண்ணாக இருந்துவிட்டால். சட்டென்று போதை தெளிந்து நுழைவாயிலை நானும் அடைந்தேன். காவலாளியின் அறிவுறுத்தலின் பேரில் அடையாள அட்டை அணிந்தாள். அப்போது தான் உயிரே வந்தது. இவளும் இந்த கல்லூரி தான். இவளும் முதலாமாண்டு தான். இருந்தாலும் நெஞ்சைக் க்வ்விய பயம் இன்னும் சிறிது கவ்வி தான் இருந்தது. எந்த துறையில் படிப்பவள் இவளோ என்று.
இருவரும் கல்லூரிக்குள் நுழைந்தோம். ஒரு வாரம் ஆனாலும் புதிதாய் தெரிந்தது கல்லூரி அன்று மீண்டும். அவள் ஒவ்வொரு அடியாய் முன்னே நடந்து செல்ல செல்ல என் நெஞ்சைக் கவ்விய பயத்தின் இறுக்கமும் அதிகமானது.
கணிதவியல் துறை. அவள் நுழையவில்லை.
இறுக்கம் சற்று தளர்ந்தது.
கணினிஅறிவியல் துறை. அவள் கடந்து சென்றாள்.
இறுக்கம் இன்னும் சற்று தளர்ந்தது.
அடுத்ததுத்து இரண்டு துறைகள். அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
 இறுக்கம் மேலும் மேலும் தளர்ந்தது.
அடுத்து வேதியியல் துறை. என் துறை. அவள் நுழையமாட்டாளா. மூச்சு முட்டியது. இறுக்கம் மேலும் அதிகமானது.
பல நாட்கள் பழகிய பின் பிரிந்து சென்றதைப் போல் வலியைத் தந்தது அவள் இயற்பியல் துறைக்குள் நுழைந்தது.

(-தொடரும்)

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...