செவ்வாய், ஆகஸ்ட் 04, 2020

அவளும் நிகர் தானே!


ஒரு கணத்த சங்கிலி எப்போதும்
அவளின் காலில் பிணைக்கபட்டே உள்ளது.
ஒரு வட்டக் கூண்டு எப்போதும்
அவளை சுற்றி அடைக்கப்பட்டே உள்ளது.
ஒரு அடிமை சட்டம் எப்போதும்
அவளை கட்டுப்படுத்தி கொண்டே உள்ளது.

கள்ளிப்பால் வறண்டு விட்டாலும்
பெண்பால் பல உயரங்களில் கால் பதித்தாலும்
மாறாமல் தொடர்கிறது பாலின பாகுபாடு!

சமைத்தலும், துவைத்தலும் - பெண்களுக்கே!
அடக்கமும், அழுகையும் - பெண்களுக்கே!
மென்மையும், பொறுமையும் - பெண்களுக்கே!
வரதட்சனையும், வழ்புணர்ச்சியும் - பெண்களுக்கே!
தலைமையும், அதிகாரம் மட்டும் - ஆண்களுக்கு!!

சம்பாரித்தாலும் வீட்டுக்கு அவள் தான் சமையல்காரி.
சாதித்தாலும் வீட்டுக்கு அவள் தான் வேலைக்காரி.

விதிவிலக்காய் ஆண் வீட்டுவேலை செய்தாலும்
சமூக இலக்கணத்தில் அது அவமானமே!

அவளும் நிகர் தானே!
இல்லத்து அரசனாய் பெருமிதம் கொள்வோம்!
இலக்கண பிழையாவோம்
நம் இல்லத்து (அ) உள்ளத்து அரசிக்காக!!

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...