வியாழன், ஆகஸ்ட் 27, 2020

மெய்க்கு அப்பால்..

 எவ்வளவு நேரம் தான்

இங்கேயே இருப்பது...


எல்லாமே செய்தாகிவிட்டது

செய்வதற்க்கென்று எதுவுமில்லை....


சென்று வரலாம்

ஒரு சிறிய நடைபயணம்

என கிளம்பினேன்...


துணைக்கு யாரை அழைக்கலாம்

எல்லாரும் தூங்குகின்றனரே....


வெளியில் ஒரு குரல்

சென்று பார்த்தேன்

‘போலாமா?’ என்றான் வந்தவன்....


இருவரும் நடக்க ஆரம்பித்தோம்...

நடந்ததையெல்லாம்

பேசிக் கொண்டே நடந்தோம்..


சுற்றி வளைத்தது ‘கும்மிருட்டு’

சற்று தூரம் சென்றதும்...


உயரத்தில் பளிச்சென எறிந்தது

வெள்ளை நிற விளக்கு...


எடுத்துக் கொண்டான்

என்னுடன் வந்தவன்....


விளக்கின் வெளிச்சத்தில்

விலக்கினோம் ‘கும்மிருட்டை’....


கரடுமுரடான் பாறைகளில் நடந்து சென்றோம்

கடுமையான  புழுதிபுயலையும் கடந்து சென்றோம்...


தூரத்தில் ஆங்காங்கே

ஒற்றைப் புள்ளியாய் மின்னுகின்றனவே...

இன்னும் யார்யாரோ

எங்களைப் போல் பயணிக்கின்றனர் போல...


தூரத்தில் செல்ல செல்ல

இருளில் விளக்கு தேயவும்,

குளிரில் உடம்பு காயவும்

ஆரம்பித்தன....


‘உம்’ கொட்டிக் கொண்டு வந்தானே

‘எங்கே அவன்?’

திரும்பி பார்த்தேன்... இல்லை அவன்


திரும்பி விட நினைத்தேன்.... வந்த வழியில்


குளிரிலும், இருளிலும்

நடுங்கியது

உடலும், இதயமும்....


தூரத்தில் தெரிந்தது நெருப்பு

அருகில் சென்று குளிர் விரட்டினேன்...


பின் அலைந்து திரிந்து வீடு அடைந்தேன்...

குளிர்சாதனப் பெட்டியில் நான்.!!!


ஒரு கவிஞனின் மரண_வாக்குமூலம்...



விளக்கவுரை:

வெள்ளை விளக்கு-நிலா

கரடுமுரடான பாறைகள்-கோள்கள்

மின்னும் ஒற்றைப் புள்ளிகள்-நட்சத்திரங்கள்

தூரத்து நெருப்பு-சூரியன்

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...