சனி, மார்ச் 06, 2021

இரு சொட்டு கண்ணீர் துளி

அனலாய் கொதித்தது உடல்

அதிகமாய் துடித்தது இதயம்

எதற்கு இந்த அக்னிபரிட்சை

வசமாய்வந்து இப்படி மாட்டுவேனோ

கற்கண்டு கசந்தும் கடித்து கொண்டே

ரோஜாவுடன் ஒரு யுத்தம் நடத்தி

முடிவில் போகட்டும் என எடுத்து

சந்தனம் குங்குமம் சகிதம் முடித்து

சங்கடத்துடன் சிறுமுருவலுடன் முன்னேற்றம்!

உள்ளே குடும்பமாய் ஒரு கூட்டம்

நண்பர்கள் கூட்டம் மறுபக்கம்

கூட்டமின்றி குற்ற உணர்ச்சியுடன்

ஓரம்கட்டிய ஒற்றை மரமாய் நான்!

இந்த மாலை நமக்கு வாய்ப்பில்லை என்ற

கவலை கண்ணீர் ஒரு கண்ணில்.

அந்த மாலையுடன் நிற்கும் தங்கைக்காக

ஆனந்த கண்ணீர் மறு கண்ணில்.

கெட்டிமேள சத்தம்! பூக்கள் பறந்தன!

அனிச்சையாய் கவலை கண்ணீரை

துடைத்தது கைக்குள் இருந்த கைக்குட்டை.

மேடை - குற்றவாளி கூண்டாய் தெரிந்தது

புகைப்படம் - என்றும் ஒரு வடுவாய் அமையும்

வேண்டாம் என ரெண்டையும் கடந்தால்

பந்திக்கு முந்திய படைவீரர் கூட்டம்

ஒற்றை இருக்கை கிடைத்தும்

உட்கார்ந்ததும் வெறிச்சோடின

பயந்த பக்கத்து இருக்கைகள்!

பந்திக்கு பின்வாங்கியதும் மீண்டும்

படையெடுத்தன பக்கத்து இருக்கைகள்.

அடுத்த அடியெடுத்து வைத்த இடம்

மொய் எழுத மொய்த்த கூட்டம்

கல்லெறிந்ததும் கலையும் காக்கை கூட்டமாய்

கலைந்து சென்றது அந்த கடைசி இடமும்

கடமையை செய்து கடந்தேன் கடைசியில்!

மண்டபத்தின் முகப்பில் எழுதப்பட்டிருந்தது

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என

அந்த ஆனந்த கண்ணீரையும் துடைத்தது

ஈரமாய் இருந்த அதே கைக்குட்டை

திருமணத்திற்கு வந்த திருநங்கை நான்!

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...