புதன், ஜனவரி 21, 2015

சற்றுச்சூழல்

ஆம்...
சற்று தான் சூழ்ந்துள்ளது
சுற்றுச்சூழல்...

நம்மைச் சுற்றிச் சூழ்ந்த சுற்றுச்சூழல்
இன்று தொலைவில் தனியாய் சுருண்டு கிடக்கின்றதே....

அறிவை கொஞ்சம் வளர்த்ததில்
பசுமையும் மங்கலாய் தெரிகின்றதே...

கடவுளின் இரு கை இயற்றிய இயற்க்கையை
மனிதனின் செயற்க்கை சிதைக்கின்றதே....

சிறு அணுவிலிருந்து ஆயிரம் ஆற்றல்
எடுக்கத் தெரிந்த மனிதா...
சிறு விதையிலிருந்து ஆயிரம் காய் கனி மலர்களை
எடுக்கத் தெரியுமோ???

நம் விஞ்ஞான விரல் தீண்டியதில்
பனியும் நாணத்தில் உருகுகி
கடலுடன் கள்ளத் தொடர்பு கொள்கிறது...
பாவம் பனிக்கரடி...
பனியின்றி தனியாய் தவிக்கிறது...

10000 மைல்களுக்கு அப்பால் உருகும் பனிக்கட்டி
என் வீட்டு வாசலை நனைக்காது
என்ற மெத்தனம் சில ஆண்டுகள் வேண்டுமானால் பலிக்கலாம்.
...

வேலி பயிரை மேய்ந்தால் கூட பரவாயில்லை...
இங்கு பயிரே வேலியை மேய்கின்றதே...
ஓசோன்!!!

பருவம் மாறிய பருவநிலை
உருவம் மாறிய நீர்நிலை
தண்ணீருக்கும் விலை பெற்று தந்தது....

பாலிஎத்திலீன் பையை கண்டுபிடித்த
பாவிப்பையனை தேடுகின்றேன்...
மஞ்சப்பை என்றாலே நாகரீகமில்லாதவன் என
படம் வர அவனே முன்னோடி....

அனாதையாக குழந்தை வாழலாம்
ஆனால்
தனியாக மனிதால் வாழ முடியாது.
..

தமிழும், சுற்றுச்சூழலும் வெறும் தேர்ச்சி பெற தான்...
கணிதமும், அறிவியலும் தான்
மதிப்பை(¡) தரும் மதிப்பெண் பெற
என்றிருக்கும் கல்வி இருக்கும் வரை
பெயரவில் தொடரும்
சுற்றுச்சூழல் தினம் :-( :-( :-(

ஞாயிறு, ஜூலை 20, 2014

உயிரே... உயிலே...



இம் மெய்யில்
இறைவன் எழுதிய உயிர் எழுத்து...
இரு சுருளில்
எனக்காக எழுதிய உயில் எழுத்து...
அம்மா போல் நிறம்
அப்பா போல் மூக்கு
தாத்தா போல் கோபம்
பாட்டி போல் அறிவு...
என என் பயோடேட்டாவில்
பாதியை அச்சடித்த அமிலம்...
இறக்க போகும் தந்தை எழுதும் உயில் அல்ல இது...
பிறக்க போகும் குழந்தைக்கு எழுதப்படும் உயில் இது...
DNA



எத்தனை முகங்கள், எத்தனை நிறங்கள், எத்தனை குணங்கள்...
எப்படி இவ்வளவு வித்தியாசங்கள்??? இந்த சிறு உடலில்...
ஒரே ஒரு இரு சுருள் டி.என்.ஏ தான் இது எல்லாற்றிற்க்கும் காரணம் என்னும் போது முற்றுப்புள்ளி இடமுடியாத ஆச்சர்யகுறியாய் தான் உள்ளது.
வெறும் 4 எழுத்துக்கள்(நியுக்ளியோடைடு) கொண்டு இவ்வளவு பில்லியன் கவிதைகள்(மக்கள்) எழுதியுள்ளான் அவன்!!!

அடினைன்(A)
சைட்டோசின்(
C)
குவானைன்(G)
தையமின்(T)

இந்த நான்கெழுத்து கவிதை தான் நான் அனைவரும்.
ஒவ்வொரு நியூக்ளியோடைடும் ஒரு முனையில் பாஸ்பேட்டையும், மறுமுனையில் சுகரையும் கொண்டிருக்கும்.
இரு நியூக்ளியோடைடுகள் இணையும் போது சுகர், பாஸ்பேட்டுடனும் : பாஸ்பேட் சுகருடனும் இணைகிறது.
இவ்வாறு தொடர்ச்சியாக இந்த நான்கு நியுக்ளியோடைடுகள் மாறி மாறி இணைவாதல் பலவித அமைப்புகள்(Pattern) தோன்றுகின்றன.

(இடையில் ஜீன், குரோமோசோம் போன்ற வார்த்தைகள் உங்களை இடைமறித்திருக்கலாம். குரோமோசோமின் ஒரு சிறு துண்டு ஜீன், டி.என்.ஏவின் ஒரு சிறு துண்டு குரோமோசோம்)

முக மற்றும் உடல் அமைப்பை புரதங்கள் தான் உருவாக்குகிறது.இந்த புரதங்கள் உருவாகுவதை டி.என்.ஏ தான் தீர்மானிக்கிறது. இந்த டி.என்.ஏ அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு புதிய தலைமுறையிலும் அந்த பண்புகள் அந்த டி.என்.ஏவால் தொடரப்படுகின்றன.


எவ்வாறு கடத்தப்படுகிறது?
‘மியோசிஸ் எனப்படும் நிகழ்ச்சி மூலம் நம் உடலில் உள்ள அனைத்து அசல் டி.என்.ஏக்களும் நகலெடுக்கப்படுகின்றன. இந்த நகல் இனப்பெருக்க செல்லை அடைந்து அடுத்த தலைமுறைக்கு கடப்படுகின்றன.
ஆக புரோட்டினை உருவாக்குவது மட்டுந்தான் டி.என்.ஏவின் வேலை.

புரோட்டினின் வகைகள்:
1) கட்டமைப்பு புரோட்டின் : மூளை முதல் நகம் வரை உருவாக்குவது இதன் பணி
2) கடத்தும் புரோட்டின் : உடலின் பல பகுதிகளுக்கு தேவையான பொருட்களை கடத்துகிறது(எ.கா: ஹிமோகுளோபின்)
3) சேமிப்பு புரோட்டின் : ஆற்றல் மற்றும் உயிர்சத்துக்களை சேமிக்க (எ.கா கல்லீரல்)
4) ஹார்மோன் : நம் உடலில் அனைத்து ஹார்மோங்களும் ஒரு வகையில் புரோட்டிங்களே.

டி.என்.ஏ நான்கு எழுத்து என்பது போல, புரதம் 20 எழுத்துக்கள்(அமினோ அமிலங்கள்).
இந்த 20 அமினோஅமிலங்கள் பல்வேறு முறைகளில் இணைந்து மேற்கண்ட புரோட்டின்களை உருவாக்குகிறது.
புரோட்டினை உருவாக்க பிறப்பிக்கபடும் ஆணையில் டி.என்.ஏவின் ஏதேனும் 3 நீயுக்ளியோடைடுகள் தான் இருக்கும்( ACG, ACT, TTG….) எனவே 4*4*4 என 64 வகையான ஆணைகளை பிறப்பிக்க முடியும்.

ஒரு புரோட்டின் உருவாக்க இது போல்100 முதல் 1000 ஆணைகள் வரை தேவைப்படும். இவ்வாறு 3 எழுத்து ஆணைகள் பல்வேறு வரிசைகளில் அடுக்கப்படும் போது (1000 * 1000 * 1000)^64 வகையான புரதங்கள் உருவாகின்றன.


உங்கள் டி.என்.ஏவிலும் சில நல்ல விஷயங்களை இணைத்துக் கொள்ளுங்கள். அடுத்த தலைமுறைக்கு அது அப்படியே கடத்தப்படலாம்...









செவ்வாய், ஜூலை 15, 2014

முழுமூச்சாய் இறுதிமூச்சு வரை



ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால்
அழகு தான்... அதிசயம் தான்...
ஆனால்
30000 பள்ளிகளை கட்டிய இவரைக் கண்டால்
அதிசயித்து தான் பார்ப்பான் அவனும்...

வெறும் சட்டை மட்டும் தான் துறந்தார் காந்தி...
குடும்பத்தையே சட்டைசெய்யாமல் துறந்தாஎ இவர்...

நாட்டை துறந்து காட்டுக்கு சென்றார் புத்தர்...
வீட்டை துறந்து நாட்டுக்கு வந்தார் இவர்...

சற்றே திகைத்து தான் போயிருப்பார்
அந்த கடவுளும்...
இரண்டு கோடி பேருக்கு
இவ்வளவு நன்மை செய்யனுமா???
என்னால் முடியாது என்று
பின்னால் போயிருப்பார் அவர்...
முடியும் என்று முன்னால் வந்தார் இவர்..
முழுமூச்சாய்
இறுதிமூச்சு வரை முயன்றார்...

வெள்ளை சட்டைக்குள் கருப்பு உடல்
கருப்பு உடலுக்குள் வெள்ளை மனம்...
அப்பழுக்கற்ற மனம்...
கரைபடியாத கைகள்..

உலகில் ஒவ்வொரு தினமும் ஒரு பக்கம்
ஒவ்வொரு நாளும் படித்து கொண்டிருந்தார்...
உலகம் ஒவ்வொரு நாளும் எழுதிக் கொண்டிருந்தது
அவர் வரலாற்றை....

சுத்தமாக படிக்காதவர் தான்...
பொறாமை ப(பு)டிக்காதவர்...
பேராசை ப(பு)டிக்காதவர்...
சுயநலம் ப(பு)டிக்காதவர்...
வன்சொல் ப(பு)டிக்காதவர்...
அதிகாரம் ப(பு)டிக்காதவர்...
பதவியாசை ப(பு)டிக்காதவர்...

ஏழைகளை அணைக்கத் தெரிந்தவர்
எளிமையாய் நடக்க தெரிந்தவர்
இந்த இரண்டும் மட்டுமே தெரிந்தவர்...

ஆட்சியில் சேர்த்த சொத்துக்கள் ஏராளம்
10க்கும் மேற்பட்ட அணைகள்...
100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள்...
200 கல்லூரிகள்....
500 நூலகங்கள்...
30000 பள்ளிகள்...
மின் உற்பத்தி நிலையங்கள்....

சோஷியலிசம் பற்றி பேசி ரஷ்யாவில்
கைத்தட்டல் வாங்கினார் முதல் வாரம்....
சேற்றில் கால் வைத்து விவசாயி தோளில்
கைபோட்டு அன்பாக பேசினார் அடுத்த வாரம்...

ஆட்சிக்காக கட்சியில் சேர்பவர்கள் மத்தியில்
கட்சிக்காக ஆட்சியிலிருந்து விளகியவர்...

எதிர்கட்சியினரை பந்தாடும் ஆளுங்கட்சியின் மத்தியில்
எதிர்க்கட்சியினருக்கும் அமைச்சர் பதவி தந்தவர்....

கொஞ்சம் கோபக்காரர் தான்...
கொஞ்சம் நேரத்தில் மறையும் கோபம் தான்...

ஒரே ஒரு காமராசர்
தமிழ்நாடு
தொழிற்துறையில் 2ம் இடம்
கல்வியில் 4ம் இடம்
மின் உற்பத்தியில் 1ம் இடம்
விவசாய வளர்ச்சியில் 3ம் இடம்..
இன்று எத்தனையோ பேர்
அதை அழித்துக் கொண்டிருக்கின்றனர்..
அசைக்க கூட முடியாது
அவர் இட்ட அடித்தளத்தை...





செவ்வாய், ஜூன் 24, 2014

வைரஸ் பேனா



VIQ
VVIQ
VVVIQ
VVVVIQ...

பத்து, பன்னிரெண்டாம் வகுப்புகளில் அதிகமாக புத்தகங்களை ஆக்கிரமித்த சொற்கள் இவை. இது 2005ல் கேட்ட கேள்வி(அப்படினா VIQ னு போடனும்னு அர்த்தம்.) இது 2004, 2005 ல் கேட்ட கேள்வி(VVIQ-Very Very Important Question னு அர்த்தம்) இப்படியே VVVVIQ வரை செல்லும்.

அப்படி VVVVIQ வாங்கிய ஒரு கேள்வி 'நீயுட்டனின் பொது ஈர்ப்பு விதி'.
'An appple a day keeps doctor away' என்ற பழ'மொழியை 'An Apple in one day made our school life worser' என புதுமொழி உருவா(க்)கும் அளவுக்கும், இயற்பியலின் மீது நல்ல வேதியியல்(அதாங்க இந்த கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகுறது) உருவாகாமல் போனதுக்கும் இந்த ஈர்'ப்பு விதியும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.


"இரு பொருளகளுக்கு இடையேயான ஈர்ப்பியல் விசையானது அதன் நிறைகளுக்கு நேர்விகிதத்திலும், அவற்றிற்க்கிடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்விகிதத்திலும் இருக்கும்"

 இதற்க்கு உதாரணமாக புவிக்கும், நிலவுக்கும் இடையேயான ஈர்ப்பியல் விசை குறிப்பிடபட்டிருக்கும். மேலும் கடல் அலைகளுக்கும் இது தான் காரணம் என கேள்விக்கான விடை முடியும்.


புவிக்கு ஏதோ காந்த சக்தி உள்ளது. நிலவுக்கும் அது போல் இருக்கலாம். என்வே அவற்றிற்க்கு இடையே (காந்தவியல்) ஈர்ப்பு விசை இருக்கலாம். ஆனால் நிலவுக்கும், கடல் நீருக்கும்; புவிக்கும், நமக்கும் எப்படி ஈர்ப்புவிசை சாத்தியம்.??
கடல் நீரின் மீது செயல்படும் நிலவின் ஈர்ப்பு விசை நம் மீதும் செயல்படுமா??(அமாவாசை வந்துருச்சா என்று முட்டாள்தானமாக பேசுபவர்களை மொக்கைதனமாக கலாய்ப்பவர்கள் உண்மையில் கவனிக்கபட வேண்டியவர்கள், கீழ்பாக்கத்தில் அல்ல. பிர்லா கோளரங்கத்தில்)


முதலில் நீயுட்டன் 'இரு காந்த பொருட்களுக்கு இடையே' என தனது விதியை ஆரம்பிக்கவில்லை. 'இரு பொருட்களுக்கு இடையே' என எந்த மத, இன. சாதி பாகுபாடு இன்றி அண்டத்தில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் பொதுவாக அளித்துள்ளார்.ஆக எனக்கும், அலைபேசிக்கும்; எனக்கும், தொலைகாட்சிக்கும்; எனக்கும், மடிக்கணினிக்கும் இடையே ஈர்ப்பியல் விசை இருக்கதானே செய்யும்.(ஆனால் புத்தகமும், நானும் மட்டும் ஒரே துருவம் போல)

எனக்கும், என் அலைபேசிக்கும் இடையில் ஈர்ப்புவிசை இருந்தாலும் உண்மையில் அது மிக, மிக, மிக குறைவு(அறிவியல்பூர்வமாக மட்டுமே)
ஒல்லிபெல்லியில் கலந்துகொள்ளும் அளவிற்க்கு என் உடல் எடை(!) இருந்தாலும், செங்கல் போல் என் செல்லிடப்பேசி இருந்தாலும் Gன் மதிப்பானது G = 6.673×10-11 N m2 kg-2 என இருப்பதால் எங்கள் ஈர்ப்புவிசையை குறைத்துவிடுகிறது(என் அம்மாவின் திட்டைப் போல)
ஆனால் புவியின் எடையோ 5.972E24 kg என அதிகமாக இருப்பதால் சிறிய பொருளின் மீது கூட அதிகமான ஈர்ப்புவிசை செலுத்த முடிகிறது. இந்த ஈர்ப்புவிசையையே 'பூமியின் பொறுமை' என சங்ககால இலக்கியங்கள் கூறுகின்றன போலும்.


நம் தமிழ்நாட்டில் மின்வெட்டு போல உலகில் ஒரு நாள் 'ஈர்ப்பியல்வெட்டு' நடந்தால் எப்படி இருக்கும்???
1) நம்ம கால் ரெண்டும் தரையில இருக்காது(எகிறிக் குதித்தால் வானம் கூட இடிக்கும்)
2) தொகுப்பாளிகள்(VJ’s) சிகை அலங்காரம் நமக்கும் வந்துவிடும்.(அதான் அந்த தலைவிரி (அலங்)கோலம்)
3) எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அழ முடியாது. சுழிய புவியீர்ப்பு விசையால் கண்ணீரால் வெளிவர முடியாது.(இது இயற்க்கையாகவே தொலைகாட்சி தொடர்களுக்கு(Serials) முற்றுபுள்ளி இடும்)
4) உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பிரிவினை இல்லாத பொதுவுடைமை சமுதாயம் உண்டாகும்.(ஆம், எல்லோருமே உயரே தான்)
5) மிக முக்கியமாக முதல்வர் அம்மாவிற்க்கு அவருடைய அமைச்சரவை சகாக்களிடம் தகுந்த மரியாதை கிடைக்காது(ஆம், அவர்களால் 90டிகிரி குனிந்து வணக்கம் செலுத்த முடியாது)
6) அதைவிட முக்கியமாக நம் எல்லோரும் ‘வைரஸ் பேனா வாங்கியிருப்போம்.
என்றெல்லாம் கற்பனை செய்ய கூடாது.
புவியின் ஈர்ப்புவிசை இல்லையென்றால் அடுத்த கனமே வளிமண்டலம் விடுபட்டு சென்றுவிடும். செல்வது வளிமண்டலம் மட்டுமல்ல, ந்ம் அனைவரின் மூச்சுக்காற்றும் தான்.

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...