பொருளாதாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொருளாதாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூன் 29, 2018

எல்லாம் ஒன்றல்ல.. எல்லாம் வேறு வேறுமல்ல...

'பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்'

வள்ளுவனின் வாக்காகிய இந்த வாசகம் எல்லோருக்கும் பொருந்தாது.
சாதாரண வெகுஜன மக்கள் இந்த கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.
ஆனால் அரசாங்கம் திட்டமிடுதலில் இது போன்று ஒப்புமையை காண முடியாது.  சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை துல்லியமாக கணக்கிட்டு இடம், சமூகம், பருவநிலை, நிலஅமைப்பு, கல்வியறிவு என அனைத்தையும் கணக்கிட்டு திட்டங்கள் வகுக்க வேண்டும். அப்போது தான் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும்.

அது சரி, எதோ ஒரு குக்கிராமத்தில் டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து அரசியல் பேசும் முனுசாமியையும், பட்டணத்தில் முகநூலில் இரசிகனாய் சண்டையிடும் அரவிந்தசாமியையும் எப்படி அளப்பது?

சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனத்தில் அனைவரும் சமம் என எழுதிய பின் எழுந்த கேள்வி. பரந்து விரிந்த இந்த இந்தியாவில் சமூக, பொருளாதார காரணிகளை எப்படி அளப்பது? குறை தெரிந்தால் நிரப்பி விடலாம் அல்லவா. ஆனால் குறைவான மக்கள்தொகை உள்ள நாடு அல்லவே. எனவே மதிப்பிடுதல், செயல்படுத்தல் இரண்டும் சீரான வேகத்தில் செல்ல வேண்டும். இல்லையேல் இந்தியா உலக அளவில் ஸ்திரதன்மை இழந்துவிடும். இவற்றை களையவே திட்டக்குழு அமைக்கப்பட்டது. அதற்க்கும் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள் தான்.

முதல் குழுவின் முதல் உறுப்பினர் ஆனார் பிரசண்ட சந்திர மஹலனோபிஸ். அவர் அளித்த 'தரவு ஆய்வு'(Data Analysis) முறை தான் இன்று பல்வேறு இடங்களில் பல்வேறாக பயன்படுகிறது. அந்த முறையை அவர் முதன்முதலில் பயன்படுத்தியது நமது முதல் ஐந்தாண்டு திட்டத்திற்கு தான்.

இன்று அவரது 125வது பிறந்தநாளை பெருமைபடுத்தும் விதமாக கூகுள் டூடுள் வெளியிட்டு அவரை பெருமைபடுத்தியுள்ளது.

புதன், செப்டம்பர் 25, 2013

வீக்கமும் விளக்கமும்...



“எல்லாரும் நாளைக்கு கட்டுரை நோட்டு கொண்டுவந்துருங்க. ‘நான் முதல்வரானால் தலைப்பில நாம ஒரு கட்டுரை எழுதனும். சரியா?

“சரி ஐயா

ராஜன் தான் கரும்பலகையில் கட்டுரையை எழுதி போடுவான், தமிழ் ஐயா கொடுக்கும் நோட்டைப் பார்த்து. அதை பார்த்து நாங்கள் எங்கள் நோட்டில் எழுதிக் கொள்வோம்.

முதல் மதிப்பெண் பெறும் ராஜன் தான் இந்த முதல்வர் பொறுப்பையும் தமிழ் ஐயாவிடமிருந்து ஏற்க்கப் போகிறான் என்பதால், பொறுப்பாய் கட்டுரை நோட்டை மட்டும் எடுத்துச் சென்றோம் அடுத்த நாள் பள்ளிக்கு.
ராஜன் எழுத எழுத நாங்களும் எழுதி கொண்டிருந்தோம்.


நடுவில் ஒரு வரி ‘வறுமையை ஒழிக்க நிறைய திட்டங்கள் வகுக்கப்படும்
நான் ஏதோ தவறு இருப்பதாய் நினைத்து ‘வறுமையை ஒழிக்க நிறைய பணங்கள் அச்சிடப்படும் என திருத்தி எழுதிக் கொண்டேன்.

அதன் பின்விளைவு(Feedback) அடுத்த நாள் தெரிந்தது. கட்டுரையை திருத்திய தமிழ் ஐயா நான் திருத்திய வரிகளை கண்டு கொஞ்சம் அதிகமாகவே கொந்தளித்துவிட்டார். திருத்திய என் கைகளுக்கு தமிழ் ஐயாவின் பிரம்பு தான் பதில் சொல்லியது.

அதன் பின்விளைவு(Again Feedback) அதற்க்கு அடுத்த நாள் தான் தெரிந்தது. கைகளில் நல்ல வீக்கம்.

என் 5ம் வகுப்பு ‘ஆ பிரிவின் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பக்கத்து வகுப்பு மாணவர்களுக்கும் விளக்கி கொண்டிருந்தேன் வீக்கத்திற்க்கான் விளக்கத்தை அடுத்த சில நாட்கள்.

பணவீக்கம் என்று செய்தித்தாள்களில் படிக்கும் போதெல்லாம் வந்து செல்லும் அந்த வீக்கம்.. நினைவுகளில்(கைகளில் அல்ல)
இப்போது புரிகிறது. இரண்டு வீக்கமும் கிட்டதட்ட ஒன்று தான் என்று. உண்மையில் எங்கள் தமிழ் ஐயா எனக்கு அன்று பதில் தான் அளித்துள்ளார்.

எப்படி என்று பார்ப்போம். முதலில் பணவீக்கம் என்றால் என்ன?
அதற்கு முன்னால் ‘வீக்கம் என்றால் என்ன?

நம் உடம்பில் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பகுதி(Ex.எனக்கு கை) இயல்புக்கு மாறாய் அளவில் பெரிதானால் அதற்கு ‘வீக்கம் என்று பெயர்.

நான் திருத்தி எழுத்திய தீர்ப்பின் படி இஷ்டத்திற்க்கு பணத்தை அச்சு அடித்தால் பணமும் வீக்கமடையும்.. ஆம்

எல்லோருக்கும் பணம் தாராளமாக கிடைக்கும். கடின உழைப்பு இல்லாமல். நாட்டின் உற்பத்தி பாதிப்படையும். எழை மக்கள் முடிந்த வரை தங்கள் கடனை அடைப்பார்கள். வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பார்ப்பார்கள்.

ஆனால் பணக்காரர்கள் தங்களுக்கு ஏற்கனவே எல்லாம் இருப்பதால் கூடுதலாக கிடைத்த பணத்தை அளவில்லாமல் செலவு செய்வார்கள்.
ஏற்கனவே உற்பத்தி குறைவு மற்றும் அனைவரிடமும் தாராள பண புழக்கத்தால் வணிகர்கள் விலையை பன்மடங்காக உயர்த்துவர். அதனால் பணத்தின் மதிப்பு குறையும்.

பணத்தின் மதிப்பு எப்படி குறையும்னு யோசிக்கிரிங்களா....
முதல ரூ.3 க்கு வாங்குன ‘அதே வடைய ரூ.5 குடுத்து வாங்கவோம்.
அதே வடை தான். ஆனா அதுக்கு 3ரூபா பத்தாது..இன்னும் 2ரூபா குடுத்தா தான்..இல்ல ‘வட போச்சே’ தான்.


இப்போ பணத்தோட மதிப்பும் குறைச்சிருச்சு.. அதுனால இன்னும் அதிகமா பணம் அச்சிடனும். இதன் பணவீக்கம்..
நான் எழுதியதுனால் ‘கைவீக்கம்
அதை நடைமுறை படுத்தினால் ‘பணவீக்கம்

இதே நான் ஜிம்க்கு போயி வீக்கம்(SIX PACK) வந்துச்சுனா அப்போ வீக்கம் நல்லது.
இதே மாதிரி எல்லா மக்களும் நல்லா உழைத்து பணம் ஈட்டினால் அதன் பெயர் ‘வீக்கம் அல்ல... வளர்ச்சி..
வளர்ச்சி நல்லது......

வியாழன், ஜூலை 11, 2013

டாலரும்.... ரூபாயும்



1 US $=59.78 indian rupee (11/07/13 3:54pm, அதாவது இத கட்டுரை எழுத ஆரம்பிக்கும்பொழுது)


இடம்: டீக்கடை
எவனோ: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61 ஆக உயர்ந்தது.(செய்திதாளில் வாசிக்கிறார்)
யாரோ: அட... அடுத்த பக்கம் திருப்புங்க அண்ணே. விளையாட்டுச் செய்தி பார்போம். நேத்து யாரு மேட்ச் வின் பண்ணிருக்காங்கனு பார்போம். 61 ஆன என்ன 91ஆனா நமக்கு என்ன!!
எவனோ: அட.. உன்னோட பர்ஸ்ஸ பாதிக்கிற விஷயம்பா இது. அதவிட அந்த மேட்ச் தான் உனக்கு முக்கியமாப்பா.
யாரோ: அண்ணே.. என் கையில(கழுத்துலயும்) எந்த டாலரும் இல்ல. நான் வெளிநாட்டுல எந்த பிசினஸ்ம் பண்ண்ல. வேலையும் செய்யல. பங்குசந்தைல எனக்கு எந்த பங்கும் இல்ல. அப்பறம் எதுக்கு அண்ணே நா(ன்) இத பத்தி கவலைபடனும்.
எவனோ: நீ டெய்லி செலவு பண்றேல அதுவே போதும்.. இது உன்ன பாதிக்க.
யாரோ: நான் டாலர்ல செலவலிக்கல. இந்திய ரூபாயில தான் பொருள் வாங்குறேன். அப்பறம் எப்படி இந்த டாலருக்கு நிகரான இந்திய ருபாயின் மதிப்பு என்னை பாதிக்கும்.
எவனோ: (செய்திதாளை பெஞ்ச் மேல வச்சித்து) இந்தியாவோட மக்கள் தொகை எவ்வளவு?
யாரோ: கணக்கு எடுத்தப்ப 128கோடி.(இப்போ எவ்வளவோ!!!!!)
எவனோ: இந்த 128 கோடி பேருக்கு தேவையான அன்றாட நுகர்பொருட்கள் முழுக்க முழுக்க நாமலே உற்ப்பத்தி செய்றதில்ல. தேயிலை, சர்க்கரல இருந்து தங்கம், வெள்ளி என எல்லாமே இறக்குமதி செய்றோம்.(அரிசி கூட) இப்படி மத்த நாட்ல இருந்து வாங்குற(இறக்குமதி செய்ற) பணம் டாலராதான் கொடுக்குறாங்க. (கிட்டதட்ட எல்லா நாடுகளும் பிற நாடுகளுடனான வர்த்தகத்தில் டாலரை தான் பயன்படுத்துகின்றன)
இப்போ இந்தியா(இறக்குமதியாளர்கள்) ஒரு பொருள 5 டாலர்க்கு வாங்குறதுக்கு ஒப்ப்ந்தம் பண்ணிருக்காங்கனு வச்சிகுவோம். டாலர் 50ரூபானு இருந்தப்ப (5*50) 250ரூபாய் குடுத்து வாங்குவோம்.
இப்ப 60ரூபா ஆன பிறகு அதே பொருள (5*60) 300ரூபா குடுத்து வாங்கனும். இப்போ இந்த 50ரூபா நஷ்டத்த இந்த வாங்குற நுகர்வோர்(நாமலே தான்) தலைல தான் கட்டுவாங்க.
இதுல முக்கியமா ஏறுறது பெட்ரோல் விலை தான்(கச்சா எண்ணெய் வில ஏறலைனாலும்)
தங்கம் விலை உயரும்(நேத்து ரொம்ப நாள் கழித்து 16 ரூபா கூடிருக்கு)
சில இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டில் கடன் வாங்கிருக்காங்க(அங்கே வட்டி ரொம்ப ரொம்ப கம்மியாம்). மாத வட்டி 2லட்சம் டாலர்னு வச்சிகுவோம். அப்போ 50ரூபாய இருந்தப்ப(50*200000) விட இப்போ(60*200000) வட்டி அதிகமா வரும். வட்டி மட்டுமில்ல. அசல் கூட அதிகமா வரும். உதாரணமா 2011ல வாங்குன 50கோடி டாலர் கடன்(50கோடி*50) இன்று (50கோடி*60) இந்த அதிகமான அசலுக்கு வேற வட்டி கூடும். இந்த நஷ்டத்த நுகர்வோர்(நாமலே தான்) தலைல தான் கட்டுவாங்க இந்த கம்பேனிக.

நம்ம நாட்டோட பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பது தான் இந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பின் வீழ்ச்சி. அதாவது நம்ம ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பது தான் இந்த 50லிருந்து 60க்குச் சென்றது. (முத 50ரூபா போதும் ஒரு டாலர் வாங்க. இப்போ 60ரூபா கொடுக்கனும்)
யாரோ: ம்ம்ம்... அப்போ இந்த 50, 60து யாரு பிக்ஸ் பண்றது அண்ணே.
எவனோ: உலக சந்தை தான். ஆனா சீனாக்கு மட்டும் அந்த நாட்டு ரிசர்வ் வங்கி.
யாரோ: ம்ம்ம்ம்ம்...
1 US $=59.55 indian rupee (11/07/13 4:45pm, அதாவது இத கட்டுரை எழுதி முடிக்கும் பொழுது)

செவ்வாய், ஜூலை 02, 2013

என்னமோ ஜீடிபியாம்ல... அப்படின என்ன ஸார்?

இது கூட தெரியாதா.. கிராஸ் டொமஸ்டிக் ப்ராடக்ட்(GDP)னு  சொல்ற உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது.
அப்போ என்னோட அடுத்த கேள்வி 'கிராஸ் டொமஸ்டிக் ப்ராடக்ட்' னா என்ன?????
"கூந்தல் இருக்குற மகராசி அள்ளி முடியலாம்"னு ஒரு பழமொழி இருக்கு.
இருக்கட்டும்...அது எதுக்கு இப்போ????(அகெய்ன் உங்க மைண்ட் வாய்ஸ்)
வெல்.. எல்லாத்துக்குமே ஒரு அளவுகோல் வேணும்(உன் இம்சைக்கு அளவு இல்லையா கேட்காதிங்க ப்ளீஸ்)

பொருளாதாரத்தை அளவிடும் ஒரு அளவீடு தான் GDP.(யாரடி நீ மோகினி GDல கூட ஒரு பொன்னு சொல்லும்ல,"india's current GDP rate is 3.5%")

இந்த GDP ய 2 வகைல சொல்லுவாங்க.
1)GDP in amount
2)GDP Growth Rate(in Percentege,அந்த பொன்னு சொன்னது இதான்)

GDP in amount

ஒரு நாட்ல ஒரு வருடம்(சில சமங்களில் அரையாண்டு,காலாண்டு கூட) உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் சந்தை மதிப்பின் மொத்த மதிப்பே GDP.
இதுல இந்தியால எங்கயோ ஒரு மூலைல உற்பத்தி ஆகுற சின்ன குண்டூசில இருந்து நாம விடுற ராக்கெட் வரை அவற்றின் சந்தை மதிப்பு கணக்கிடப்படுகிறது.
சேவை என்பதில் நம்ம வீட்டுக்கு பக்கதில அயர்ன் பண்ணுறவங்களுக்கு கொடுக்குற 5ரூபால இருந்து ஐடி நிறுவனங்கள் பெறும் லட்சம் கோடி வரை அடங்கும்.
ஒரு வருடத்திற்க்கு அப்படி கணக்கு பார்த்த அந்த நம்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எவ்வளவு வரும்னு தான யோசிக்கிறிங்க.
2012ல நம்ம GDP வந்து 1,947,000 மில்லியன் டாலர்(நாம 10வது இடம் உலகத்துல)

10வது இடம்னு சந்தோஷபடாதிங்க பாஸ்.
இது நம்ம நாட்டோட நெலம தான்(ஓ.கே..முன்னெற்றம் தான்)
இந்த GDPய 128கோடியால(நம்ம மக்கள் தொகையே தான்)வகுக்கனும்..இப்ப கிடைக்கிறது தனிநபர் GDP.
இதுல இந்தியா 143வது இடம்.(Rich get Richer.Poor get Poorer)

GDP Growth Rate
இப்போ அந்த பொண்ண பார்போம்...சாரி, அந்த பொண்ணு சொன்ன GDP Growth Rate ன என்னானு பார்போம்.
2011ல GDP 1897608மில்லியன் டாலர்
2012ல GDP 1947000மில்லியன் டாலர்
2011ல விட 2012ல் எவ்வளவு சதவிகதம் GDP(in amt) உயர்ந்து(சில சமயம் குறைந்து) இருக்கோ அதான் GDP Growth rate.

இப்போ அந்த பழமொழிக்கு வரென்."கூந்தல் இருக்குற மகராசி அள்ளி முடியலாம்"ங்கர மாதிரி GDP அதிகமா இருக்கு நாடு நெரைய கடன் வாங்கலாம். அதன் நாம நெரைய கடன் வாங்குரோம்.
இந்தியாவால கடன திருப்பி செலுத்த முடியும்.
( திருப்பி செலுத்த முடியும். அதுக்குகாக கடன் வாங்கலாமா..... அடுத்த பதிவில்)

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...