சுவாரஸ்யமான லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுவாரஸ்யமான லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், அக்டோபர் 31, 2013

இந்தியாவின் முதல் பிரதமர்

  • பாரிஸ்டர் ஆக வேண்டும் என்பது அவர் விருப்பம். அதற்கான பணம் முழுவதையும் அவரே சம்பாதித்தார். ஆனால் அவர் அண்ணனுக்கும் அதே ஆசை. அதனால் தன் அண்ணனை அந்த பணத்தில் படிக்க வைத்தார். அதன் பின்னர் 38 வயதில் தான் தன் பாரிஸ்டர் கனவை நினைவாக்கினார்.
  • ஒருமுறை நண்பர்களுடன் சீட்டாட்டம் விளையாடிக் கொண்டிருக்கிறார். பக்கத்தில் காந்தி ஒரு கூட்டத்தில் உரையாடிக் கொண்டிருக்கிறார். நண்பர்கள் கூட்டத்திற்க்கு போகலாம் என்கிறார்கள். இவரோ ‘ஆட்டத்தை தொடருங்கள். பிரம்மச்சரியம், சிக்கனம், எளிமை என ஏதாவது பேசுவார். கோதுமையிலிருந்து கல் பொறுக்கத் தெரிந்தால் சுதந்திரம் கிடைத்துவிடும் என்று வீண் வார்த்தை பொழிவார். நீங்களே போய் கேளுங்கள். நான் வரவில்லை என்று கூறியவர். பின்னாளில் காந்தியின் சொல்லே வேதம் என கருதினார். காந்தியின் மிகுந்த நம்பிக்கைக்குரியவர் ஆனார்.
  • ஏரவடா சிறையில் காந்தியும், இவரும் ஒரே செல்லில் இருந்தனர். காந்தி சிறையிலேயே உண்ணாவிரதம் இருந்தார். காந்திக்கு அருகில் இருந்து அனைத்து பணிவிடைகளும் செய்தார் இவர். தன் அண்ணன் வெளியில் இறந்த போதும் சிறையிலிருந்து பரோலில் வெளி வர மறுத்துவிட்டார்.
வழக்கறிஞகர் தொழில் செய்து நன்றாக சம்பாதித்தார். ஆனால் கதர் இயக்கத்திலும், மது-தீண்டமை ஒழிப்பு போரட்டத்திலும் ஈடுபட தடையாக இருந்ததால் அத்தொழிலையும் கைவிட்டார். காந்தி அதை மிகுந்த மனவேதனையுடன் தன் ‘சத்திய சோதனையில் பதிவு செய்துள்ளார்.
  • குஜராத்தில் வறுமையில் வடிய விவசாயிகளிடமும் ஆங்கில அரசு வரி வசுல் செய்தது. காந்தியின் அறிவுறுத்தல் பேரில் போரட்டத்தில் இறங்கினார். ஆயிரக்கனக்கானோர் கைது செய்துபட்டனர். இருந்தும் போராட்டத்தை தொடர்ந்தார். ஆங்கில அரசால் ஒன்னும் செய்ய முடியவில்லை. வரியை நீக்கியது. இவர் நாடறிந்த தலைவரானார்.
 
  • 1946ல் இடைக்கால அரசு அமைக்க 16 மாகணங்களில் 13 மாகணங்கள் இவரை பிரதமராக முன்மொழிந்தன. வெறும் 3 மாகணங்கள் தான் நேருவை முன்மொழிந்தனர். நேரு தான் மவுண்ட் பேட்டனுடன் பேச்சுவார்த்தையில் உள்ளார். ஒருவேளை நேரு பிரதமராகாவிட்டால் ஆங்கிலேய அரசு சுதந்திரம் தர தயங்கலாம் என பயந்தார் காந்தி. காந்தி கேட்டுக்கொண்டற்க்கு இணங்க பிரதமர் போட்டியிலிருந்து விலகினார். நேரு இந்தியாவின் முதல் பிரதமரானார்.
  • அதற்க்கு பதிலாய் உள்துறை அமைச்சராக்கப்பட்டார். மிகவும் திறமையாக செயல்பட்டு சிதறிக்கிடந்த சுமார் 560 சமஸ்தானங்களை ‘இந்தியா என்ற நாடாக்கினார். இது மிகப்பெரும் வரலாற்றுச்சாதனை.
  • இராணுவ நடவடிக்கையின் மூலம் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க முயன்றார். ஆனால் நேரு அதற்க்கு அனுமதி மறுத்துவிட்டார்.
  • மனமுடைந்த இவர் காந்தியை சந்தித்து பதவி விலக போவதை தெரிவித்தார். இவர் சந்தித்து சென்ற சில நிமிடங்களில் காந்தி கொல்லப்பட்டார். உள்துறை அமைச்சர் என்ற முறையில் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வற்புறுத்தப்ப்ட்டார்.
  • “இவர் பிரதமராக வந்திருந்தால் இன்று காஷ்மீர் பிரச்சனையே இருந்திருக்காது – வரலாற்று ஆசிரியர்கள்
  • “இவர் பிரமராக வந்திருந்தால் இந்தியாவில் இன்னும் சிறப்பான ஆட்சியை கண்டிருக்கலாம்- இராஜேந்திர பிரசாத்(முதல் குடியரசு தலைவர்)
  • இவரின் பிறந்ததினம் இன்று. இரும்பு மனிதர் தான். ஆனால் மென்மையான இதயம் கொண்டவர்.
  • சர்தார் வல்லபாய் படேலின் புகழ் என்றும் ஓங்குக.
 

சனி, அக்டோபர் 26, 2013

எல்லாம் நேரம்



செல்போனில் நேரம் மாற்றும் அமைப்பில்(Time Settings) Daylight Saving Time(DST) என்ற விருப்பம் இருக்கும். அதை இயக்கியபின் நேரத்தை பார்த்தீர்களானால் உங்கள் செல்பேசியின் நேரம் ஒரு மணி குறைவாக காட்டும். இதையே மார்ச் மாதத்திற்குப்பின் செய்து பார்த்தீர்களானால் நேரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. அதாவது அக்-மார்ச் வரை ஒரு மணிநேரம் குறையும். மார்ச்-அக் மாற்றமேதும் இருக்காது.

ஏன் இந்த மாற்றம்?
குளிர்காலத்தில் மாலைநேரங்களில் மிக விரைவாக இருள் வந்துவிடும். அதே போல் கோடை காலத்தில் மிக நீண்ட நேரம் கதிரவனின் கதிர்கள் பூமியை ஆக்கிரமிக்கும். இருட்டும் வரை தான் வேலை நேரம் என்ற எண்ணம் பரவலாக உலகில் எல்லா பகுதி மக்களிடமும் உள்ளது. இன்றைய கார்ப்பரேட் உலகில் 10 முதல் 6 வரை என வேலை நேரம் நிர்ணயிக்கப்பட்டாலும் இன்றும் பலருக்கு சூரியன் மறையும் நேரமே வேலை முடியும் நேரமாக உள்ளது.

உதாரணமாக 10 முதல் 6 வரை வேலை நேரம் என கொள்வோம். குள்ர்காலத்தில் 5மணிக்கெல்லாம் இருள் சூழ ஆரம்பித்துவிடும். இருளை கண்டவுடன் மக்களுக்கு வேலையில் கவனம் குறையும். எப்போது கிளப்புவோம் என்ற எண்ணம் தோன்றும். மேலும் அவர்கள் வேலை செய்ய வெளிச்சம் மற்றும் அதற்க்கு மின்சாரம் தேவை.

இதே கோடைகாலத்தில் 6மணிவரை நல்ல வெளிச்சம் இருக்கும். மக்கள் எந்த மனச்சலனமும் இல்லாமல் வேலை செய்துகொண்டிருப்பர். விரைவாக விளக்குகள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
குளிர்காலத்தில்(அக்-மார்) ஒரு மணிநேரம் முன்னதாக வைப்பதால் மக்கள் விரைவாக துயிலெழுந்து விரைவாக வேலைய முடிப்பர். அதாவது கடிகாரம் 6PM என காட்டும். ஆனால் மணி 5PM தான் இருக்கும். சூரிய வெளிச்சத்திலேயே வேலையை முடித்தாயிற்று. மக்களும் மனதளவில் எந்த உளைச்சலும் இல்லாமல் இருப்பர்.

நடைமுறைச்சிக்கல்:
இதை நடைமுறைப்படுத்தும் போது முன்பு திட்டமிடப்பட்ட சந்திப்பு, பயணங்கள், நிகழ்ச்சி போன்றவை சிரமங்களை சந்திக்கலாம். 2007ல் நடத்தப்பட்ட ஒரு சர்வேயின் படி வெறும் 0.7% மின்சாரமே இதன் மூலம் சேமிக்கப்படுகிறதாம். ஆனால் மேலே சொன்ன சிரமங்களால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதைவிட அதிகம். அனலாக் கடிகாரங்களில் நாமாக தான் மாற்றியமைக்க வேண்டும். ஆனால் டிஜிட்டல் & கணினி கடிகாரங்களில் புரோகிராம் தானாக மாற்றியமைத்துக் கொள்ளும். இது சில நேரங்களில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது.



எப்பொழுது?
27/10/13(நாளை) அதிகாலை 3 மணிக்கு எல்லோரும் தங்கள் கடிகாரத்தை 2 மணியாக மாற்றிக்கொள்வார்கள்.(டிஜிட்டலில் அதுவாகவே மறிவிடும். (DST ஆன் செய்யப்பெற்றிருந்தால்) மீண்டும் 31/03/14ல் தங்கள் கடிகார நேரத்தை ஒரு மணிநேரம் பின்னோக்கி அமைத்துக்கொள்வார்கள். இதை ஐரோப்பியர்கள் மட்டுமே செய்வார்கள். அமெரிக்கர்கள்(வட அமெரிக்கர்கள் மட்டும்) 2மணியிலிருந்து 1 மணியாக குறைத்துகொள்வார்கள். 31/03/14ல் மீண்டும் பழைய நேரத்திற்கு திரும்புவார்கள். நமக்கு இந்த இரண்டுமே இல்லை.


ஞாயிறு, அக்டோபர் 13, 2013

ஜின் ஜி து லி



சீடர்களே...

உங்கள் அனைவரையும் ஸ்ரீஸ்ரீ உதயானந்தாவின் ulaஅகில உலக தியான மையத்திற்கு வரவேற்கிறேன்.

இன்று நாம் பார்க்கப் போவது ஒரு எளிய பயிற்சி..

முதலில் பார்ப்பதற்க்கு பவர் ஸ்டார் போல சப்பையாக இருந்தாலும்
பள்ளிகூட வாத்தியார் போல உங்கள் முட்டியை கழற்றிவிடும்.

‘உங்கள் வயது என்ன என்று கேட்டால் ‘பாஸ் என்று அடுத்த கேள்விக்கு செல்லும் நடிகையின் வயதக் கூட இந்த பயிற்சி மூலம் கண்டுபிடிக்கலாம்.

பாஸ்(கரன்) மாதிரி அரியர்ஸ் எழுதிக் கொண்டே இருக்கும் பாய்ஸ் கூட இதை செய்தால் பாஸ் பண்ணலாம்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு இனிப்பான பயிற்சி. ஆம்.. ஒரு நாளைக்கு ஒரு நிமிடம் செய்தால் போதும்.

இனி ஆரம்பிப்போமா...
சீடர்களே..
அனைவரும் உங்கள் கண்களை மூட ஆழ்ந்த தியானத்திற்கு செல்லவும்...(ஹாலோ இப்ப இல்ல.. இத முழுசா படித்த பின்)

அப்படியே கண்னை மூடிய படியே எழுந்து நிற்க்கவும்..
அப்படியே நின்று கொண்டே ஒரு காலை 90டிகிரி மடக்கவும்(கண்களை மூடியபடியே)

இப்பொழுது உங்கள் முழு உடல் எடையும் ஒரு காலில் தாங்கும்படி நிற்ப்பீர்கள்.

உங்களால் 10 நொடிகள் வரை கூட நிற்க்க முடியவில்லை என்றால் நீங்கள் உடலால் 60 அல்லது 70 வயதை அடைந்துவிட்டீர்கள் என்று பொருள்.

கண்களை மூடவில்லை என்றால் உங்களால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நிற்க இயலும்.
ஆனால் கண்களை மூடிய நிலையில் 5நொடிகள் கூட நிற்க முடியாது..

இதன் பெயர் ‘ஜின் ஜி து லி
இது ஒரு சீன மருத்துவம்..
முக்கியமாக ‘மிகை இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், ஞாபக மறதி, கழுத்து வலி, முதுகு தண்டு வலி உள்ளோருக்கு பரிந்துரைக்கப் படுகிறது.
மேலும் இதை எல்லோரும் தினமும் ஒரு நிமிடம் செய்தால் இந்நோய்கள் வராமல் தடுக்கலாம்.

முதலில் கண்களை முழுதும் மூடி செய்தல் கடினமாக இருக்கலாம்.
ஆரம்பத்தில் சிறிது திறந்தபடி செய்து பயிற்சி செய்யலாம்..
பழக பழக கண்களை முழுவதும் மூடியபடி செய்யலாம்..

இடையில் இஷ்க்கு இஷ்க்கு என்றெல்லாம் கேட்கலையே....




புதன், செப்டம்பர் 25, 2013

வீக்கமும் விளக்கமும்...



“எல்லாரும் நாளைக்கு கட்டுரை நோட்டு கொண்டுவந்துருங்க. ‘நான் முதல்வரானால் தலைப்பில நாம ஒரு கட்டுரை எழுதனும். சரியா?

“சரி ஐயா

ராஜன் தான் கரும்பலகையில் கட்டுரையை எழுதி போடுவான், தமிழ் ஐயா கொடுக்கும் நோட்டைப் பார்த்து. அதை பார்த்து நாங்கள் எங்கள் நோட்டில் எழுதிக் கொள்வோம்.

முதல் மதிப்பெண் பெறும் ராஜன் தான் இந்த முதல்வர் பொறுப்பையும் தமிழ் ஐயாவிடமிருந்து ஏற்க்கப் போகிறான் என்பதால், பொறுப்பாய் கட்டுரை நோட்டை மட்டும் எடுத்துச் சென்றோம் அடுத்த நாள் பள்ளிக்கு.
ராஜன் எழுத எழுத நாங்களும் எழுதி கொண்டிருந்தோம்.


நடுவில் ஒரு வரி ‘வறுமையை ஒழிக்க நிறைய திட்டங்கள் வகுக்கப்படும்
நான் ஏதோ தவறு இருப்பதாய் நினைத்து ‘வறுமையை ஒழிக்க நிறைய பணங்கள் அச்சிடப்படும் என திருத்தி எழுதிக் கொண்டேன்.

அதன் பின்விளைவு(Feedback) அடுத்த நாள் தெரிந்தது. கட்டுரையை திருத்திய தமிழ் ஐயா நான் திருத்திய வரிகளை கண்டு கொஞ்சம் அதிகமாகவே கொந்தளித்துவிட்டார். திருத்திய என் கைகளுக்கு தமிழ் ஐயாவின் பிரம்பு தான் பதில் சொல்லியது.

அதன் பின்விளைவு(Again Feedback) அதற்க்கு அடுத்த நாள் தான் தெரிந்தது. கைகளில் நல்ல வீக்கம்.

என் 5ம் வகுப்பு ‘ஆ பிரிவின் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பக்கத்து வகுப்பு மாணவர்களுக்கும் விளக்கி கொண்டிருந்தேன் வீக்கத்திற்க்கான் விளக்கத்தை அடுத்த சில நாட்கள்.

பணவீக்கம் என்று செய்தித்தாள்களில் படிக்கும் போதெல்லாம் வந்து செல்லும் அந்த வீக்கம்.. நினைவுகளில்(கைகளில் அல்ல)
இப்போது புரிகிறது. இரண்டு வீக்கமும் கிட்டதட்ட ஒன்று தான் என்று. உண்மையில் எங்கள் தமிழ் ஐயா எனக்கு அன்று பதில் தான் அளித்துள்ளார்.

எப்படி என்று பார்ப்போம். முதலில் பணவீக்கம் என்றால் என்ன?
அதற்கு முன்னால் ‘வீக்கம் என்றால் என்ன?

நம் உடம்பில் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பகுதி(Ex.எனக்கு கை) இயல்புக்கு மாறாய் அளவில் பெரிதானால் அதற்கு ‘வீக்கம் என்று பெயர்.

நான் திருத்தி எழுத்திய தீர்ப்பின் படி இஷ்டத்திற்க்கு பணத்தை அச்சு அடித்தால் பணமும் வீக்கமடையும்.. ஆம்

எல்லோருக்கும் பணம் தாராளமாக கிடைக்கும். கடின உழைப்பு இல்லாமல். நாட்டின் உற்பத்தி பாதிப்படையும். எழை மக்கள் முடிந்த வரை தங்கள் கடனை அடைப்பார்கள். வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பார்ப்பார்கள்.

ஆனால் பணக்காரர்கள் தங்களுக்கு ஏற்கனவே எல்லாம் இருப்பதால் கூடுதலாக கிடைத்த பணத்தை அளவில்லாமல் செலவு செய்வார்கள்.
ஏற்கனவே உற்பத்தி குறைவு மற்றும் அனைவரிடமும் தாராள பண புழக்கத்தால் வணிகர்கள் விலையை பன்மடங்காக உயர்த்துவர். அதனால் பணத்தின் மதிப்பு குறையும்.

பணத்தின் மதிப்பு எப்படி குறையும்னு யோசிக்கிரிங்களா....
முதல ரூ.3 க்கு வாங்குன ‘அதே வடைய ரூ.5 குடுத்து வாங்கவோம்.
அதே வடை தான். ஆனா அதுக்கு 3ரூபா பத்தாது..இன்னும் 2ரூபா குடுத்தா தான்..இல்ல ‘வட போச்சே’ தான்.


இப்போ பணத்தோட மதிப்பும் குறைச்சிருச்சு.. அதுனால இன்னும் அதிகமா பணம் அச்சிடனும். இதன் பணவீக்கம்..
நான் எழுதியதுனால் ‘கைவீக்கம்
அதை நடைமுறை படுத்தினால் ‘பணவீக்கம்

இதே நான் ஜிம்க்கு போயி வீக்கம்(SIX PACK) வந்துச்சுனா அப்போ வீக்கம் நல்லது.
இதே மாதிரி எல்லா மக்களும் நல்லா உழைத்து பணம் ஈட்டினால் அதன் பெயர் ‘வீக்கம் அல்ல... வளர்ச்சி..
வளர்ச்சி நல்லது......

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...