வியாழன், ஜூலை 18, 2013

என் நண்பனின் கவிதை

நமது நான்காண்டின் கையெழுத்து புத்தகம்
இந்த கவிதை...!
இதன் வார்த்தை என்னுடையது
வாழ்க்கை நம்முடையது
முதல்நாள் பெயர்களை பகிர்ந்து கொண்டதாக
ஞாபகம்...அன்றிலிருந்து
உணவு, உடைமை, உணர்வு என்ற பரிமாற்றங்களால்
நமது உறவு நட்பு என்னும் உறுமாற்றமானது

காந்தங்களில் துருவ பாகுபாடு உண்டு
ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ள
கல்லாரி நட்பில் எந்த பாகுபாடும் இல்லை
இதயங்கள் இணைந்து கொள்ள
கேலிவதை சட்டங்கள் எங்களுக்கு தேவையில்லை
கேலி செய்வதுதான் எங்கள் நட்பின் விதை

விளையாட விடுமுறை விரும்பும் மாணவர்கள் மத்தியில்
விளையாட விடுமுறை தவிர்த்தவர்கள் நாங்கள்...!
இடைவேளைகள்...
பெண் பார்க்கச் செல்லும் ஐதீகம்
அரங்கேறும் நேரங்கள்

கோவில்...
கோவிலில் இருப்பது என்னவோ விநாயகர்தான்
நாங்கள் தரிசிக்க செல்வதோ சில லெட்சுமிகளை...!

வரலாற்று புத்தகங்களில் இடம்பெறும் போர்களையெல்லாம்
முதல் ஆண்டிலேயே முடித்தவர்கள்-நாங்கள்

பேருந்தைக்காட்டிலும் பேருந்து நிறுத்தங்களில் அதிகம்
நின்றவர்கள் நாங்கள்தான்
காதலுக்காக சிலர்...காரணங்களுக்காக சிலர்
நட்பிற்காக எல்லோரும்...!

படிப்பது என்னவோ இயந்திரவியல் துறை...துறைதோறும்
தோழிகள் இல்லா தோழர்கள் எனக்கில்லை

இந்தக்காலத்தில்
சில்லறை சப்தங்களைவிட சிரிப்பு சப்தத்திற்குதான் பஞ்சம்
எங்கள் சிரிப்பொலிக்கு இவ்வுலகே இரவல்கேட்டு கெஞ்சும்

செய்முறை வகுப்புகள்
பேனாவை சண்டையிடவைத்து
நாங்கள் சிரித்த நினைவு தொகுப்புகள்...!

கல்லூரி முழுவதும் எங்கள் காலடி படாத இடமில்லை
எங்களுள் காதலில் அடி படாதவர்களும் இல்லை

வார்த்தையால் சொல்ல இயலாத
நினைவுகள் என்னோடு...
அவையெல்லாம் நான்
இருந்த காலங்கள் உன்னோடு...

தேர்வுகள்...
கவிதைக்கு காகிதங்கள் இலவசம்...

farewell
இதுதான் கடைசி நாள்
கடைசி விளையாட்டு
கடைசி சந்திப்பு என்று சொல்லும்
ஒவ்வொரு முறையும், ஒரு தூக்கு கைதியின்
கடைசி இரவுபோல நிமிடங்களில் கழிகின்றன...ஆறுதல்

மேகங்களில் ஒன்றாய் இருந்தோம்...
இன்று மழைத்துளியாய் பிரிய போகிறோம்
கல்லூரிக்கூட்டில் சிறகு வளர்த்தோம்...
இன்று வானம் நோக்கி பறக்க போகிறோம்...

என்றும் நம் நினைவுகள், மலை போல
காலம், கடக்கும் காற்று போல
காற்று மலையை கடந்து செல்லலாம்
கரைத்துவிடுவதில்லை...!

 Specially for hostellers 

கிராமத்திற்குள்..... குக்கிராமத்திற்குள் ஓர்
நகரம் இந்த கல்லூரி..... அந்த
நகரத்திற்குள் ஓர் சொர்க்கம்
எங்கள் விடுதி....!

அயல்நாட்டு ஆசையுள்ள
இவ்வூர் மக்கள்.... இந்த
கட்டிடங்களை அன்னாந்து பார்த்து
அவா தீர்த்து கொள்கின்றனர்…!

இக்கல்லூரி முதல்வர்
எங்கள் விடுதி தலைவர்......
காற்று பூக்களில் தவழ்வது போல….. இவரது
கன்னங்கள் புன்னகைக்க தவறியதில்லை…!

விடுதிகாப்பாளர்கள்...... இவர்களை
இந்தக் கூட்டத்தில் விட்டுப்பாருங்கள்
அடையாளம் காண உங்களுக்கு அரைநாள் வேண்டும்
தோற்றத்தால் அல்ல... இவர்கள்
தோழர்கள் என்பதால்.....!

இதயங்களை இணைக்கும் உலகப்பொதுமொழி
இந்த விளையாட்டு...,
விடுதி என்றாலே உடன் வந்துவிடும்
மெல்ல வழிகேட்டு....!

விளையாட்டிற்கென்றே ஒருவிழா…. இது
என் நண்பர்கள் கொண்டாடும் திருவிழா…!

இங்கே வந்த முதல்பொழுது என் நாட்காட்டியில்
விடுமுறை நாட்களே விருப்பம்
இப்பொழுது என் நாட்களெல்லாம்
விடுதியிலே தான் இருக்கும்…!

மாணவனுக்கும் கல்லூரிக்கும்
இடைவேளை இந்த இரவு
கிடைத்த இடைவேளையெங்கும் நிரம்பிவழியும்
நண்பன் என்ற உறவு…!

இக்காலத்தில்…..
சில்லறை சப்தங்களை விட
சிரிப்பு சப்தத்திற்குதான் பஞ்சம்
எங்கள் சிரிப்பொலிக்கு
இரவே இரவல் கேட்டு கெஞ்சும் …!

எதற்காக விழித்தோம்… எதற்காக சிரித்தோம் …
என்றே தெரியவில்லை
இவையாவும் துக்கம் தொலைத்த
தூங்கா இரவுகள் …!

விடுதி துறந்த மாணவர்கள்………
இந்த கல்லூரிக் கிரிக்கெட்டில்
கல்லூரிக்கும் வீட்டிற்கும் ரன்கள் எடுத்தே
ரணமாய் போகிறார்கள்….
எங்களுக்கோ கல்லூரியும் வீடும் வேறுவேறு இல்லை
காலம் பற்றிய ஒரு வேதனையும் இல்லை…!

உணவு விடுதி……..
உலகம் காணாத COMPOSITE MATERIAL எல்லாம்
கணநேரத்தில் உருவாக்கிவிடும் ஓர் அதிசய இடம்…!
இந்த காலத்தில் ஒரே குடும்பமாயினும்
உணவுநேரம் என்பது வேறுவேறு…
ஒரே குடும்பமான எங்களுக்கு
உணவு நேரம் வேளை மாறாது ….!

இதே தொலைக்காட்சியை
வீட்டில் பார்க்கும் போது கார்கில் யுத்தமே வெடிக்கும்… எங்கள்
விடுதியில் வெறும் சத்தம் மட்டுமே கேட்கும்…!

சங்கீதத்தோடும் எங்கள் சட்டைகளோடும்
சடுகுடு ஆடும் சலவை இயந்திரம்…. எங்கள்
உடை அழுக்கை அதன்
உடலுக்குள் பூட்டிக் கொள்ளும்…!

புறாவிடுதூது…
இந்த நெரிசலில் இறக்கை விரிக்க இடமேது…!
தபால் விடுதூது….
தபால்தலைகள் பல தலைமறைவாகிவிடுகிறது…!
தோதான ஒரே தூது
மின்னஞ்சல் விடுதூது… இங்கே
தளமெங்கும் இணையதளம்
அது எங்கள் பக்கபலம்….!

ஒரே அறையில் இருந்து கொண்டு
உலகைச் சுற்றி வர வேண்டுமா
கையில் ஒரு புத்தகமும்
கடுகளவு கற்பனையும் இருந்தாலே போதும்
உலக அறிவின் தூதகம்
எங்கள் விடுதி நூலகம்…!

அவசரமென்றால் அர்த்த சாமத்திலும்
அக்கறையாய் வரும் உதவி இது
விண்மீனுக்கடுத்து விடியல் வரை
விழித்திருக்கும் அவசர ஊர்தி அது…!

தனியறையென்ற வசதியுண்டு
அந்த அறைதான் தனிமையில் வாடுகிறது
உடமைகளுக்கு மட்டும் உரித்தானது
உறங்கமட்டும் என்றானது…!

கல்லூரி எமக்கு வானம் தந்திருக்கலாம்
விடுதி எமக்கு சிறகு தந்திருக்கலாம்
பறக்க கற்று கொடுத்தது என்னவோ
என் தோழர்களே……. இங்கே
எங்கள் இதயங்கள் இணைக்கபடவில்லை
தைக்கப்பட்டிருக்கின்றன……..

தேர்ச்சி பெற்ற ஆசிரியரின்
மூர்ச்சியடையச் செய்யும் வகுப்புகள் கூட தோற்று போகும் தேர்வின் முதல் நாள்
எங்கள் கூட்டுப்படிப்பு முன்னால் ……….!

என் நண்பர்களும் ஆன்மீகவாதிகளே …… கீதாசாரத்தை கிருஷ்ணருக்கு கற்றுகொடுத்தவர்களே இவர்கள்தான்
உதாரணம்….
இன்று எது உன்னுடையதோ
அது நாளை மற்றவனுடையது
எதை கொண்டு வந்தோம்
அதை இழப்பதற்கு……!

நட்சத்திரங்கள் இல்லாத வானம்… என்
நண்பர்கள் இல்லாத இந்த வளாகம்
இரண்டுமே ஒன்றுதான்…!

நிலா உடைந்து போனாலும்
பாலைவனத்தில் பூக்கள் பூத்தாலும்
தங்கம் விலை மெலிந்தே போனாலும்
நண்பர்கள் மாறுவதில்லை எங்கள்
நட்பு மறைவதுமில்லை….!


இந்ந கவிதைக்கு முற்றுபுள்ளி வைக்க
என்னைப் போலவே என் பேனாவும் தயங்குகிறது
இந்த கரவொலியோடு என்
கல்லூரி வாழ்க்கையும் கரைந்துவிடப்போகிறதா…..இல்லை
நட்புக்கும் பிரிவிற்கும் சம்பந்தமே இல்லை….!

மழைகொண்ட மேகங்கள் நாங்கள்
மேகங்களில் ஒன்றாய் இருந்தோம்…. இன்று
மழைதுளிகளாய் பிரியப் போகிறோம் …. இருந்தாலும்
எங்கள் ஞாபகங்கள் மலை போல
காலம் கடக்கும் காற்று போல
காற்று மலையை கடந்து செல்லலாம்
கரைத்து விடுவதில்லை...!
தேடலுடன்

#தீபன்#
 

 

சனி, ஜூலை 13, 2013

Some of Vairamuthu Books

   
EN PAZHYA PANAI OLAIGAL    
ENN JANNALIN VAZHIYE    
ETHANAL SAGALAMAANARVARKALUKKUM    
IDHUVARAI NAAN    
INNORU DESIYA GEETHAM    
INTHA KULATHIL KALYERINDAVARGAL    
INTHA POOKAL VIRPANAIKKALA    
KAAVE NIRATHIL ORU KADAL    
KALVETTUGAL    
KARUVAACHI KAAVIYAM    
KELVIGALAL ORU VELVI    
KONJAM THENEER NIRAIYA VAANAM
MALAI VAASAM    
MEENDUM EN THOTTLIKKU    
MOUNATHIN SAPTHANGAL    
NETTRU POTTA KOLAM
ORU GRAMATHU PARAVAIYUM SILA KADALKALUM
ORU PORKALAMUM IRANDU POOKALUM 
PEIYENA PEIYUM MAZHAI    
PONMANIVAIRAMUTHU KAVITHAIKAL    
RATHATHAANAM    
SIGARANGALAI NOKKE    
SIRPIYE UNAI SETHUKKUKIREN
TAMIZHKKU NIRAM UNDU
THANEER DESAM    
THIRUTHI EZHUTHIYA THEERPUGAL    
VAANAM THOTTUVIDUM THOORAMTHAN    
VADUKAPATTI MUDAL VALLKKA VARAI
VAIKARAI MEGANGAL
VAIRMUTHU KAVITHAIGAL    
VILLODU VA NILAVE    
YELLA NADHIYILUM EN ODAM   

-----
I bet you if you buy and read anyone of the books, surely you'll buy and read all of Vairamuthu Books.

வைரமுத்துவின் வைர வரிகள்...

இந்தியா உயர்ந்த தேசம். ஆனால் தேசத்தின் உயரத்தில் எல்லா மக்களும் இல்லை.

யார் இல்லையென்றாலும் வாழமுடியும் என்றாலும் நீ இல்லையென்றால் நான் வாழமுடியாது என்று கருதச் செய்வதே காதல்

“மனசு பின்னாடி மனுசன் போனான்னா அவன் மிருகம்; மனுசன் பின்னாடியே மனசு வந்துச்சுன்னா அவன் தெய்வம்“

சத்தியமான பொழப்பு எந்தச் சோதனை வந்தாலும் தாங்கும்; சாமர்த்தியமான பொழப்பு சின்னச் சோதனை வந்தாலும் தாங்காது.

இந்தியாவில் கவலை தருவன கங்கையும் லஞ்சமும். கங்கை குறைந்து கொண்டேபோகிறது; லஞ்சம் கூடிக்கொண்டே போகிறது.

விவசாயம் ஒரு தர்மம். அதில் உழைப்பவன் மட்டுமா பசியாறுகிறான்? உலகமே பசியாறுகிறது. 

உலகப்போரில் கொல்லப்பட்டவர்கள் 60லட்சம்; இன்று பட்டினிச்சாவு 130லட்சம். இப்போது ஆண்டுக்கு 2 உலகப்போர்கள்.

அனுபவிக்கிறது மட்டும்தான் காசு. அதுக்கு மேல பதுக்கி வைக்கிறதெல்லாம் வெறும் நம்பர்னு தெரியாமப் போகுது பலபேருக்கு.

*****

இக்கவிதைகள் யாவும் கவிப்பேரரசின் 'மூன்றாம் உலக போர்' என்னும் நூலில் இடம் பெற்றவை.
உலவெப்பமயமாதல், உலகமயமாக்கல் ஆகியவற்றால் நம் இந்திய விவசாயிகள் சந்திக்கும் மூன்றாம் உலக போரே இந்த நூல்.
இதில் கவிதை இருக்கும்
இதில் காதல் இருக்கும்
இதில் அறிவு இருக்கும்
இதில் உண்மை இருக்கும்
கண்டிப்பா படிங்க.......



வெள்ளி, ஜூலை 12, 2013

9 ஆண்டுகளில்....



 1)       1947ல் சென்னை மாகணத்தில் இருந்த மொத்த தொடக்க பள்ளிகள் 15,303. விடுதலை அடைந்த பின் 6000 பள்ளிகள் மூடப்பட்டன. 9000லிருந்து 1963ல்  30,020 ஆக உயர்ந்த்து பள்ளிகளின் எண்ணிக்கை.
2)      1954ல் 6 முதல் 11 வரை வயது வரையிலான குழந்தைகளில் 45% மட்டுமே பள்ளி சென்றனர். 1963லோ 80%த்தை எட்டியது.
3)      1954ல் 39ஆக இருந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 63ஆக உயர்ந்த்து 1964ல்
4)      1954ல் 141 தான் ஆசிரியர் பயிற்சி பள்ளி. 1963ல் 209
5)      ‘நூலகமா.. அப்படினா என்ன? என்பது 1954ன் நிலைமை. 1964ல் 638 பொது நூலகங்கள், 12 மாவட்ட மைய நூலகங்கள்.
6)      மாணவர்களுக்கு மட்டும் அல்ல. ஆசிரியர்களுக்கும் நல்ல காலம் தான் அந்த 9 ஆண்டு காலம். ஆசியாவிலே முதன்முதலாய் ஆசிரியர்களுக்கு நிரந்தர வைப்பு நிதி, ஓய்வுதியம், ஆயுள் காப்பீடு அறிமுகப்படுத்தப்பட்ட்து.
7)      ஓய்வு பெரும் வயது 55லிருந்து 58 ஆக உயர்த்தபட்டது.
8)      அமராவதி அனை(47000ஏக்கர் பாசன வசதி)
சாத்தனூர் அனை(20000ஏக்கர்)
வைகை அனை(20000ஏக்கர்)
மணிமுத்தாறு அனை(20000ஏக்கர்)
மலம்புழா அனை(46000ஏக்கர்)
கிருஷ்னகிரி அனை(7500ஏக்கர்)
கீழ் பவானி திட்டம்(200000ஏக்கர்)
மங்கலம் அனை(6000ஏக்கர்)
மேட்டூர் பாசன கால்வாய்(45000ஏக்கர்)
9)      59 நூல் நூற்பு ஆலைகள்,30 லட்சம் நூற்புக் கதர்கள்,8000 துணி நூற்புப் பாவுகள்
10)  கிண்டியில் மாபெரும் தொழிற்பேட்டை,சிமெண்ட் ஆலைகள்
நெய்வேலி உரத்தொழிற்சாலை (உற்பத்தி 70000 டன்கள்)
நெய்வேலி நிலக்கரிச்சுரங்கம்
ஐ.சி.எப். தொடர்வண்டிப் பெட்டிகள்
பெல் உயரழுத்த கொதிகலன்கள் (BHEL)
 சிறு போர்முனைக் கருவிகள் (துப்பாக்கித் தொழிற்சாலை)
ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை.
ஆவடி கனரக (டாங்க்) தொழிற்சாலை.
சேலம் இரும்பு உருக்கு ஆலை
9 ஆண்டுகளில் தமிழகம் தொழிற்துறையில் இந்தியாவிலே 2ம் இடத்தை பிடித்தது.
ஜுலை15- கல்வி வளர்ச்சி நாள் என்பதை விட தமிழக வளர்ச்சி நாளாக கொண்டாடுவதே பொருத்தமாய் இருக்கும்.


வியாழன், ஜூலை 11, 2013

டாலரும்.... ரூபாயும்



1 US $=59.78 indian rupee (11/07/13 3:54pm, அதாவது இத கட்டுரை எழுத ஆரம்பிக்கும்பொழுது)


இடம்: டீக்கடை
எவனோ: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61 ஆக உயர்ந்தது.(செய்திதாளில் வாசிக்கிறார்)
யாரோ: அட... அடுத்த பக்கம் திருப்புங்க அண்ணே. விளையாட்டுச் செய்தி பார்போம். நேத்து யாரு மேட்ச் வின் பண்ணிருக்காங்கனு பார்போம். 61 ஆன என்ன 91ஆனா நமக்கு என்ன!!
எவனோ: அட.. உன்னோட பர்ஸ்ஸ பாதிக்கிற விஷயம்பா இது. அதவிட அந்த மேட்ச் தான் உனக்கு முக்கியமாப்பா.
யாரோ: அண்ணே.. என் கையில(கழுத்துலயும்) எந்த டாலரும் இல்ல. நான் வெளிநாட்டுல எந்த பிசினஸ்ம் பண்ண்ல. வேலையும் செய்யல. பங்குசந்தைல எனக்கு எந்த பங்கும் இல்ல. அப்பறம் எதுக்கு அண்ணே நா(ன்) இத பத்தி கவலைபடனும்.
எவனோ: நீ டெய்லி செலவு பண்றேல அதுவே போதும்.. இது உன்ன பாதிக்க.
யாரோ: நான் டாலர்ல செலவலிக்கல. இந்திய ரூபாயில தான் பொருள் வாங்குறேன். அப்பறம் எப்படி இந்த டாலருக்கு நிகரான இந்திய ருபாயின் மதிப்பு என்னை பாதிக்கும்.
எவனோ: (செய்திதாளை பெஞ்ச் மேல வச்சித்து) இந்தியாவோட மக்கள் தொகை எவ்வளவு?
யாரோ: கணக்கு எடுத்தப்ப 128கோடி.(இப்போ எவ்வளவோ!!!!!)
எவனோ: இந்த 128 கோடி பேருக்கு தேவையான அன்றாட நுகர்பொருட்கள் முழுக்க முழுக்க நாமலே உற்ப்பத்தி செய்றதில்ல. தேயிலை, சர்க்கரல இருந்து தங்கம், வெள்ளி என எல்லாமே இறக்குமதி செய்றோம்.(அரிசி கூட) இப்படி மத்த நாட்ல இருந்து வாங்குற(இறக்குமதி செய்ற) பணம் டாலராதான் கொடுக்குறாங்க. (கிட்டதட்ட எல்லா நாடுகளும் பிற நாடுகளுடனான வர்த்தகத்தில் டாலரை தான் பயன்படுத்துகின்றன)
இப்போ இந்தியா(இறக்குமதியாளர்கள்) ஒரு பொருள 5 டாலர்க்கு வாங்குறதுக்கு ஒப்ப்ந்தம் பண்ணிருக்காங்கனு வச்சிகுவோம். டாலர் 50ரூபானு இருந்தப்ப (5*50) 250ரூபாய் குடுத்து வாங்குவோம்.
இப்ப 60ரூபா ஆன பிறகு அதே பொருள (5*60) 300ரூபா குடுத்து வாங்கனும். இப்போ இந்த 50ரூபா நஷ்டத்த இந்த வாங்குற நுகர்வோர்(நாமலே தான்) தலைல தான் கட்டுவாங்க.
இதுல முக்கியமா ஏறுறது பெட்ரோல் விலை தான்(கச்சா எண்ணெய் வில ஏறலைனாலும்)
தங்கம் விலை உயரும்(நேத்து ரொம்ப நாள் கழித்து 16 ரூபா கூடிருக்கு)
சில இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டில் கடன் வாங்கிருக்காங்க(அங்கே வட்டி ரொம்ப ரொம்ப கம்மியாம்). மாத வட்டி 2லட்சம் டாலர்னு வச்சிகுவோம். அப்போ 50ரூபாய இருந்தப்ப(50*200000) விட இப்போ(60*200000) வட்டி அதிகமா வரும். வட்டி மட்டுமில்ல. அசல் கூட அதிகமா வரும். உதாரணமா 2011ல வாங்குன 50கோடி டாலர் கடன்(50கோடி*50) இன்று (50கோடி*60) இந்த அதிகமான அசலுக்கு வேற வட்டி கூடும். இந்த நஷ்டத்த நுகர்வோர்(நாமலே தான்) தலைல தான் கட்டுவாங்க இந்த கம்பேனிக.

நம்ம நாட்டோட பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பது தான் இந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பின் வீழ்ச்சி. அதாவது நம்ம ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பது தான் இந்த 50லிருந்து 60க்குச் சென்றது. (முத 50ரூபா போதும் ஒரு டாலர் வாங்க. இப்போ 60ரூபா கொடுக்கனும்)
யாரோ: ம்ம்ம்... அப்போ இந்த 50, 60து யாரு பிக்ஸ் பண்றது அண்ணே.
எவனோ: உலக சந்தை தான். ஆனா சீனாக்கு மட்டும் அந்த நாட்டு ரிசர்வ் வங்கி.
யாரோ: ம்ம்ம்ம்ம்...
1 US $=59.55 indian rupee (11/07/13 4:45pm, அதாவது இத கட்டுரை எழுதி முடிக்கும் பொழுது)

செவ்வாய், ஜூலை 09, 2013

ராக்கெட்டின் பின்னால்



ஜப்பானின் ஓரிகாமி, நம் பண்டைய வில் வித்தை மற்றும் நவீன ராக்கெட் ஏவும் தொழில்நுட்பம் இவை அனைத்தையும் பயன்படுத்தி விடுவதுதான் நம் காகித ராக்கெட்.(கொஸ்டின் பேப்பெர்ல விடுர ராக்கெட் ரொம்ப தூரம் போனா நெறைய மார்க் வாங்குவோம்னு ஒரு செண்டிமெண்ட் வேற)

எப்படி தான் இந்த ராக்கெட் மேல போகுது. (அட நம்ம காகித ராக்கெட்டோ தீபாவளி ராக்கேட்டோ இல்லங்க.. இந்த இஸ்ரோ ராக்கெட்)
அதுக்கு முன்னாடி,
காற்று மிக மிக எடை குறைவு தான். ஆனா(ல்) வேகமாக செல்லும் பொருளின் மீது அதே காற்று செலுத்தும் விசை மிக மிக அதிகம்.
அதே சமயம் இந்த பூமி எதையும் அவ்வளவு சீக்கரம் விட்டுறாது.
காரணம் புவியீர்ப்பு விசை.
நம்ம ராக்கெட் பாவம். மாமியா, மருமக சண்டைல மாட்டிக்கிற கணவன்மார் போல. இந்த ரெண்டு விசையையும் சமாளிக்கனும்.
முக்கியமா செயற்க்கைகோள்கள் பல டன் எடையுடன் இருப்பதால், புவியீர்ப்பு விசைக்கு எதிராக செலுத்த அதிக வேகத்தில் செலுத்த வேண்டும்.
அதே நேரத்தில் மிக அதிக வேகத்தில்(11.2கி.மீ/விநாடிக்கு மேல்) செலுத்தினால் புவியை விட்டு தப்பி சென்று விடும்.
வேகத்தை குறைத்தால்  புவியீர்ப்பு விசைக்கு எதிராக செலுத்த முடியாது.
ராக்கெட் ஏவும் போது இந்த வேகத்தை தீர்மானிப்பது முக்கியமானது(பெரும்பாலும் எடை மற்றும் எவ்வளவு உயரத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்பதை பொறுத்து)
பூமியில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்திற்கு வளி மண்டலம் மிகவும் அடர்த்தியாக இருக்கும். அதனால் ராக்கெட் செங்குத்தாக செலுத்தப்படும்.
அதன்பின் அது சில கோணம் திருப்பப்படும். அவ்வாறு திருப்பப்படும் போது ராக்கெட்டின் தலைப்பகுதி கிழக்குப் பக்கமாக திருப்பப்படும்.(பூமி மேற்க்கிலிருந்து கிழக்காக சுற்றுவதால்)
மிக உயரத்தில் நிறுத்தப்படும் செயற்க்கைகோள்கள் நீண்ட ஆயுளை பெரும்.( காற்றினால் ஏற்படும் தடை குறைவு என்பதால்)

திங்கள், ஜூலை 08, 2013

ஒரு நாள்...ஒரு நொடி...



கண்களுக்கு இமை இருப்பதால் இழுத்துப் போர்த்திக் கொண்டு அடம் பிடிக்கின்றது...இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிகிறேனே என்று. காதுகளே.. நீங்கள் மட்டும் ஏன் சீக்கிரமே எந்திரிச்சிரிங்க. காலை(விடியல்) முதலில் தொடுவது செவியைத் தான் போல.
இரகசியமா ஒட்டு கேட்டிருக்கும் போல ஜன்னலோரம் விளையாடிக் கொண்டிருந்த சிட்டுக்குருவி ஜோடி ‘நாளைக்கு 6 மணிக்கெல்லாம் எந்திரிக்கனும்னு நான்  செல்பேசில பேசுனத. செல்பேசியினால் சிட்டுக்குருவிகளுக்கு ஆபத்து என சிட்டுக்குருவிகளின் உளவுத்துறையில் இருந்து அதற்கு தகவல் வந்திருக்கலாம். மறக்காமல் அதே ஜன்னலோரம் வந்து என்னை எழுப்பிவிட்டது அதன் தாய்மொழியில் ஜோடி சிட்டுக்குருவிகளில் ஒன்று மட்டும்.
7:30 மணி காட்டியது கடிகாரம் சாப்பிட உட்காரும் போது. மணியுடன் ஜன்னலோர அதே சிட்டுக்குருவியின் பிம்பத்தை பிரதிபலித்தது கடிகார கண்ணாடி. இக்கடிகாரத்தை பார்த்துதான் என்னை எழுப்பிவிட்டியானு அதன் தாய்மொழி தெரியாததால் என் தாய்மொழியில் எனக்கு நானே கேட்டுகொண்டேன் என் தாய்மொழி அதற்கு தெரியாது என்பதால்.
23.5டிகிரில் சாய்ந்து கொண்டே பயணிக்கும் பூமியைப்போல் கூட்டத்தால் ஒரு பக்கம் சாய்ந்தே வரும் பேருந்தில் தான் பயணிக்க வேண்டும் என்(கள்) கல்லூரிக்கு. சீட்டில் சுகமாக உட்கார்ந்து வரும் அவங்களுக்கும் அதே கட்டணம். கடைசி படியில் ஒரு காலின் நுனியும், ஜன்னலோர கம்பியை பிடித்திருக்கும் கைகளை தவிர பேருந்திற்கு வெளியே இருக்கும் எனக்கும் அதே கட்டணமா என கேட்க வாய் திறக்கும். ‘அதனால் என்ன? உன் புத்தகங்கள் ஜன்னலோரம் அமர்ந்திருக்கும் அப்பெண்ணின் மடியில் பயணம் செய்கின்றதே என மனம் வாயை அடைத்துவிடும். உடம்பை படியில் தொங்க விட்டு மனம் எங்கோ பயணம் செய்யும் அப்பயணத்தில். இறங்கும் இடத்தில் மீண்டும் ஒன்றையொன்று சந்தித்துக்கொள்ளும்.
பொதுவாக நுழைவாயில் தான் தொடக்கம். ஆனால் இங்கு நுழைவாயில் தான் முடிவு... பிரமாண்டத்திற்கு, அழகிற்கு, சுத்ததிற்கு...
கணித ஆசிரியர். மனம் மூளையிடம் ஆலோசனை கேட்கிறது ‘இவரிடம் என்ன பொய் சொல்லலாம் என்று. போர்வீரனைப் போல தயாராக உள்ளது வாய்... பொய்க்காக. அவருக்கு தெரியும் எனக்கு இன்னைக்கு தேர்வு இல்லையென்று. அதனால் வீட்டில் சொன்ன அந்த பொய்யை இவரிடம் சொல்ல முடியாது. வலது மூளையும், இடது மூளையும் இணைந்து சட்டென்று சொல்லிக்கொடுத்தது உதடுகளுக்கு. உதடுகள் எதுவும் தெரியாத சிறு குழந்தை போல அப்படியே ஒப்பித்தது “நாளைக்கு பரிட்சைக்கு படிக்க வந்தேன் ஸார்
நானும் கண்களும் சுற்றி சுற்றி பார்த்து கொண்டிருந்தோம். மணி பார்க்க சொல்லி கண்களை அடித்தது மூளை. 9:57AM. இன்னும் மூன்று நிமிடங்கள் தான்... தேர்வு ஆரம்பிக்க. கால்கள் தரையில் பரந்தும் ஒரு நிமிடம் ஆனது தேர்வு நடைபெறும் வளாகத்தை அடைய.. இப்பொழுது கால்கள் பறப்பதை நிறுத்தி கண்கள் பறக்க ஆரம்பித்தன. பி.எஸ்சி(பிசிக்ஸ்) தேர்வு எண் 223192.
என் கண்களில் பட அரை நிமிடத்திற்க்கும் மேல் ஆயின.
முதல் தளம், புது வளாகம், அறை எண்:13
கண்களுக்கு முடிந்தது தேடல். இனி கால்களுக்கு தான்.
9:59AM,  புது வளாக நுழைவாயில். இன்னும் ஒரு நிமிடம் என்ற மகிழ்ச்சி அடுத்த நொடியே போனது.
“தம்பீ... பரீட்சை இருக்குறவங்க மட்டும் தான் உள்ள போகலாம். இல்லைனா போக கூடாது- காவலாளி

கணித ஆசிரியரிடம் சொன்ன பொய் பொய்யானது. சொன்னது உண்மையானது. புத்தகம் எடுத்தேன். கனிம வேதியியல். பொழுது போக்கினேன்.
12:58PM.. எல்லோரும் வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.
1:05PM… இன்னும் பார்க்கவில்லை. புது வளாகம் காலியானது என்னை தவிர.
கல்லூரி பேருந்துகள் அணிவகுத்து நின்றன... கிளம்புவதற்கு.
முதல் பேருந்து அருகில் நான்.
ஏழாவது பேருந்தில் ஏறினாள் அவள்.
அவளை கண்ட அந்த ஒரு நொடி தான்.... என் அன்றைய ஒரு நாள்

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...