செவ்வாய், அக்டோபர் 01, 2013

காந்தியா.. யார் அவர்?


‘காந்தியா.. யார் அவர்?
சத்தியமா இந்த கேள்விய 120கோடில பாதி பேர் கேட்டிருப்பாங்க...ஒருவேளை பணத்தில் காந்தியின் உருவம் அச்சிடப்படாமால் இருந்திருந்தால்...

இல்ல இன்னும் சில வருடங்களில் தேர்வுகளில் இந்த மாதிரி கேள்வி கூட கேட்கலாம்....நம் ரூபாய் நோட்டில் இருக்கும் உருவம் யாருடையது?
இதற்க்கும் பாதிக்கும் மேலானோர் பதில் தெரியாமால் முழிக்கலாம்.

ஆக பணத்தின் மதிப்பு தான் காந்தியின் மதிப்பை இன்னும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. பணத்தின் மதிப்பை விட காந்தியின் மதிப்பு குறைந்து கொண்டுவருகிறது கடந்த சில வருடங்களாக..

‘காந்தியின் அகிம்சையினால் தான் நாம் சுதந்திரம் பெற பல காலம் ஆனது. ஆங்கிலேயரை எதிர்த்து சண்டையிட்டு இருந்தால் 1947க்கு முன்னரே விடுதலையை வாங்கியிருக்கலாம்

‘ஆங்கிலேயர் காந்தியின் போரட்டத்திற்க்கு பயந்து விடுதலை தரவில்லை. இதற்க்கும் மேலும் இந்தியாவை ஆள அவர்கள் விரும்பாமல் தான் சுதந்திரம் அளித்தார்கள்

‘காந்தியின் தனிமனித போரட்டத்திற்கு கிடைத்த சுதந்திரம் அல்ல இது. எத்தனையோ தலைவர்கள் செய்த தியாகத்தின் பயன் தான் நம் சுதந்திரம். காந்தியை மட்டும் தேசப்பிதா என்பது தவறு

‘நாம் அடிமை பட்டிருக்கிறோம்.. நமக்கு விடுதலை தேவை என்பதை தெரியாமலே தான் இருந்தனர் நம் மக்கள்.
மக்களை ஒருக்கிணைக்க, விழிக்கச் செய்ய எந்த அமைப்போ, தலைவர்களோ இல்லை சுமார் 150 ஆண்டுகால ஆங்கிலேய ஆட்சியில்.

1857ல் முதல் இந்திய சுதந்திர போர் என்று பாட புத்தகத்தில் படித்த நியாபகம். ஆனால் அது சுதந்திர போரே அல்ல என்பது வரலாற்று அறிஞர்களின் வாதம். ஆம், அதில் சுதந்திரம் என்ற குறிக்கோள் இல்லை. கொழுப்பு தடவிய தோட்டாவை உபயோக்க மறுத்து சிப்பாய்களும், துணைப்படை திட்டத்தின் கீழ் தன் நாட்டை இழந்த ஜான்சி ராணியும், தன் ஓய்வூதியம் வராததால் வங்காள ஆட்சியாளரும் அவர்கள் பகுதிகளில் கிளச்சியில் ஈடுபட்டனர். ஆக ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நடக்கவில்லை இந்த போர்(கிளர்ச்சி)..

1885ல் முதன்முதலில் ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ். ஆரம்பித்தவர் ஒரு ஆங்கிலேய அதிகாரி. அதன் பின் இந்தியர்கள் அதில் முக்கிய பொறுப்புகளை பெற்றனர்.
‘உயர் சாதி மாணவர்கள் ஆங்கில அரசில் பணிபுரிய, கல்லூரியில் சேர பரிந்துரை கடிதம் வழங்குவது போன்ற வேலைகளை மட்டும் செய்துவந்தது.

சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு காங்கிரஸ் என்ற அமைப்பு இருப்பதே தெரியாது. காங்கிரஸில் இருந்த அனைவரும் படித்த உயர்குடி இந்தியர்கள். ஆங்கில அரசிடமிருந்து உயர்குடி மக்களுக்கு பல சலுகைகளை வாங்கிதந்தனர், ஏழை எளிய மக்களை பற்றி எந்த கவலையும் படவில்லை.



1916ல் இந்தியா திரும்புகிறார் காந்தி. அவரும் படித்தவர் என்பதால் காங்கிரஸ் பற்றி தெரிந்து கொள்கிறார். உறுப்பினர் ஆகிறார். பின் காங்கிரஸின் தலைவராகிறார்.
·         காங்கிரசில் சேர உறுப்பினர் கட்டணத்தை குறைக்கிறார்
·         மும்பையில் செயல்பட்டது காங்கிரஸ்.. நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அலுவலகம் திறந்தார் காந்தி.
·         அனைத்து சாதி, மதத்தவரும் சேரலாம் என்றவிதியை கொண்டுவந்தார்.
·         காங்கிரஸ் கூட்டம் எந்த பகுதியில் நடக்கின்றதோ, அப்பகுதி மொழியில் தான் கூட்டம் நடைபெற வேண்டும் என அறிவித்தார்.(அதற்கு முன் ஹிந்தி தான் இந்தியா முழுவதும்)
·         காங்கிரஸின் அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் மூலமே ஆட்கள் தேர்ந்தேடுக்க ஆவன் செய்தார்.(அதற்கு முன் நியமித்தல் முறை தான்).
காந்தியின் இந்த நடவடிக்கைகள் தான் இந்திய மக்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தது. அனைத்து வேறுபாடுகளையும் மறந்து மக்கள் ஒற்றுமையாய் இயங்கினர்.

காங்கிரஸை சுதந்திரத்திற்க்காக மட்டும் பயன்படுத்தவில்லை காந்தி.
1920ல் சுமார் 1000காங்கிரஸ் உறுப்பினர்களை(இளைஞகர்கள்) இந்தியா முழுவதும் அனுப்பினார். முக்கியமாக கிராமபுறங்களுக்கு.
கீழ்கண்டவைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த.
·         தீண்டாமை & சாதி ஒழிப்பு
·         குடிப்பழக்கத்தின் தீமை
·         சுகாதாரத்தின் முக்கியத்துவம்
·         பெண்கள் முன்னேற்றம் & பெண் கல்வி
·         ஏழ்மை ஒழிப்பு

இவ்வாறு மக்களை முன்னேற்றி, ஆங்கிலேயர் முன்னால் நிறுத்தியவர் தான் காந்தி.

காந்தி வாங்கி தந்தது இரண்டு சுதந்திரம்.
1) ஆங்கிலேயரிடமிருந்து
2) அறியாமையிலிருந்து
  


  

புதன், செப்டம்பர் 25, 2013

வீக்கமும் விளக்கமும்...



“எல்லாரும் நாளைக்கு கட்டுரை நோட்டு கொண்டுவந்துருங்க. ‘நான் முதல்வரானால் தலைப்பில நாம ஒரு கட்டுரை எழுதனும். சரியா?

“சரி ஐயா

ராஜன் தான் கரும்பலகையில் கட்டுரையை எழுதி போடுவான், தமிழ் ஐயா கொடுக்கும் நோட்டைப் பார்த்து. அதை பார்த்து நாங்கள் எங்கள் நோட்டில் எழுதிக் கொள்வோம்.

முதல் மதிப்பெண் பெறும் ராஜன் தான் இந்த முதல்வர் பொறுப்பையும் தமிழ் ஐயாவிடமிருந்து ஏற்க்கப் போகிறான் என்பதால், பொறுப்பாய் கட்டுரை நோட்டை மட்டும் எடுத்துச் சென்றோம் அடுத்த நாள் பள்ளிக்கு.
ராஜன் எழுத எழுத நாங்களும் எழுதி கொண்டிருந்தோம்.


நடுவில் ஒரு வரி ‘வறுமையை ஒழிக்க நிறைய திட்டங்கள் வகுக்கப்படும்
நான் ஏதோ தவறு இருப்பதாய் நினைத்து ‘வறுமையை ஒழிக்க நிறைய பணங்கள் அச்சிடப்படும் என திருத்தி எழுதிக் கொண்டேன்.

அதன் பின்விளைவு(Feedback) அடுத்த நாள் தெரிந்தது. கட்டுரையை திருத்திய தமிழ் ஐயா நான் திருத்திய வரிகளை கண்டு கொஞ்சம் அதிகமாகவே கொந்தளித்துவிட்டார். திருத்திய என் கைகளுக்கு தமிழ் ஐயாவின் பிரம்பு தான் பதில் சொல்லியது.

அதன் பின்விளைவு(Again Feedback) அதற்க்கு அடுத்த நாள் தான் தெரிந்தது. கைகளில் நல்ல வீக்கம்.

என் 5ம் வகுப்பு ‘ஆ பிரிவின் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பக்கத்து வகுப்பு மாணவர்களுக்கும் விளக்கி கொண்டிருந்தேன் வீக்கத்திற்க்கான் விளக்கத்தை அடுத்த சில நாட்கள்.

பணவீக்கம் என்று செய்தித்தாள்களில் படிக்கும் போதெல்லாம் வந்து செல்லும் அந்த வீக்கம்.. நினைவுகளில்(கைகளில் அல்ல)
இப்போது புரிகிறது. இரண்டு வீக்கமும் கிட்டதட்ட ஒன்று தான் என்று. உண்மையில் எங்கள் தமிழ் ஐயா எனக்கு அன்று பதில் தான் அளித்துள்ளார்.

எப்படி என்று பார்ப்போம். முதலில் பணவீக்கம் என்றால் என்ன?
அதற்கு முன்னால் ‘வீக்கம் என்றால் என்ன?

நம் உடம்பில் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பகுதி(Ex.எனக்கு கை) இயல்புக்கு மாறாய் அளவில் பெரிதானால் அதற்கு ‘வீக்கம் என்று பெயர்.

நான் திருத்தி எழுத்திய தீர்ப்பின் படி இஷ்டத்திற்க்கு பணத்தை அச்சு அடித்தால் பணமும் வீக்கமடையும்.. ஆம்

எல்லோருக்கும் பணம் தாராளமாக கிடைக்கும். கடின உழைப்பு இல்லாமல். நாட்டின் உற்பத்தி பாதிப்படையும். எழை மக்கள் முடிந்த வரை தங்கள் கடனை அடைப்பார்கள். வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பார்ப்பார்கள்.

ஆனால் பணக்காரர்கள் தங்களுக்கு ஏற்கனவே எல்லாம் இருப்பதால் கூடுதலாக கிடைத்த பணத்தை அளவில்லாமல் செலவு செய்வார்கள்.
ஏற்கனவே உற்பத்தி குறைவு மற்றும் அனைவரிடமும் தாராள பண புழக்கத்தால் வணிகர்கள் விலையை பன்மடங்காக உயர்த்துவர். அதனால் பணத்தின் மதிப்பு குறையும்.

பணத்தின் மதிப்பு எப்படி குறையும்னு யோசிக்கிரிங்களா....
முதல ரூ.3 க்கு வாங்குன ‘அதே வடைய ரூ.5 குடுத்து வாங்கவோம்.
அதே வடை தான். ஆனா அதுக்கு 3ரூபா பத்தாது..இன்னும் 2ரூபா குடுத்தா தான்..இல்ல ‘வட போச்சே’ தான்.


இப்போ பணத்தோட மதிப்பும் குறைச்சிருச்சு.. அதுனால இன்னும் அதிகமா பணம் அச்சிடனும். இதன் பணவீக்கம்..
நான் எழுதியதுனால் ‘கைவீக்கம்
அதை நடைமுறை படுத்தினால் ‘பணவீக்கம்

இதே நான் ஜிம்க்கு போயி வீக்கம்(SIX PACK) வந்துச்சுனா அப்போ வீக்கம் நல்லது.
இதே மாதிரி எல்லா மக்களும் நல்லா உழைத்து பணம் ஈட்டினால் அதன் பெயர் ‘வீக்கம் அல்ல... வளர்ச்சி..
வளர்ச்சி நல்லது......

வெள்ளி, செப்டம்பர் 13, 2013

என் காதில் விழுந்த கேள்விகள்



ஒரு வழியாக விரைவாக, சரியாக வந்துவிட்டது தீர்ப்பு.
தீர்ப்பு வந்தவுடன் ஒரு கூட்டம் கிளம்பிவிட்டது.



மரண தண்டனை சரியான தீர்வல்ல

மரண தண்டனையை பார்த்து, பயந்து திருந்திவிட போவதில்லை தான்.
இந்த 4 பேரையும் சில ஆண்டுகள் அரசாங்க செலவில் வாழ வைத்து, திருத்தி நல்ல ‘மனிதர்களாக வெளியே அனுப்பலாம். நாளை அவர்களால் இந்தியாவே உலகளவில் பெருமைபடலாம்.
ஆனால் நிர்பயாவின் நரம்புகள் அனுபவித்த வலிகளை இந்த 4(+1)களும் அனுபவிக்க வேண்டாமா...

சின்ன பையன் அறிவில்லாம பண்ணிட்டான்பா

17 வயதிலே இவ்வளவு பெரிய தப்பு செய்யும் ‘சிறுவன் 3 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு ‘பெரியவனாய் சமத்து பையனாய் இருப்பானா??!!!!
18 வயது என்பது நாம் நிணயித்த ஒரு வயது... அவ்வளவு தான்...
14வயதில் ஒரு சிறுவன் டிகிரி முடிக்கும் போது இந்த சமூகம் அவனை மிகவும் அதிகமாக பாராட்டுகிறது. ‘வயதுக்கு மீறிய சாதனை என கொஞ்சுகிறது.
அதே 17 வயதில் ஒரு தவறு செய்தால் இவன் ‘சிறுவன் என விதி விலக்கு அளிக்கிறது. ‘வயதுக்கு மீறிய செயல் என தண்டனை தர மறுக்கிறது.

ஒரு பொண்ணு நைட் 10 மணிக்கு படம் பார்த்துத்து பையனோட தனியா சுத்தலாமா

முழு இந்தியாவுக்கே தான் சுதந்திரம் கொடுத்துத்து போயிருக்கான் வெள்ளைக்காரன்.... ஆண்களுக்கு மட்டும் அல்ல.
10 மணிக்கு ஒரு(நான்கு) ஆண்(கள்) மது அருந்திவிட்டு சுற்றுவது தப்பில்லை என்றால், ஒரு பெண் படத்திற்க்கு சென்று விட்டு திரும்புவதும் தப்பில்லை தான்.

இது போன்ற குற்றங்கள் தினந்தோறும் எவ்வளவோ நடக்கத்தான் செய்கின்றன.. ஊடகங்கள் இதை மட்டும் ஏன் பெரிது படுத்த வேண்டும்?

எல்லாத்தையும் பெரிது படுத்தினா அதுக்கு மட்டும் ஒரு சேனல் வேணும்.

இந்த விசயத்தை பெரிது படுத்தியதுனால் தான் ‘வர்மா அறிக்கை என்ற ஒன்றை அரசு நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்ற முடிந்தது.
வர்மா அறிக்கையின் பரிந்துரைகளில் நிறைவேற்றப்பட்ட சில சட்டங்கள்..
19-மார்ச்-2013 அன்று நாடளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அமில வீச்சு- குறைந்த பட்சம் 10ஆண்டுகள், அதிக பட்சம் ஆயுள் தண்டனை
அமில வீச்சு முயற்சி- குறைந்த பட்சம் 5ஆண்டுகள், அதிக பட்சம் 7ஆண்டுகள்.
பாலியல் தொந்தரவு(தொடுதல், தாகாத வார்த்தை, சைகைகள்)- 5ஆண்டுகள் வரை சிறை தண்டனை.
தவறாக புகைப்படம் எடுத்தல்- 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை
பின் தொடர்தல்- அதிகபட்சமாக 1 ஆண்டு வரை.

இவை அனைத்தையும் கொண்டுவந்தது ‘நிர்பயா என்றால் மிகையல்ல.

தண்டனை மட்டும் அல்ல.. பாதிக்கப்ப்ட்ட பெண்களின் மறுவாழ்விற்க்கும் வழிவகை செய்கிறது புதிய சட்டம்..
நடந்த நல்ல விசயங்களை பாருங்கள்.

என்ன தான் சட்டம் இருந்தாலும் தப்பு பண்ணுறவன் தப்பு பண்ண தான் செய்வான்

தப்பு பண்ணுறவன் சட்டத்துக்கு பயப்பட மாட்டான் தான்..
தப்பு செய்பவனை திருத்துவதை விட நல்லவனை தப்பு செய்யாமல் வைத்திருக்கயாவது சட்டம் வேண்டும்.

எந்த திருடனும் போலிஸுக்கு பயந்து தொழிலை விடவில்லை..
எந்த தீவிரவாதியும் இராணுவத்திற்க்கு பயந்து மனிதனாக மாறுவதில்லை. மனித வெடிகுண்டாக வேண்டுமானால் மாறுகிறார்கள்.
ஆனால் பொது மக்கள் போலிஸுக்கும், இராணுவத்திற்க்கும் பயப்படுகிறார்களே.

இப்போ நீங்க ஏதோ கேள்வி கேக்குற மாதிரி இருக்கே.......


விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...