ஞாயிறு, செப்டம்பர் 27, 2015

ஈர மணலில்...

           ஆழ்ந்த அமைதியான உறக்கத்தில் இருந்த அந்த சிப்பியை, சுழன்று வந்த அலையொன்று தூக்கிக் கொண்டு கரையில் விட்டுச் சென்றது. சில நொடிகளில் வந்த மற்றொரு அலை அதை மேலும் சிறிது தூரம் தள்ளிச் சென்றுவிட்டது. கருப்பையிலிருந்து வெளியே தள்ளப்பட்ட குழந்தை போல அனாதையாய் கிடந்தது சிப்பி.




          சற்று தூரத்தில் மணல்வெளில் மணல்வீடு கட்டி விளையாடி கொண்டிருந்தனர் சிறுவர் சிலர். சிப்பியைக் கண்ட சிறுமியொருத்தி அதையெடுத்து மணல்வீட்டின் உச்சியில் வைத்து மகுடமாக்கினாள்.

             இருள்போர்வையை வானம் மெல்ல இழுத்து போர்த்த மணல்வீட்டை தரைமட்டமாக்கிய சிறுவர் கூட்டம் தங்கள் வீடுகளை நோக்கி ஓடினர்.
கடற்கரை மணலில் தள்ளாடியபடியே நடந்து வந்தான் ஒருவன். சிப்பியின் கூர்மையான பகுதி அவன் காலில் குத்திவிட, வலியில் துடித்தவன் வழியில் கிடந்த சிப்பியை தூக்கி தூரம் எறிந்தான் எரிச்சலுடன். கடலிடமிருந்து இன்னும் தூரம் சென்றது சிப்பி.
                     
                 காலை விடியலின் வெளிச்சத்தில் கடற்கரை அருகில் இருந்த அணிகலன் கடையை திறந்தான் கடைக்காரன்.அப்போது வாசலிலே கண்டான் அந்த சிப்பியை. சிறிய சேதம் கூட இல்லாத சிப்பியை கையில் எடுத்த அவன், எந்த சிற்பியின் கையும்படாமல் எவ்வளவு அழகாக செதுக்கப்படுள்ளது இந்த சிப்பி என வியந்தான். 

                   தினமும் முத்துக்கள், சிப்பி, சங்குகளுடன் தான் தொழில் செய்து வரும் அவனுக்கு இந்த சிப்பி தனியாய் தெரிந்தது. தான் தற்போது சிறப்பாய் செய்து வரும் முத்து மாலையுடன் அந்த சிப்பியை இணைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைத்தான். பெட்டகத்தினுள் வைத்திருந்த முத்துமாலையை எடுத்து சிப்பியுடன் வைத்து பார்த்தான். தாயுடன் சேய் இருக்கும்போது தான் அழகின் உச்சம் என நினைத்து கொண்டான்.பின்ப் அதனை அந்த மாலையுடன் கோர்க்க சிப்பியின் மேல் பகுதியில் சிறு துளையிட்டான். கூர்மையான பகுதிகளை சீர் செய்தான். பட்டை தீட்டிய வைரமாய் தோன்றியது. பின்பு மீண்டும் அந்த பெட்டகத்திற்குள் வைத்து மூடினான்.

                    உச்சிற்கு சென்ற கதிரவனின் வெட்கை தாங்க முடியாமல், நிழலும் அனைவரின் காலுக்கடியில் ஒளிந்து கொண்டது.அந்த மதிய நேரத்தில், அந்த கதிரவனினும் பொலிவாய் பெண்ணொருத்தி தோழிகளுடன் நடந்து வந்தாள். கடைவீதியின் இருபுறமும் இருந்த கடைகளில் அழகுசாதனபொருட்களையும்,அணிகலன்களையும் பார்த்தபடியும், ஒரு சிலவற்றை வாங்கி கொண்டும் வந்தனர் தோழிகள். நித்திலா மட்டும் எதையுமே கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. நேரான அதே நேரத்தில் சோகமான பார்வையுடன் கூட்டத்திற்க்கு நடுவில் தனிமையாக வந்து கொண்டிருந்தாள். அழகுசாதன பொருட்களிலையே கண்ணாக இருந்த தோழிகள் நித்திலாவை கண்டுகொள்ளவில்லை.


                      'பாவம் அவர் மனம் எவ்வளவு நொந்துபோயிருக்கும். வாளினால் உடலில் பல காயங்கள் வாங்கியவர், என் ஒற்றை வார்த்தையால் அவர் மனம் எவ்வளவு காயம் பட்டிருக்கும். சுவையை அறிய தெரியும் நாவிற்கு ஏன் அடுத்தவர் மனதை புரிந்து கொண்டு பேச தெரியவில்லை.' என தனக்குள்ளேயே தன்னைப் பற்றி கடுமையாக கோபித்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தாள்.


                      எல்லா பெண்களும் அந்த கடையில் நின்று பார்ர்துகொண்டிருந்தனர். நித்திலாவும் அவர்கள் பின்னா சென்று நின்றாள். பெண்கள் கூட்டத்தை கண்டதும் கடைக்காரன் இத்தனை நாள் சிரமப்பட்டு செய்துவந்த முத்துமாலையை திறந்து காண்பித்தான். எல்லா பெண்களும் மொத்தமாய் முகம் சுளித்தனர் 'முத்து மாலையில் சிப்பியா?'


அனைவரையும் விலக்கி கொண்டு முன்னால் சென்ற நித்திலா 'மிக அருமையாக உள்ளது. இதை நான் வாங்கி கொள்கிறேன்'

பின்பு தன் தோழி முகில்வாகினியிடம் இதை என் கழுத்தில் அணிவித்து விடு' என்றாள்
சிறிது தயக்கத்துடன் அணிவித்துவிட்டாள் அவள்.

'இந்த மாலையில் அப்படி என்ன அழகு இருக்கிறது. ஒரு வேளை சிப்பி இல்லையென்றால் அழகாய் இருந்திருக்கலாம்' என்றாள் இளசெந்தினி.

'இந்த சிப்பி இடம் அளிக்கவிட்டால் முத்து பிறந்திருக்காது' என்றாள் சற்று குறுகிய புன்னகையுடன்.

வீடு திருப்பிய பின் மாலை நேரத்தில் அந்தி வானத்தை பார்த்தபடியே கிணற்றின் மேல் உட்கார்ந்திருந்தாள். அந்த சிப்பியை எடுத்து உதடுகளுக்கிடையே வைத்து கொண்டு முந்தைய நாள் மாலை பேசியதை எண்ணிக் கொண்டிருந்தாள்.

'போருக்கு செல்லும் நீங்கள் எதிரி நாட்டினரை நிலைகுலையச் செய்வீர்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் போர் எவ்வளவு காலம் நடக்குமோ? அவ்வளவு நாட்கள் உங்களை பிரிந்து எப்படி உயிர் வாழ்வேன்? உங்கள் நாட்டை காக்க புறப்படும் நீங்கள் உங்கள் உலகை காக்க என்று திரும்பி வருவீரோ!'

'நித்திலா! என் வாள் சுழலும் வேகம் தீர்மானிக்கும் உன்னை மீண்டும் நான் காணும் காலத்தை. என் மனம் முழுவதும் உன் நினைவு தான் நிறைந்துள்ளது.'

'நீங்கள் என்னைவிட நாட்டை தான் அதிகம் நேசிக்கிறீர்கள் போலும். பின்னர் எப்படி உங்கள் மனது முழுவதும் நான் இருப்பேன். நாடு நிரம்பியபின் சிறு மிச்சத்தில் தான் நான் உள்ளேன்.'

'உன் வருங்கால துணைவனை அனைவரும் வீரமற்றவன் என கூற வேண்டுமா நித்திலா. உன்னை சில காலம் பிரிவதினால் நமக்கிடையே உள்ள அன்பு அணுவளவும் குறையாது என் அழகே.'

'என் அன்பு குறையாது ஆயுளுக்கும். உங்கள் அன்பு குறைந்துவிடுமோ என்ற பயம் தான்'

'என் அன்பு குறைந்து விடும் என்று பயமா? என் ஆயுள் குறைந்துவிடும் என்ற பயமா?'

'உங்கள் வீரத்தின் மேல் பயமில்லை.'

'அப்படியென்றால் என் அன்பின் மீது தான் பயமா?'

'இல்லை.பிரிவின்மீது தான் பயம்.'

'பிரிவு நிரந்தரம் இல்லை நித்திலா. நம்பிக்கையுடன் என்னை வழியனுப்பு. வாளை கீழே வைத்த பின் என் கை முதலில் உன் கையை தான் பிடிக்கும்.

'உங்களை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைக்கும் மன நிலையில் நான் இல்லை. நான் வருகிறேன்.'


                                                                                                                                   -(வருவேன்)

செவ்வாய், ஏப்ரல் 14, 2015

அதிகாரம் : அதிசயம்

1) நமக்கு கிடைத்தது மட்டும் ஆயிரத்து
    முன்னூற்று முப்பது பாக்கள்.

2) இவரையும் குறளையும் வாழ்த்த புலவர்பலர்
    இயற்றினர் திருவள்ளுவ மாலை.

3) தமிழில் உலகை எழுதினாலும் தமிழை
    எழுத வில்லை எங்கும்.

4) அ'வில் ஆரம்பித்து ன்'ல் முடித்து
    தமிழ் நீலகலம் அளந்தார்.

5)  ஐந்து குறளில் பேசினார் உதடுகளுக்கு
    இடையில் உரசல் இல்லாமல்.

6) நூற்றி நாற்ப்பதை தாண்ட வில்லையெந்த
    குறளும் டிவிட்டர் போல.

7) ஒரு நாட்டையோ மொழியையோ கூறாமல்
    உலகபொது மறையாக்கி தந்தார்.

8)  சண்டை போடுவது முதல் சமையல்வரை
     கற்றுதந்த சகலகலா வள்ளுவர்.

9) இரண்டடி ஏழு சீர் பத்து குறள்
    என் கட்டமைத்த வல்லுனர்.

10) அதிகாரமாக சொன்னாலும் அதிகாரமாய் சொல்லாமல்
     அன்பாக சொல்லிய அறிஞரவர்.

மட்காத தமிழ் நாள்காட்டி

பஞ்சாங்கம்-பஞ்ச்(ஐந்து)+அங்கம்
அந்த ஐந்து அங்கங்களாவன
1) கிழமை
2) திதி
3) நட்சத்திரம்
4) யோகம்
5) கரணம்

கிழமை
ஒரு சூரிய உதயத்திற்க்கும் அடுத்த சூரிய உதயத்திற்க்கும் இடைப்பட்ட காலம். இது முழுவதும் சூரியனை மட்டுமே வைத்து கணக்கிடப்படுவது. ஆங்கில காலாண்டர் போல இரவு 12 மணிக்கு புதிய கிழமை பிறப்பதில்லை. 365நாளுக்கும் சூரிய உதயம் கண்க்கிடப்பட்டிருக்கும். அதன்படி அந்த சூரிய உதயத்தில் தான் புதிய கிழமை பிறப்பதாக அர்த்தம்.

திதி

திதி முழுவதும் சந்திரனின் நிலையை வைத்து கணக்கிடப்படுகிறது(ஆங்கில காலாண்டர் சந்திரனை கண் எடுத்து பார்ப்பதில்லை) மொத்தம் 30 திதிகள் உள்ளன. சந்திரன் ஒரு முறை பூமியை சுற்றிவர 27 நாட்கள் எடுத்து கொள்கின்றன. ஒவ்வொரு திதியும் 19 முதல் 26 மணிநேரம் கொண்டிருக்கும். நிலவு சுற்றும் ஒவ்வொரு 12 டிகிரிக்கும் ஒரு திதி வரும். மேலும் வளர்பிறைக்கு 15 திதிகளும் தேய்பிறைக்கு அடுத்த 15 திதிகளும் வரும்.

நட்சத்திரம்
27 நட்சத்திரம் என நாம் அனைவரும் அறிந்ததே. நிலவின் ஒரு முழு சுழற்சிக்கு இந்த 27 நட்சத்திரங்களும் வரும். 13டிகிரி சுழற்சிக்கு ஒரு நட்சத்திரம்.

கரணம்
இது சூரியனையும் சந்திரனையும் சாந்தது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையேயான கோணம் 6டிகிரி அதிகமாக எடுத்துக்கொள்ளும் காலம். எனவே ஒரு திதியில் 2 கரணம் வரும். மொத்தம் 11 கரணங்கள் உள்ளன.

யோகம்
கரணம் சூரியன் நிலையாகவும் சந்திரன் அதனை சுற்றுவதாகவும் கொண்டு கணக்கிடப்படுவது.
ஆனால் யோகமோ சூரியனும் நிலவும் ஒரு ஒப்புமை இயக்கத்தில்(Reative motion) உள்ளதாக கொண்டு இரண்டும் மொத்தமாக 13டிகிரி 20நிமிடம்(நிமிடம் அளவு துல்லியமாக கணித்துள்ளார்கள்.) சுழல எடுத்துக் கொள்ள ஆகும் காலம். மொத்தம் 27 யோகங்கள் உள்ளன.

கணிணி, கால்குலேட்டர் கூட அல்ல... எளிதில் கணக்கிட்டு பார்க்க காகிதம் கூட இல்லாத காலத்திலேயே இவ்வளவு கணக்கு வழக்கு போட்டு பார்த்த முன்னோர்களை நினைத்தாலே வியப்பு தான்...

இன்று என்ன தேதி என்பதையே செல்பேசி எடுத்து பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது இன்றைய தலைமுறைக்கு..

ஞாயிறு, மார்ச் 08, 2015

தம் இதழ் மொழி = தமிழ் மொழி.

  • மனிதன் முதன் முதலில் தன் இதழ் திறந்து பேசிய மொழி நம் தமிழ் மொழி தானாம். அதனால் தான் 'தம் இதழ் மொழி' எனப் பெயரிட்டான். கால வெள்ளத்தில் மூழ்கிய சில எழுத்துக்களால் இன்று 'தமிழ்' என்று தலை நிமிர்ந்து நிற்க்கிறது.

  • பரிணாம வளர்ச்சியின் ஆரம்பத்தில் மனிதன் பெரும்பாலும் ஆற்றுப் பகுதிக்கு அருகே தான் வசித்து வந்தான். காரணம் தேவையான நீர், வேளாண்மை மற்றும் தண்ணீர் குடிக்க வரும் மிருகங்களை வேட்டையாட. ஆனால் மழைக்காலங்களில் ஆற்றுக்கு அருகில் வசிக்க முடியாது என்பதால் ஆற்றை விட்டு சற்று நகர்ந்து குடில்களை அமைப்பார்கள். இவ்வாறு 'ஊர்ந்து' கொண்டே இருப்பதால் 'ஊர்' எனப் பெயரிட்டான். அதே நேரத்தில் வளர்ச்சியடந்த சில பகுதிகள் 'நகர்ந்து' தொலைவில் சென்றுவிட்டன. அதனால் 'நகர்' என பெயரிட்டான். (ஊர்தல்- அங்கும் இங்க்கும் செல்லுதல், நகர்தல்-தொலைவிற்கு செல்லுதல்)

  • 'பேரன், பேத்தி' என்று தவறாகவே அழைக்கின்றனர் கொஞ்சம் தமிழ் பேசும் நம் தாத்தா, பாட்டிகளும். ஆம், மேலை நாடுகளில் தன் குழந்தைக்கு பெற்றோரின் முதல் பெயரே கடைசியாக சேர்க்கப்படும்(Last name). ஆனால் நம் கலாச்சாரத்தில் அப்படி இல்லை(இனிசியல் மட்டும் தான், தமிழன் தன் தந்தையின் பெயரை முன்னே வைத்தான். பின்னே வைக்கவில்லை)
     ஆனால் தங்கள் குழ்ந்தைக்கு தன் பெற்றோரின் பெயரை வைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. எனவே தன் பெயரை கொண்டவன்(ள்) என்னும் வகையில் 'பெயரன், பெயர்த்தி' என அழைக்கப்பட்டனர் முன் ஒரு காலத்தில்.

  • கணி(கணக்கிடு)+பொறி(இயந்திரம்)

  • புற்றுநோய்- எறும்பு புற்றை போல் தேவையில்லாத திசுக்களை இந்நோய் ஏற்படுத்தும் ஆதலால்.

  • உள்+அகம்=உலகம் (பிரபஞ்சத்தின் உள் பகுதி)

  • சுடர்(ஒளி பொருந்திய பொருள்) - இதுவே பின்னர் ஆங்கிலத்தில் 'ஸ்டார்' என்னும் சொல்லுக்கு வேர்ச்சொல்லாய் அமைந்தது.

  • ஆரத்தீ(ஆரம்+தீ) - வட்டமாக(ஆரம்) தீயை(கற்பூரம்) சுற்றுவது.

  • சீர் - சீர் செய்தல்(நல்ல நிலமைக்கு கொண்டுவருதல்) சீரகம்- அகததை(உள் உறுப்புகளை) சீர் செய்வதால்

கதை(அல்ல நிஜம்) - பல வலை தளங்கள்.
திரைக்கதை               - உதய குமாரன்

திங்கள், மார்ச் 02, 2015

குறுக்கு வழிகள்...!

அலை என்னும் சிறகால்
பறக்க துடிக்கும் கடல்...

ஆதவனையும் அடக்கிவிட்ட இறுமாப்பில்
நிமிர்ந்து நிற்க்கும் மலை...

பசுமையான நினைவுகளை என்றும்
அசைபோட்டு கொண்டிருக்கும் காடு...

சொர்க்கத்திற்கு செல்லும் குறுக்கு வழிகள்...!

புதன், ஜனவரி 21, 2015

சற்றுச்சூழல்

ஆம்...
சற்று தான் சூழ்ந்துள்ளது
சுற்றுச்சூழல்...

நம்மைச் சுற்றிச் சூழ்ந்த சுற்றுச்சூழல்
இன்று தொலைவில் தனியாய் சுருண்டு கிடக்கின்றதே....

அறிவை கொஞ்சம் வளர்த்ததில்
பசுமையும் மங்கலாய் தெரிகின்றதே...

கடவுளின் இரு கை இயற்றிய இயற்க்கையை
மனிதனின் செயற்க்கை சிதைக்கின்றதே....

சிறு அணுவிலிருந்து ஆயிரம் ஆற்றல்
எடுக்கத் தெரிந்த மனிதா...
சிறு விதையிலிருந்து ஆயிரம் காய் கனி மலர்களை
எடுக்கத் தெரியுமோ???

நம் விஞ்ஞான விரல் தீண்டியதில்
பனியும் நாணத்தில் உருகுகி
கடலுடன் கள்ளத் தொடர்பு கொள்கிறது...
பாவம் பனிக்கரடி...
பனியின்றி தனியாய் தவிக்கிறது...

10000 மைல்களுக்கு அப்பால் உருகும் பனிக்கட்டி
என் வீட்டு வாசலை நனைக்காது
என்ற மெத்தனம் சில ஆண்டுகள் வேண்டுமானால் பலிக்கலாம்.
...

வேலி பயிரை மேய்ந்தால் கூட பரவாயில்லை...
இங்கு பயிரே வேலியை மேய்கின்றதே...
ஓசோன்!!!

பருவம் மாறிய பருவநிலை
உருவம் மாறிய நீர்நிலை
தண்ணீருக்கும் விலை பெற்று தந்தது....

பாலிஎத்திலீன் பையை கண்டுபிடித்த
பாவிப்பையனை தேடுகின்றேன்...
மஞ்சப்பை என்றாலே நாகரீகமில்லாதவன் என
படம் வர அவனே முன்னோடி....

அனாதையாக குழந்தை வாழலாம்
ஆனால்
தனியாக மனிதால் வாழ முடியாது.
..

தமிழும், சுற்றுச்சூழலும் வெறும் தேர்ச்சி பெற தான்...
கணிதமும், அறிவியலும் தான்
மதிப்பை(¡) தரும் மதிப்பெண் பெற
என்றிருக்கும் கல்வி இருக்கும் வரை
பெயரவில் தொடரும்
சுற்றுச்சூழல் தினம் :-( :-( :-(

ஞாயிறு, ஜூலை 20, 2014

உயிரே... உயிலே...



இம் மெய்யில்
இறைவன் எழுதிய உயிர் எழுத்து...
இரு சுருளில்
எனக்காக எழுதிய உயில் எழுத்து...
அம்மா போல் நிறம்
அப்பா போல் மூக்கு
தாத்தா போல் கோபம்
பாட்டி போல் அறிவு...
என என் பயோடேட்டாவில்
பாதியை அச்சடித்த அமிலம்...
இறக்க போகும் தந்தை எழுதும் உயில் அல்ல இது...
பிறக்க போகும் குழந்தைக்கு எழுதப்படும் உயில் இது...
DNA



எத்தனை முகங்கள், எத்தனை நிறங்கள், எத்தனை குணங்கள்...
எப்படி இவ்வளவு வித்தியாசங்கள்??? இந்த சிறு உடலில்...
ஒரே ஒரு இரு சுருள் டி.என்.ஏ தான் இது எல்லாற்றிற்க்கும் காரணம் என்னும் போது முற்றுப்புள்ளி இடமுடியாத ஆச்சர்யகுறியாய் தான் உள்ளது.
வெறும் 4 எழுத்துக்கள்(நியுக்ளியோடைடு) கொண்டு இவ்வளவு பில்லியன் கவிதைகள்(மக்கள்) எழுதியுள்ளான் அவன்!!!

அடினைன்(A)
சைட்டோசின்(
C)
குவானைன்(G)
தையமின்(T)

இந்த நான்கெழுத்து கவிதை தான் நான் அனைவரும்.
ஒவ்வொரு நியூக்ளியோடைடும் ஒரு முனையில் பாஸ்பேட்டையும், மறுமுனையில் சுகரையும் கொண்டிருக்கும்.
இரு நியூக்ளியோடைடுகள் இணையும் போது சுகர், பாஸ்பேட்டுடனும் : பாஸ்பேட் சுகருடனும் இணைகிறது.
இவ்வாறு தொடர்ச்சியாக இந்த நான்கு நியுக்ளியோடைடுகள் மாறி மாறி இணைவாதல் பலவித அமைப்புகள்(Pattern) தோன்றுகின்றன.

(இடையில் ஜீன், குரோமோசோம் போன்ற வார்த்தைகள் உங்களை இடைமறித்திருக்கலாம். குரோமோசோமின் ஒரு சிறு துண்டு ஜீன், டி.என்.ஏவின் ஒரு சிறு துண்டு குரோமோசோம்)

முக மற்றும் உடல் அமைப்பை புரதங்கள் தான் உருவாக்குகிறது.இந்த புரதங்கள் உருவாகுவதை டி.என்.ஏ தான் தீர்மானிக்கிறது. இந்த டி.என்.ஏ அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு புதிய தலைமுறையிலும் அந்த பண்புகள் அந்த டி.என்.ஏவால் தொடரப்படுகின்றன.


எவ்வாறு கடத்தப்படுகிறது?
‘மியோசிஸ் எனப்படும் நிகழ்ச்சி மூலம் நம் உடலில் உள்ள அனைத்து அசல் டி.என்.ஏக்களும் நகலெடுக்கப்படுகின்றன. இந்த நகல் இனப்பெருக்க செல்லை அடைந்து அடுத்த தலைமுறைக்கு கடப்படுகின்றன.
ஆக புரோட்டினை உருவாக்குவது மட்டுந்தான் டி.என்.ஏவின் வேலை.

புரோட்டினின் வகைகள்:
1) கட்டமைப்பு புரோட்டின் : மூளை முதல் நகம் வரை உருவாக்குவது இதன் பணி
2) கடத்தும் புரோட்டின் : உடலின் பல பகுதிகளுக்கு தேவையான பொருட்களை கடத்துகிறது(எ.கா: ஹிமோகுளோபின்)
3) சேமிப்பு புரோட்டின் : ஆற்றல் மற்றும் உயிர்சத்துக்களை சேமிக்க (எ.கா கல்லீரல்)
4) ஹார்மோன் : நம் உடலில் அனைத்து ஹார்மோங்களும் ஒரு வகையில் புரோட்டிங்களே.

டி.என்.ஏ நான்கு எழுத்து என்பது போல, புரதம் 20 எழுத்துக்கள்(அமினோ அமிலங்கள்).
இந்த 20 அமினோஅமிலங்கள் பல்வேறு முறைகளில் இணைந்து மேற்கண்ட புரோட்டின்களை உருவாக்குகிறது.
புரோட்டினை உருவாக்க பிறப்பிக்கபடும் ஆணையில் டி.என்.ஏவின் ஏதேனும் 3 நீயுக்ளியோடைடுகள் தான் இருக்கும்( ACG, ACT, TTG….) எனவே 4*4*4 என 64 வகையான ஆணைகளை பிறப்பிக்க முடியும்.

ஒரு புரோட்டின் உருவாக்க இது போல்100 முதல் 1000 ஆணைகள் வரை தேவைப்படும். இவ்வாறு 3 எழுத்து ஆணைகள் பல்வேறு வரிசைகளில் அடுக்கப்படும் போது (1000 * 1000 * 1000)^64 வகையான புரதங்கள் உருவாகின்றன.


உங்கள் டி.என்.ஏவிலும் சில நல்ல விஷயங்களை இணைத்துக் கொள்ளுங்கள். அடுத்த தலைமுறைக்கு அது அப்படியே கடத்தப்படலாம்...









விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...