சனி, ஏப்ரல் 02, 2016

WAR & LOVE





போருக்கும், காதலுக்கும் சிறுதுளி தான் வித்தியாசம்.

தனக்காக பிறரை அழிப்பது - போர்
பிறருக்காக தன்னையே அழிப்பது - காதல்

வெளியே காட்டும் வீரம் - போர்
மறைத்து வைக்கும் வீரம் - காதல்

எதிரியை வெல்லும் தந்திரம் - போர்
தன்னையே தோற்கடிக்கும் மந்திரம் - காதல்

வரலாற்றுக்கரையில் போரைப் போலவே
காதலும் ஆழமாக கால் பதித்து சென்றுள்ளது.
சில இடங்களில் இரண்டும் ஒரே இடத்தில் ஆழம்
பார்த்து சென்றுள்ளது.

தடம்-1

அக்பர்- தாஜ்மஹால் தலைமுறையின் முன்னோடி.
அனார்கிளி என்ற அழகியின் மேல் அளவில்லா காதல்
அக்பரின் மகன் சலீம்க்கு. இதை விரும்பாத அக்பர் அவர்களின்
காதலுக்கு சிகப்பு கொடி காட்ட, வெள்ளை கொடி காட்டாமல்
துணிந்து போருக்கு தயாரானார் சலீம். பதவிக்காக அன்றி
தன் காதலுக்காக தன் அப்பாவிற்கு எதிராகவே போர் புரிந்தார்.
துரதிர்ஷ்டவசமாக தோல்வியடைந்தார். தோல்வியால்
விரக்தியடைந்த அனார்களி உயிருடன் கல்லறை புகுந்து
காதல் இறவாமல் உயிர் மட்டும் துறந்தார்.

தடம்-2

தன் எதிரி நாட்டு அரசனின் மகளான சயுக்தா மீது காதல் மூண்டது
பிரித்திவிராஜ் சவுக்கானுக்கு. சம்யுக்தாவின் சுயம்வரத்திற்கு அனைத்து
நாட்டு இளவரசர்களுக்கும் அழைப்பு விடுத்தார் அவளின் அப்பா.
பிரித்திவி மீது வெறுப்பு கொண்ட அவர், அவனுக்கும் மட்டும் அழைப்பு
அனுப்பவில்லை. மேலும் அவனை இழிவு படுத்தும் நோக்கில் அவன்
உருவசிலையை களிமண்ணில் செய்து அதனை வாயிற்காவலனாக
நிறுத்தி வைத்தார். சுயம்வரத்திற்கு வந்த அனைவரும் அதனை பார்த்து
சிரித்தபடி உள்ளே சென்றனர். தான் வென்றுவிட்டதாக உள்ளுக்குள் பூரித்துகொண்டார் சயுக்தா அப்பா.

சுயம்வரம் இனிதே ஆரம்பித்தது. மணமாலையுடன் வந்த சயுக்தா அனைத்து
நிஜ அரசர்களையும் தவிர்த்து சிலையான பிரித்திவிக்கு மாலை அணிவித்தாள். சிலைக்கு மாலையிட்ட சம்யுக்தாவின் கரங்களை பற்றிக் கொண்டு கவர்ந்து சென்றான். சினத்தில் தோல்வியில் முகம் வெளிறி நின்றார் பிரித்திவியின் மாமனார்.

தடம்-3

ராஜஸ்தானை ஒட்டிய தற்போது பாகிஸ்தானின் ஒரு சிறு பகுதியை
ஆட்சி செய்தவன் மகேந்திரா. ஒருநாள் வேட்டைக்கு செல்லும் போது
அவன் பார்த்து மயங்கிய தேவதை தான் மூமல். இருவருக்கும் இடையில்
இதயவேட்டையில் காதல் மலர்ந்தது.

இருப்பதிலேயே மிக வேகமாக பயணிக்கும் ஒட்டகத்தை தேர்வு செய்து
அதில் பயணித்து தினமும் இரவில் தன் காதலியை காண வருவார்.
மறுநாள் விடியும் அரண்மனை திரும்பிவிடுவார். ஒருநாள் இதை கண்டு
கொண்ட அவர் குடும்பத்தினர் அந்த ஒட்டகத்தின் கால்களை வெட்டினர்.
இதனால் மகேந்திரா அவளை சென்று காண முடியாது என்று நிம்மதி
அடைந்தனர்.

மனம் நொந்த அவர், தன் காதலியை காண வேண்டும் என்ற ஆர்வத்தை
தொலைக்கவில்லை.  வேறொரு ஒட்டகத்தை தயார் செய்தார். புதிய ஒட்டகம்
தவறுதலாக பாமீர் பக்கம் அழைத்து சென்றுவிட்டது. உச்சி இரவில் தான் வழி தவறியது அவருக்கு தெரிந்தது. வழியை திருத்தி காதலியின் ஊருக்கு
ஒட்டகத்தின் கால்கள் திரும்பின.

காதலன் வருவான் என்ற ஆசையில் தூக்கத்தை தூரம் வைத்து இரு விழிகள்
இணையாமல் காத்து கொண்டு இருந்தாள் மூமல். அவளின் வருத்ததை அறிந்த அவளின் சகோதரி காதலன் போல் ஆண்வேடம் தரித்து அவளை
மகிழ்விக்க நினைத்தாள். ஆனால் மூமல் சிறிதும் இயல்புநிலைக்கு திரும்பவில்லை. காதலனை காணாத ஏக்கமும், வருத்ததுமே நிறைத்திருந்தது அவளை. அப்படியே படுக்கைக்கு சென்றாள். அவள் சகோதரியும் அந்த ஆண் வேடத்தை கலைக்காமல் அவள் அருகில் படுத்தாள்.

பின் இரவில் காதலியை காண வந்து சேர்ந்த மகேந்திரா அதிர்ச்சியடைந்தார்.
தன் காதலியுடன் படுக்கையில் இன்னொரு ஆண் இருப்பதை கண்டு மனம் நொந்து அரண்மனை திரும்பினார்.

தன் காதலன் இரவு முழுதும் வராததால் கலக்கம் அடைந்த மூமல் அவர்
தன்னை மறந்துவிட்டதாக நினைத்து வருந்தினாள். விறகுகளால் சிதை மூட்டி அதில் பாய்ந்து தன் உயிரை எரித்தாள் அந்த இன்னொரு காதல் கண்ணகி.

காதலும் கடந்து போகும். அழியா தடமாக!                        

ஞாயிறு, செப்டம்பர் 27, 2015

ஈர மணலில்...

           ஆழ்ந்த அமைதியான உறக்கத்தில் இருந்த அந்த சிப்பியை, சுழன்று வந்த அலையொன்று தூக்கிக் கொண்டு கரையில் விட்டுச் சென்றது. சில நொடிகளில் வந்த மற்றொரு அலை அதை மேலும் சிறிது தூரம் தள்ளிச் சென்றுவிட்டது. கருப்பையிலிருந்து வெளியே தள்ளப்பட்ட குழந்தை போல அனாதையாய் கிடந்தது சிப்பி.




          சற்று தூரத்தில் மணல்வெளில் மணல்வீடு கட்டி விளையாடி கொண்டிருந்தனர் சிறுவர் சிலர். சிப்பியைக் கண்ட சிறுமியொருத்தி அதையெடுத்து மணல்வீட்டின் உச்சியில் வைத்து மகுடமாக்கினாள்.

             இருள்போர்வையை வானம் மெல்ல இழுத்து போர்த்த மணல்வீட்டை தரைமட்டமாக்கிய சிறுவர் கூட்டம் தங்கள் வீடுகளை நோக்கி ஓடினர்.
கடற்கரை மணலில் தள்ளாடியபடியே நடந்து வந்தான் ஒருவன். சிப்பியின் கூர்மையான பகுதி அவன் காலில் குத்திவிட, வலியில் துடித்தவன் வழியில் கிடந்த சிப்பியை தூக்கி தூரம் எறிந்தான் எரிச்சலுடன். கடலிடமிருந்து இன்னும் தூரம் சென்றது சிப்பி.
                     
                 காலை விடியலின் வெளிச்சத்தில் கடற்கரை அருகில் இருந்த அணிகலன் கடையை திறந்தான் கடைக்காரன்.அப்போது வாசலிலே கண்டான் அந்த சிப்பியை. சிறிய சேதம் கூட இல்லாத சிப்பியை கையில் எடுத்த அவன், எந்த சிற்பியின் கையும்படாமல் எவ்வளவு அழகாக செதுக்கப்படுள்ளது இந்த சிப்பி என வியந்தான். 

                   தினமும் முத்துக்கள், சிப்பி, சங்குகளுடன் தான் தொழில் செய்து வரும் அவனுக்கு இந்த சிப்பி தனியாய் தெரிந்தது. தான் தற்போது சிறப்பாய் செய்து வரும் முத்து மாலையுடன் அந்த சிப்பியை இணைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைத்தான். பெட்டகத்தினுள் வைத்திருந்த முத்துமாலையை எடுத்து சிப்பியுடன் வைத்து பார்த்தான். தாயுடன் சேய் இருக்கும்போது தான் அழகின் உச்சம் என நினைத்து கொண்டான்.பின்ப் அதனை அந்த மாலையுடன் கோர்க்க சிப்பியின் மேல் பகுதியில் சிறு துளையிட்டான். கூர்மையான பகுதிகளை சீர் செய்தான். பட்டை தீட்டிய வைரமாய் தோன்றியது. பின்பு மீண்டும் அந்த பெட்டகத்திற்குள் வைத்து மூடினான்.

                    உச்சிற்கு சென்ற கதிரவனின் வெட்கை தாங்க முடியாமல், நிழலும் அனைவரின் காலுக்கடியில் ஒளிந்து கொண்டது.அந்த மதிய நேரத்தில், அந்த கதிரவனினும் பொலிவாய் பெண்ணொருத்தி தோழிகளுடன் நடந்து வந்தாள். கடைவீதியின் இருபுறமும் இருந்த கடைகளில் அழகுசாதனபொருட்களையும்,அணிகலன்களையும் பார்த்தபடியும், ஒரு சிலவற்றை வாங்கி கொண்டும் வந்தனர் தோழிகள். நித்திலா மட்டும் எதையுமே கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. நேரான அதே நேரத்தில் சோகமான பார்வையுடன் கூட்டத்திற்க்கு நடுவில் தனிமையாக வந்து கொண்டிருந்தாள். அழகுசாதன பொருட்களிலையே கண்ணாக இருந்த தோழிகள் நித்திலாவை கண்டுகொள்ளவில்லை.


                      'பாவம் அவர் மனம் எவ்வளவு நொந்துபோயிருக்கும். வாளினால் உடலில் பல காயங்கள் வாங்கியவர், என் ஒற்றை வார்த்தையால் அவர் மனம் எவ்வளவு காயம் பட்டிருக்கும். சுவையை அறிய தெரியும் நாவிற்கு ஏன் அடுத்தவர் மனதை புரிந்து கொண்டு பேச தெரியவில்லை.' என தனக்குள்ளேயே தன்னைப் பற்றி கடுமையாக கோபித்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தாள்.


                      எல்லா பெண்களும் அந்த கடையில் நின்று பார்ர்துகொண்டிருந்தனர். நித்திலாவும் அவர்கள் பின்னா சென்று நின்றாள். பெண்கள் கூட்டத்தை கண்டதும் கடைக்காரன் இத்தனை நாள் சிரமப்பட்டு செய்துவந்த முத்துமாலையை திறந்து காண்பித்தான். எல்லா பெண்களும் மொத்தமாய் முகம் சுளித்தனர் 'முத்து மாலையில் சிப்பியா?'


அனைவரையும் விலக்கி கொண்டு முன்னால் சென்ற நித்திலா 'மிக அருமையாக உள்ளது. இதை நான் வாங்கி கொள்கிறேன்'

பின்பு தன் தோழி முகில்வாகினியிடம் இதை என் கழுத்தில் அணிவித்து விடு' என்றாள்
சிறிது தயக்கத்துடன் அணிவித்துவிட்டாள் அவள்.

'இந்த மாலையில் அப்படி என்ன அழகு இருக்கிறது. ஒரு வேளை சிப்பி இல்லையென்றால் அழகாய் இருந்திருக்கலாம்' என்றாள் இளசெந்தினி.

'இந்த சிப்பி இடம் அளிக்கவிட்டால் முத்து பிறந்திருக்காது' என்றாள் சற்று குறுகிய புன்னகையுடன்.

வீடு திருப்பிய பின் மாலை நேரத்தில் அந்தி வானத்தை பார்த்தபடியே கிணற்றின் மேல் உட்கார்ந்திருந்தாள். அந்த சிப்பியை எடுத்து உதடுகளுக்கிடையே வைத்து கொண்டு முந்தைய நாள் மாலை பேசியதை எண்ணிக் கொண்டிருந்தாள்.

'போருக்கு செல்லும் நீங்கள் எதிரி நாட்டினரை நிலைகுலையச் செய்வீர்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் போர் எவ்வளவு காலம் நடக்குமோ? அவ்வளவு நாட்கள் உங்களை பிரிந்து எப்படி உயிர் வாழ்வேன்? உங்கள் நாட்டை காக்க புறப்படும் நீங்கள் உங்கள் உலகை காக்க என்று திரும்பி வருவீரோ!'

'நித்திலா! என் வாள் சுழலும் வேகம் தீர்மானிக்கும் உன்னை மீண்டும் நான் காணும் காலத்தை. என் மனம் முழுவதும் உன் நினைவு தான் நிறைந்துள்ளது.'

'நீங்கள் என்னைவிட நாட்டை தான் அதிகம் நேசிக்கிறீர்கள் போலும். பின்னர் எப்படி உங்கள் மனது முழுவதும் நான் இருப்பேன். நாடு நிரம்பியபின் சிறு மிச்சத்தில் தான் நான் உள்ளேன்.'

'உன் வருங்கால துணைவனை அனைவரும் வீரமற்றவன் என கூற வேண்டுமா நித்திலா. உன்னை சில காலம் பிரிவதினால் நமக்கிடையே உள்ள அன்பு அணுவளவும் குறையாது என் அழகே.'

'என் அன்பு குறையாது ஆயுளுக்கும். உங்கள் அன்பு குறைந்துவிடுமோ என்ற பயம் தான்'

'என் அன்பு குறைந்து விடும் என்று பயமா? என் ஆயுள் குறைந்துவிடும் என்ற பயமா?'

'உங்கள் வீரத்தின் மேல் பயமில்லை.'

'அப்படியென்றால் என் அன்பின் மீது தான் பயமா?'

'இல்லை.பிரிவின்மீது தான் பயம்.'

'பிரிவு நிரந்தரம் இல்லை நித்திலா. நம்பிக்கையுடன் என்னை வழியனுப்பு. வாளை கீழே வைத்த பின் என் கை முதலில் உன் கையை தான் பிடிக்கும்.

'உங்களை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைக்கும் மன நிலையில் நான் இல்லை. நான் வருகிறேன்.'


                                                                                                                                   -(வருவேன்)

செவ்வாய், ஏப்ரல் 14, 2015

அதிகாரம் : அதிசயம்

1) நமக்கு கிடைத்தது மட்டும் ஆயிரத்து
    முன்னூற்று முப்பது பாக்கள்.

2) இவரையும் குறளையும் வாழ்த்த புலவர்பலர்
    இயற்றினர் திருவள்ளுவ மாலை.

3) தமிழில் உலகை எழுதினாலும் தமிழை
    எழுத வில்லை எங்கும்.

4) அ'வில் ஆரம்பித்து ன்'ல் முடித்து
    தமிழ் நீலகலம் அளந்தார்.

5)  ஐந்து குறளில் பேசினார் உதடுகளுக்கு
    இடையில் உரசல் இல்லாமல்.

6) நூற்றி நாற்ப்பதை தாண்ட வில்லையெந்த
    குறளும் டிவிட்டர் போல.

7) ஒரு நாட்டையோ மொழியையோ கூறாமல்
    உலகபொது மறையாக்கி தந்தார்.

8)  சண்டை போடுவது முதல் சமையல்வரை
     கற்றுதந்த சகலகலா வள்ளுவர்.

9) இரண்டடி ஏழு சீர் பத்து குறள்
    என் கட்டமைத்த வல்லுனர்.

10) அதிகாரமாக சொன்னாலும் அதிகாரமாய் சொல்லாமல்
     அன்பாக சொல்லிய அறிஞரவர்.

மட்காத தமிழ் நாள்காட்டி

பஞ்சாங்கம்-பஞ்ச்(ஐந்து)+அங்கம்
அந்த ஐந்து அங்கங்களாவன
1) கிழமை
2) திதி
3) நட்சத்திரம்
4) யோகம்
5) கரணம்

கிழமை
ஒரு சூரிய உதயத்திற்க்கும் அடுத்த சூரிய உதயத்திற்க்கும் இடைப்பட்ட காலம். இது முழுவதும் சூரியனை மட்டுமே வைத்து கணக்கிடப்படுவது. ஆங்கில காலாண்டர் போல இரவு 12 மணிக்கு புதிய கிழமை பிறப்பதில்லை. 365நாளுக்கும் சூரிய உதயம் கண்க்கிடப்பட்டிருக்கும். அதன்படி அந்த சூரிய உதயத்தில் தான் புதிய கிழமை பிறப்பதாக அர்த்தம்.

திதி

திதி முழுவதும் சந்திரனின் நிலையை வைத்து கணக்கிடப்படுகிறது(ஆங்கில காலாண்டர் சந்திரனை கண் எடுத்து பார்ப்பதில்லை) மொத்தம் 30 திதிகள் உள்ளன. சந்திரன் ஒரு முறை பூமியை சுற்றிவர 27 நாட்கள் எடுத்து கொள்கின்றன. ஒவ்வொரு திதியும் 19 முதல் 26 மணிநேரம் கொண்டிருக்கும். நிலவு சுற்றும் ஒவ்வொரு 12 டிகிரிக்கும் ஒரு திதி வரும். மேலும் வளர்பிறைக்கு 15 திதிகளும் தேய்பிறைக்கு அடுத்த 15 திதிகளும் வரும்.

நட்சத்திரம்
27 நட்சத்திரம் என நாம் அனைவரும் அறிந்ததே. நிலவின் ஒரு முழு சுழற்சிக்கு இந்த 27 நட்சத்திரங்களும் வரும். 13டிகிரி சுழற்சிக்கு ஒரு நட்சத்திரம்.

கரணம்
இது சூரியனையும் சந்திரனையும் சாந்தது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையேயான கோணம் 6டிகிரி அதிகமாக எடுத்துக்கொள்ளும் காலம். எனவே ஒரு திதியில் 2 கரணம் வரும். மொத்தம் 11 கரணங்கள் உள்ளன.

யோகம்
கரணம் சூரியன் நிலையாகவும் சந்திரன் அதனை சுற்றுவதாகவும் கொண்டு கணக்கிடப்படுவது.
ஆனால் யோகமோ சூரியனும் நிலவும் ஒரு ஒப்புமை இயக்கத்தில்(Reative motion) உள்ளதாக கொண்டு இரண்டும் மொத்தமாக 13டிகிரி 20நிமிடம்(நிமிடம் அளவு துல்லியமாக கணித்துள்ளார்கள்.) சுழல எடுத்துக் கொள்ள ஆகும் காலம். மொத்தம் 27 யோகங்கள் உள்ளன.

கணிணி, கால்குலேட்டர் கூட அல்ல... எளிதில் கணக்கிட்டு பார்க்க காகிதம் கூட இல்லாத காலத்திலேயே இவ்வளவு கணக்கு வழக்கு போட்டு பார்த்த முன்னோர்களை நினைத்தாலே வியப்பு தான்...

இன்று என்ன தேதி என்பதையே செல்பேசி எடுத்து பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது இன்றைய தலைமுறைக்கு..

ஞாயிறு, மார்ச் 08, 2015

தம் இதழ் மொழி = தமிழ் மொழி.

  • மனிதன் முதன் முதலில் தன் இதழ் திறந்து பேசிய மொழி நம் தமிழ் மொழி தானாம். அதனால் தான் 'தம் இதழ் மொழி' எனப் பெயரிட்டான். கால வெள்ளத்தில் மூழ்கிய சில எழுத்துக்களால் இன்று 'தமிழ்' என்று தலை நிமிர்ந்து நிற்க்கிறது.

  • பரிணாம வளர்ச்சியின் ஆரம்பத்தில் மனிதன் பெரும்பாலும் ஆற்றுப் பகுதிக்கு அருகே தான் வசித்து வந்தான். காரணம் தேவையான நீர், வேளாண்மை மற்றும் தண்ணீர் குடிக்க வரும் மிருகங்களை வேட்டையாட. ஆனால் மழைக்காலங்களில் ஆற்றுக்கு அருகில் வசிக்க முடியாது என்பதால் ஆற்றை விட்டு சற்று நகர்ந்து குடில்களை அமைப்பார்கள். இவ்வாறு 'ஊர்ந்து' கொண்டே இருப்பதால் 'ஊர்' எனப் பெயரிட்டான். அதே நேரத்தில் வளர்ச்சியடந்த சில பகுதிகள் 'நகர்ந்து' தொலைவில் சென்றுவிட்டன. அதனால் 'நகர்' என பெயரிட்டான். (ஊர்தல்- அங்கும் இங்க்கும் செல்லுதல், நகர்தல்-தொலைவிற்கு செல்லுதல்)

  • 'பேரன், பேத்தி' என்று தவறாகவே அழைக்கின்றனர் கொஞ்சம் தமிழ் பேசும் நம் தாத்தா, பாட்டிகளும். ஆம், மேலை நாடுகளில் தன் குழந்தைக்கு பெற்றோரின் முதல் பெயரே கடைசியாக சேர்க்கப்படும்(Last name). ஆனால் நம் கலாச்சாரத்தில் அப்படி இல்லை(இனிசியல் மட்டும் தான், தமிழன் தன் தந்தையின் பெயரை முன்னே வைத்தான். பின்னே வைக்கவில்லை)
     ஆனால் தங்கள் குழ்ந்தைக்கு தன் பெற்றோரின் பெயரை வைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. எனவே தன் பெயரை கொண்டவன்(ள்) என்னும் வகையில் 'பெயரன், பெயர்த்தி' என அழைக்கப்பட்டனர் முன் ஒரு காலத்தில்.

  • கணி(கணக்கிடு)+பொறி(இயந்திரம்)

  • புற்றுநோய்- எறும்பு புற்றை போல் தேவையில்லாத திசுக்களை இந்நோய் ஏற்படுத்தும் ஆதலால்.

  • உள்+அகம்=உலகம் (பிரபஞ்சத்தின் உள் பகுதி)

  • சுடர்(ஒளி பொருந்திய பொருள்) - இதுவே பின்னர் ஆங்கிலத்தில் 'ஸ்டார்' என்னும் சொல்லுக்கு வேர்ச்சொல்லாய் அமைந்தது.

  • ஆரத்தீ(ஆரம்+தீ) - வட்டமாக(ஆரம்) தீயை(கற்பூரம்) சுற்றுவது.

  • சீர் - சீர் செய்தல்(நல்ல நிலமைக்கு கொண்டுவருதல்) சீரகம்- அகததை(உள் உறுப்புகளை) சீர் செய்வதால்

கதை(அல்ல நிஜம்) - பல வலை தளங்கள்.
திரைக்கதை               - உதய குமாரன்

திங்கள், மார்ச் 02, 2015

குறுக்கு வழிகள்...!

அலை என்னும் சிறகால்
பறக்க துடிக்கும் கடல்...

ஆதவனையும் அடக்கிவிட்ட இறுமாப்பில்
நிமிர்ந்து நிற்க்கும் மலை...

பசுமையான நினைவுகளை என்றும்
அசைபோட்டு கொண்டிருக்கும் காடு...

சொர்க்கத்திற்கு செல்லும் குறுக்கு வழிகள்...!

புதன், ஜனவரி 21, 2015

சற்றுச்சூழல்

ஆம்...
சற்று தான் சூழ்ந்துள்ளது
சுற்றுச்சூழல்...

நம்மைச் சுற்றிச் சூழ்ந்த சுற்றுச்சூழல்
இன்று தொலைவில் தனியாய் சுருண்டு கிடக்கின்றதே....

அறிவை கொஞ்சம் வளர்த்ததில்
பசுமையும் மங்கலாய் தெரிகின்றதே...

கடவுளின் இரு கை இயற்றிய இயற்க்கையை
மனிதனின் செயற்க்கை சிதைக்கின்றதே....

சிறு அணுவிலிருந்து ஆயிரம் ஆற்றல்
எடுக்கத் தெரிந்த மனிதா...
சிறு விதையிலிருந்து ஆயிரம் காய் கனி மலர்களை
எடுக்கத் தெரியுமோ???

நம் விஞ்ஞான விரல் தீண்டியதில்
பனியும் நாணத்தில் உருகுகி
கடலுடன் கள்ளத் தொடர்பு கொள்கிறது...
பாவம் பனிக்கரடி...
பனியின்றி தனியாய் தவிக்கிறது...

10000 மைல்களுக்கு அப்பால் உருகும் பனிக்கட்டி
என் வீட்டு வாசலை நனைக்காது
என்ற மெத்தனம் சில ஆண்டுகள் வேண்டுமானால் பலிக்கலாம்.
...

வேலி பயிரை மேய்ந்தால் கூட பரவாயில்லை...
இங்கு பயிரே வேலியை மேய்கின்றதே...
ஓசோன்!!!

பருவம் மாறிய பருவநிலை
உருவம் மாறிய நீர்நிலை
தண்ணீருக்கும் விலை பெற்று தந்தது....

பாலிஎத்திலீன் பையை கண்டுபிடித்த
பாவிப்பையனை தேடுகின்றேன்...
மஞ்சப்பை என்றாலே நாகரீகமில்லாதவன் என
படம் வர அவனே முன்னோடி....

அனாதையாக குழந்தை வாழலாம்
ஆனால்
தனியாக மனிதால் வாழ முடியாது.
..

தமிழும், சுற்றுச்சூழலும் வெறும் தேர்ச்சி பெற தான்...
கணிதமும், அறிவியலும் தான்
மதிப்பை(¡) தரும் மதிப்பெண் பெற
என்றிருக்கும் கல்வி இருக்கும் வரை
பெயரவில் தொடரும்
சுற்றுச்சூழல் தினம் :-( :-( :-(

விடியல் தரப் போராளே!!!

 அன்று தான் அவனுக்கு தெரிந்தது. நள்ளிரவிற்கு பின் வரும் அதிகாலை எவ்வளவு அழகானது என்று. 4:30 க்கு வைத்த அலாரம் அடிக்க இன்னும் எட்டு நிமிடங்கள...